உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் காலத்தில் ஒரு வேடம், மற்ற நேரத்தில் ஒரு வேடம்; ரூ.1000 தராமல் ஏமாற்றுவதா: ராமதாஸ் கேள்வி

தேர்தல் காலத்தில் ஒரு வேடம், மற்ற நேரத்தில் ஒரு வேடம்; ரூ.1000 தராமல் ஏமாற்றுவதா: ராமதாஸ் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 எங்கே? தேர்தல் காலத்தில் ஒரு வேடம், மற்ற நேரத்தில் இன்னொரு வேடமா? மக்களை ஏமாற்றக் கூடாது என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9un8qxb0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வரும் 2025ம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஒரு கிலோ அரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் ஒரு முழுக் கரும்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க., ஆட்சியில் கடந்த இரு ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 இந்த முறை காணாமல் போயிருக்கிறது. மக்களை ஏமாற்றும் வகையிலான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.கடந்த 2009ம் ஆண்டு முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 2019ம் ஆண்டு முதல் அத்துடன் ரூ.1000 முதல் ரூ.2500 வரை பணமும் சேர்த்து வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.1000 பணம் நிறுத்தப்பட்டதுடன், பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லம், பருப்பு வகைகள், கோதுமை, உப்பு உள்ளிட்ட 21 பொருள்கள் வழங்கப்பட்டன. அவை தரம் குறைந்தவையாக இருந்ததாகவும், அவற்றின் கொள்முதலில் ஊழல் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் அந்தப் பொருட்களுக்குப் பதிலாக மீண்டும் ரூ.1000 வழங்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் ரூ.1000 நிறுத்தப்பட்டிருக்கிறது. இது சரியல்ல. நடப்பு 2024ம் ஆண்டில் தேர்தல் வந்ததால் அந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் ரூ.1000 பணம் கொடுத்த தமிழக அரசு, 2025ம் ஆண்டில் தேர்தல் இல்லை என்பதால் பணம் வழங்கவில்லை என்று தெரிகிறது. 2026ம் ஆண்டு தான் தேர்தல் வரும் என்பதால் அப்போது ரூ.1000 வழங்கி மக்களை ஏமாற்றி விடலாம் என்று தமிழக அரசு நினைக்கிறது. இது மக்களை முட்டாள்களாக்கும் செயல். நிதி நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பன போன்ற காரணங்களைக் கூறி மக்களுக்கான உரிமைகளை அரசு மறுக்கக்கூடாது. மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதியை போராடியோ, நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தோ பெற வேண்டிய மாநில அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து தவறியதற்காக மக்களை தமிழக அரசு தண்டிப்பது நியாயமற்றது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்களுக்கு கூடுதலாக உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதும், ஆட்சிக்கு வந்த பின்னர் உதவி வழங்க மறுப்பதும் தி.மு.க.,வின் இரட்டை வேடம் ஆகும். கடந்த சில மாதங்களில் பெய்த கடுமையான மழையாலும், வெள்ளத்தாலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் மக்கள் பொங்கலை ஓரளவாவது மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதை உணர்ந்து நடப்பாண்டுக்கான பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 சேர்த்து வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Karthik
டிச 30, 2024 18:47

யாருக்கு வேணும் அய்யா உங்க இணாம்?? இணாம் இல்லாத அரசியலோ ஆட்சியோ செய்யவே தெரியாதா உங்க யாருக்கும்?? எக்காலத்துக்கும் மக்களை இணாமுக்கு அடமையாவே வச்சிருக்கறதுதான் உங்க அரசியலா?? என்னைக்கு இந்த எழவெடுத்த எணாம் ஒழியுதோ அன்னைக்கு தான் வீடும் நாடும் உருப்படும். சும்மா மாற்றம் முன்னேற்றம் ன்னு சொன்னாமட்டும் போதாது.. ஒன்னு மாறுங்க இல்ல வழிவடுங்க - மாற்றத்திற்கு .


Barakat Ali
டிச 30, 2024 18:44

இலவசங்கள் எக்காரணத்தை முன்னிட்டும் வழங்கப்படக் கூடாது ..... மாறாக தொழில்துறையை ஊக்குவித்து பணி வாய்ப்புக்களை உண்டாக்க வேண்டும் ....


V வைகுண்டேஸ்வரன்
டிச 30, 2024 17:33

சார், நீங்க மைண்ட் வாய்ஸ் னு நெனச்சுக்கிட்டு சத்தமா பேசறீங்க


Anantharaman Srinivasan
டிச 30, 2024 13:48

அப்பாவுக்கும் பிள்ளைக்கும் கட்சியிலும் குடும்பத்திலும் 1000 பிரச்னை.. அதை மக்கள் மறக்க பொங்கலுக்கு 1000 தரவில்லையென்று ஒரு அறிக்கை. உண்மைதான். கொடுத்தாலும் குற்றம். தவிர்த்தாலும் குற்றம். பாவம் ஸ்டாலின் என்ன செய்வார். உதயநிதி தான் முட்டு கொடுத்து பதில் சொல்ல வேண்டும்.


Mohammad ali
டிச 30, 2024 14:37

எல்லோரும் நினைப்பது அப்பாவுக்கும் மகனுக்குக்கும் சண்டையென்று ஆனால் உண்மையில் அவர்களின் குடும்ப உறுப்பினருக்கே கட்சி பதவி கிடைத்து இருக்கிறது.


Kumar Kumzi
டிச 30, 2024 15:19

அடேங்கப்பா டாஸ்மாக் பிரச்சினை பங்களாதேஷ் கள்ளக்குடியேறிக்கே தெரிஞ்சி போச்சே ஹாஹாஹா


முக்கிய வீடியோ