இன்று நடக்க இருந்த பா.ம.க., போராட்டம் ஒத்திவைப்பு
சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: சென்னையில் கன மழை காரணமாக, கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை விடப் பட்டுள்ளது. இதேபோல், மழையில் போராட்டம் நடத்துவது மிகவும் சிரமம் என்பதால், தேர்தல் கமிஷனிடம் நீதி கேட்டு சென்னை கலெக்டர் அலுவலகம் முன் இன்று நடக்க இருந்த பா.ம.க., போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.