உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் அக்கிரமம் ஆட்சிக்கு நல்லதல்ல; அமைச்சர் மீதும் சி.ஐ.டி.யு., குற்றச்சாட்டு

போலீஸ் அக்கிரமம் ஆட்சிக்கு நல்லதல்ல; அமைச்சர் மீதும் சி.ஐ.டி.யு., குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்: ''தொழிலாளர்களுக்கு எதிராக போலீசார் அக்கிரமமாக நடந்து கொள்வது ஆட்சிக்கும், போலீஸ் அமைச்சருக்கும் நல்லது அல்ல,'' என சி.ஐ.டி.யு., சங்கத் தலைவர் செளந்தராஜன் கூறியுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ளது சாம்சங் தொழிற்சாலை. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சம்பள உயர்வு, 8 மணி நேரம் வேலை, தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில் ஒரு பிரிவினருக்கு உடன்பாடு ஏற்பட்டது. இதனை ஏற்காத சி.ஐ.டி.யு., சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஏதுவாக போராட்ட இடத்தில் இருந்த பந்தல் போலீசார் மூலம் அகற்றப்பட்டது. முக்கிய நிர்வாகிகள் இரவு கைது செய்யப்பட்டனர். இன்று தொழிலாளர்களில் ஒரு பிரவினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பாக சி.ஐ.டி.யு., சங்கத் தலைவர் செளந்தராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: அக்கிரமமாக போலீசார் நடந்து கொள்வது ஆட்சிக்கு நல்லதல்ல. போலீஸ் அமைச்சருக்கு நல்லதல்ல. முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக பெரும்பான்மை தொழிலாளிகளை , சிறுபான்மை தொழிலாளிகள் பக்கம் சாய்ப்பதற்காக அவர்களை மிரட்டுவதிலும் அச்சுறுத்துவதிலும் போலீஸ் துறை ஈடுபடுகிறது. போலீசை பயன்படுத்துகின்றனர்.தமிழக அரசு சுணக்கம் காட்டுவது தான் பிரச்னை. இதனால் வேலை நிறுத்தம் நடக்கிறது. இதற்காக தான் 31 நாட்களாக வேலை நிறுத்தம் நடத்துவதன் மூலம், தமிழகம் முழுவதும், இந்தியா முழுவதும் எதிர்ப்பை காட்டுகிறோம். கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுவது தவறு. அமைச்சர் எங்களது கோரிக்கைகளை என்னவென புரிந்து கொள்ளவில்லை. புரியவில்லையா அல்லது புரியாதது மாதிரி நடிக்கிறாரா என தெரியவில்லை.ரெஜிஸ்ட்ரேஷன் என்பது எங்களது உடனடி கோரிக்கை அல்ல. ரெஜிஸ்ட்ரேஷன் செய்தால் நாங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவோம் என நாங்கள் கூறவில்லை. ரெஜிஸ்ட்ரேஷன் என்பது தானாக கிடைக்கும். இன்று கிடைக்கும். இல்லையென்றால், நாளை அல்லது அடுத்த மாதம் கிடைக்கும். அதற்கு இவரின் எந்த தயவும் தேவையில்லை.இவர் செய்ய வேண்டியதை கடந்து சென்றதால் தான் நாங்கள் நீதிமன்றம் சென்றோம்.அமைச்சர் சொல்வது முற்றிலும் தவறு. அவர் செய்வது மழுப்பல். மக்களை திசை திருப்புவது. எங்கள் கோரிக்கை அதுவல்ல. எங்கள் கோரிக்கை சங்கத்தை முதலில் ஏற்க வேண்டும். அங்கீகரிக்க வேண்டும். எங்கள் கோரிக்கையை அவன் பேசுவான் அப்படி என்பதை ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும். இதனை செய்யவிட்டால் எதற்கு அரசு? எதற்கு ஆட்சி? போலீஸ் மற்றும் அமலாக்கத்துறை. இவர்கள் யாருக்கு எதிராக நிற்க வேண்டும்.ரோட்டில் வேட்டையாடி உள்ளீர்கள். நேற்று இரவு முழுவதும் வீடு வீடாக சென்று தொழிலாளிகளை வேட்டையாடி உள்ளீர்கள். அனைத்து குடும்பங்களையும் அச்சுறுத்தி உள்ளீர்கள். பீதியை உண்டாக்கி உள்ளீர்கள். பெண்கள் முழுவதும் நடுங்கி கொண்டு உள்ளனர். இது தான் அரசு செய்ய வேண்டிய காரியமா? எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது போலீசின் அத்துமீறல். முதல்வர் தலையிட்டு சரி செய்ய வேண்டும். இல்லை என்றால், இந்த அத்துமீறல்களுக்கு இந்த அரசு பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Natarajan Ramanathan
அக் 10, 2024 04:01

போலீஸ் அமைச்சருக்கு நல்லதல்ல.... முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும். இரண்டுபேரும் ஒரே தத்திதானே?


Bala
அக் 09, 2024 22:50

If he is so concerned about the workers welfare, why is he not announcing that CPIM is coming out of the ruling alliance in TN. Does he have spine to do that immediately. Govt is worried that if it favours the CITU and goes with the against the Samsung management, it may lose further foreign investments in the State. All the foreign tours of CM & Co., will go waste. Sabash sariyana poatti...... Ha Ha Ha...


Ramesh Sargam
அக் 09, 2024 22:20

மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவே போலீஸ் இலாகா. மந்திரிமார்களுக்கு கூலி வேலை செய்ய அல்ல. அதை மனதில் நிறுத்தி காவல்துறையினர் மக்கள்பணி செய்திடுவது சிறந்தது.


nsathasivan
அக் 09, 2024 22:15

இந்த கம்யூனிஸ்ட் புகுந்த தொழிற்சாலை உருப்படாது.பாவம் இவர்கள் பின்னால் செல்லும் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.தொழிற்சாலை இழுத்து மூடப்படும். பக்கத்து மாநிலங்கள் இந்த கம்பெனிக்கு சிகப்பு கம்பளம் விரித்து கூப்பிட தயார் நிலையில் உள்ளனர்.


Nagarajan S
அக் 09, 2024 20:59

சீன ஆதரவாளர்களான கம்யூனிஸ்ட் கட்சியினர், எப்படியாவது தென்கொரியாவின் சாம்சங் நிறுவனத்தை சீர்குலைத்து இந்தியாவிலிருந்து விரட்டவேண்டும் என்பது தான் போராட்டத்தை தூண்டிவிடுபவர்களின் குறிக்கோள். அரசு உடனடியாக தலையிட்டு இவர்கள் பிரச்னையை தீர்காவிட்டால் டாடா கம்பெனி மேற்கு வங்கத்திலிருந்து குஜாரத்திற்கு சென்றதுபோல, சாம்சங் தமிழகத்திலிருந்து ஆந்திரப்ரதேசத்துக்கோ, கர்நாடவிற்கோ மாறிவிடும்.


தாமரை மலர்கிறது
அக் 09, 2024 20:38

இந்த சீன கைக்கூலியை ஜெயிலில் தள்ளுங்கள். அரசு ஒருமாதம் வேடிக்கை பார்த்தது அட்டூழியம். வேலை செய்யாமல் ஒரு மாதம் இவர்கள் போராடுகிறார்கள் என்றால், இவர்களுக்கு நல்ல சம்பளமே சாம்சங் கொடுத்துள்ளது. இவர்களின் சம்பளத்தை குறையுங்கள். தமிழகத்தை நம்பி முதலீட்டை போட்டவர் நஷ்டமடைய அரசு விடக்கூடாது. அப்படி நடந்தால், நாடு குட்டிசுவராகிவிடும்.


jayvee
அக் 09, 2024 19:56

இந்த ஆளு ஒரு சீன கைக்கூலி .. நன்றாக கவனித்து பாருங்கள். இந்த இடது சாரி தீவிரவாத சங்கங்கள் இந்தியாவிலிருந்து இயங்கும் எந்த ஒரு சீன நிறுவனத்திலும் தொழிலாளர்களை தூண்டிவிட்டு பிரச்சனை செய்வது கிடையாது.. இவர்களின் சாதனை வேதாந்தா நிர்வாகத்தை மிஸ நரிகளுடன் சேர்ந்து மூடியது. யமஹா நிறுவனத்தை மூட முயற்ச்சி செய்து தோற்றது .. இப்போது சாம்சங்..


T.Senthilsigamani
அக் 09, 2024 18:59

ஹா ஹா ஹா நினைத்தாலே சிரிப்பு சிரிப்பாக வருகிறது .சமூக நீதி காக்கும் அரசு என ஸ்டாலின் அரசை புகழாராம் சூட்டுபவர்களும் இந்த கம்யூனிஸ்ட்கள் தான் . தொழிலாளர்களின் நலன் காக்கும் அரசு திமுக அரசு என வானளாவ புகழ்பவர்களும் இவர்கள் தான் . ஆனால் தொழிலாளர் நலன் காக்கும் கட்சி என பிறர் நினைக்க வேண்டும் என்பதால் அரசை கண்டனம் செய்பவர்கள் போல கம்யூனிஸ்ட்கள் நடிக்கிறார்கள் .அவ்வளவு தான் .வேறுவொன்றும் இல்லை .ஏனென்றால் தொழிற்சங்கம் தான் கம்யூனிஸ்ட் கட்சி வளர வாரி வாரி பொருட்ச்செல்வத்தை வழங்கும் அட்சய பாத்திரம் .ஆகவே இது போல பல்லாயிரம் போலீஸ் அக்கிரமங்கள் திமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு ,எதிராக நடந்தாலும் வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் ஓரிரு சீட்டு பிட்சை கேட்டு ,முதலில் நின்று ,திமுகவிடம் மன்றாட்டு வைப்பவர்களும் இந்த கம்யூனிஸ்ட்கள் தான் .கேட்டால் மதச்சார்பின்மை காத்திட , மதவாதத்தை ஒழித்திட , மதச்சகிப்புத்தன்மையை வளர்த்திட என வழவழ கொழகொழ மொண்ணை வாதங்கள் செய்பவர்களும் இந்த கம்யூனிஸ்ட்கள் தான் .இந்தியாவின் வளர்ச்சிக்கு சாபக்கேடு இந்த கம்யூனிசம் தான்


Lion Drsekar
அக் 09, 2024 18:54

பரவாயில்லை வயதுக்கு ஏற்ப தலை முடிக்கு சாயம் பூசாமல் உண்மையான நிறத்தில் காட்சி அளிப்பதற்கு நன்றி, திரு ராமானுஜம் இருந்தவரை சீரும் சிறப்புமாக இருந்தது , மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், அரசாங்கம் மற்றும் தனியார் இவரில் இருவருமே வியாபாரம் மட்டுமே செய்கிறார்கள், தனியாருக்கு இவர்களைப்போல் உண்டாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் நிர்வாகங்கள் அதே போன்று அரசாங்க நிறுவங்கினங்களின் மீதும் லேபர் ,INSPECTOR OF FACVTORIES, ESI, PF , ENFORCEMENT, MES ENCORCEMENT, PF ENFORCEMENT, என்று வ்வொரு குறையும் படையெத்து நடவடிக்கை எடுத்தால் ஒருநாள் கூட அரசாங்கமே நடத்த முடியாது, மொத்தபேரும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு கோயம்பேட்டுக்கு கூலிவேலைக்குத்தான் வருவார்கள் , அவ்வளவு கெடுபிடி, அப்படி இருக்க, மனசாட்சியுடன் செயல்படவேண்டும், கட்சி சார்பாக தொழிலாளர்கள் பிரநிதியாக இருப்பவர்கள் ஒருநாள் வேலைக்கு வருகிறார்களா ? தொழிலாளர்கள் பிரச்சனைதான் தீர்கிறதா ? அரசு அலுவலகங்களுக்கு சென்றால் ஜாதி, சமூக அமைப்புகள், கட்சி சார்ந்த அமைப்புகளின் பிரநிதிகளின் பெயர்கள் மற்றும் அவர்களது புகைய்ப்படங்கள் , அவர்களின் பொன்மொழிகள் மட்டுமே இருக்கிறது , எங்காவது மக்களின் குறைகளுக்கு இன்னாரை இப்படி அணுகலாம் என்று ஒரு வழியும், , ஒரு வழிகாட்டியோ அல்லது ஒருவனும் இல்லை, அப்படி இருக்க தவறானவர்கள் மீது காலவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னமும் சீரழியும், மக்கள் பிரநிதிகள் ஜாதி, மதம் , மொழி என்று மக்களை ஒன்றுசேரவிடாமல் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள் , தொழிலாளர்களுக்காக இருப்பவர்கள் தொழிலாளர்கள் நலன் கருதாமல் , உதாரணத்துக்கு ஒன்றை கூறியே ஆகவேண்டும், மத்திய மற்றும் மாநில ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்துக்கு நான் சென்றிருந்தேன் அதில் சிறப்பு அழைப்பாளராக நானும் சென்றுஇருந்தேன் , அப்போது அங்கு பேசிய ஒருவர் அப்போதைய மத்திய அமைச்சரை இவர் பெயர் வைத்து போல் ஒருமையில் நான் அவனிடம் புகார் கொடுத்தேன் , அவன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று அடுக்கிக்கொண்டே அன்றைய ஒருங்கிணைப்பு கூட்டத்துக்கு இவர்தான் முக்கிய பிரமுகரான தன்னைக் காட்டிக்கொண்டு எல்லோர் நேரத்தையும் அவரே எடுத்துக்கொண்டு பேசினார் ஏசினார் ஏசிக்கொண்டே இருந்தார் , ஒரு நேரத்தில் மிகப்பெரிய பதவியில் இருந்த அதிகாரிகள் பொறுத்தது போதும் என்று , தனியார் மற்றும் இவர்களுக்காகவே வேலைவாய்ப்பை உருவாக்கி, வீட்டுக்குச் சென்று நான்கு சக்கர வாகனத்தில் அழைத்துவந்து, காலை சிற்றுண்டி, மதிய உணவு என்று அவர்கள் வாழ்நாளிலேயே கண்டிராத எல்லா வசதிகளையும் செய்துகொடுத்த ஒரு தனியார் அமெரிக்க நிறுவனத்தைப் புகழ்ந்து பேசி, அரசின் ஊக்குவிப்பு திட்டம் மற்றும் கண்ணியமாக, உண்மையாக, நேர்மையாக உழைக்கும் தொழிலாறாகிலுக்ககவே உருவாக்கிய மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து ஆரம்பித்து , தொழிலாளர்களும் ஒற்றுமையாக மிகவும் விசுவாசமாகவும் பணியாற்றிவந்த நேரத்தில் அன்றைய அதிக நேரம் எடுத்துக்கொண்ட மாமனிதர் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தி மேலும் வசதிகள் வேண்டும் , என்று சினிமாவில் வருவதை விட கற்பனையில் இவர் நினைத்ததை அமல்படுத்தவேண்டும் என்று வீரவாசமாகப் பேசி , பல கோடி முதலீடு செய்தவர்களின் மனம் புண்படும் நிலையில் பணியில் இருந்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்த நிலையில் தான் ஒரு காலகட்டத்தில் மக்களின் பிரநிதியாகி தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராகவேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டதால், முதலாளி அந்த கம்பெனியே இவர்களுக்காகவே பிரதியாகாமாக ஏற்படுத்திய கம்பெனியை ஊத்தி மூடிவிட்டார், என்று கூறினார், உடனே வீராஸேவதுடன் தவறாக வழிகாட்டி தொழிலாளர்களை சிதைத்து அவர்களின் வாழ்வையே முற்றிலும் அழித்த நபர் வெளிநடப்பு செய்தார், அவர் என்ற பின்பு அதிகாரிகளும் பல லட்சம் கோடி முதலீடு செய்து இந்த பிரிவினருக்கான நாங்கள் உதவி செய்ய வந்தோம் என்று தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்கள் . ஆகவே இதுபோன்ற கணக்கென்று ஒரு கோடியை வைத்துக்கொண்டு , நல்லது எய்வதாக நினைத்துக்கொண்டு தோலிலாளர்களின் வாயில் மண்ணை போடவேண்டாம், வந்தே மாதரம்


HoneyBee
அக் 09, 2024 18:49

ஒரு 15கோடி + ஒரு சீட் பார்சல் பிளீஸ்


முக்கிய வீடியோ