உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி; போலீஸ் குடியிருப்பில் நடந்த கொலை பற்றி அண்ணாமலை ஆவேசம்

பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி; போலீஸ் குடியிருப்பில் நடந்த கொலை பற்றி அண்ணாமலை ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போலீஸ் துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், கையாலாகாத நிலையில் போலீசாரை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.அவரது அறிக்கை: திமுக ஆட்சியில், தமிழகத்தில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. இதன் உச்சகட்டமாக, இன்று காலை, திருச்சி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டையில், பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், குறிப்பாக காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்திருப்பது, பொதுமக்கள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியிருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oohqcj2a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல்வர் ஸ்டாலின், தற்போது திருச்சியில் தான் தங்கியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, காவலர் குடியிருப்பிலேயே இப்படி ஒரு படுகொலை நடப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் அவலநிலையைக் காட்டுகிறது. பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என யாருக்குமே பாதுகாப்பில்லாத நிலையில் தமிழகம் தரம் தாழ்ந்திருக்கிறது. போலீஸ் துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், கையாலாகாத நிலையில் போலீசாரை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

T.sthivinayagam
நவ 10, 2025 18:36

அண்ணாமலை சார் உங்களுக்கு கொடுக்கப்பட மேலிடத்துக்கு அஸ்ன்மென்ட் எல்லாம் இப்போது பழனிச்சாமி சார்க்கு மாத்திட்டாங்களாமே அவரும் உங்கள் மாதிரியே அறிவிக்கை விடுறாரு என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.


bharathi
நவ 10, 2025 17:31

CM sir busy in kamal birthday


JANA VEL
நவ 10, 2025 15:47

அண்ணாமலை சார். முதல்வர் இப்போ ஊரில் இல்லை ... திருச்சியில் இல்லை .... தமிழ் நாட்டில் இல்லை ... இந்தியாவில் இல்லை .... உலக அரசியல், தொழில், ஆட்சி, வருமான சுற்று பயணம் போயிருக்கார். வந்த உடனே அறிக்கை விட்டு ... கொலையாளிகளை சுட்டு பிடித்து விடுவார். சட்டம் ஒழுங்கு எந்த கொம்பன் ஆனாலும் குறை சொல்ல முடியாது. இது ஒன்றிய அரசு சூழ்ச்சி. தொட்டுப்பார்.


JANA VEL
நவ 10, 2025 15:42

நீங்க அடுத்து அதே திருச்சிக்கு எப்போ போவீங்க ... அந்த ஆளுங்களை மறுபடி ஒரு சம்பவம் செய்ய சொல்லணும்


sundarsvpr
நவ 10, 2025 14:54

கை ஆகாத நிலையில் காவல்துறையை ஸ்டாலின் வைத்து இருக்கவில்லை. தமிழ் நாட்டில் நடக்கும் குற்றங்களை கண்டும் காவல்துறை மௌனமாய் இருப்பதுதான் இந்த துறை இருப்பதாய் மக்கள் நினைக்கவில்லை.


Govi
நவ 10, 2025 14:11

நீலசாயம் : வெளுத்து: நீண்ட காலம் : ஆகுது


duruvasar
நவ 10, 2025 14:07

கேடு கெட்ட ஆட்சியில் இப்படி நடப்பது சாதாரணமானதுதான்


திகழ்ஓவியன்
நவ 10, 2025 14:00

கடை விரித்தும் கொல்லுவாரில்லை , இவர் கட்சியே இவரை மதிக்க வில்லை அப்பரும் யார் மதிப்பர் , வெறும் 3 பேர் கருத்துக்கு ஆதரவு கஷ்டம்டா சாமி


Ramasamy
நவ 10, 2025 15:35

2000 உபிஸ்


திகழ்ஓவியன்
நவ 10, 2025 18:40

நன்றி எனக்கு ஊதிய உயர்வு 2000


Madras Madra
நவ 10, 2025 13:45

நாங்கெல்லாம் அறிவாளிகள் என்று அறிவு திருவிழா நடத்தும் நாடக காரர்கள் அறிவு முக்கியமா பாதுகாப்பு முக்கியமா ? என்று தமிழன் திராவிடனாக பெரியார் அண்ணா வழியில் சிந்திக்க வேண்டும்


Chandru
நவ 10, 2025 13:45

அறிவிலிகள் ஆட்சியில் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?


முக்கிய வீடியோ