கேப்டன் பிரபாகரன் படத்தை பார்த்து கதறி அழுத பிரேமலதா
நெய்வேலி:கடலுார் மாவட்டம் நெய்வேலியில் விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் ரீ ரிலீஸாகயுள்ள தியேட்டரில் தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ், விஜயபிரபாகரன் படம் பார்த்தனர். விஜயகாந்தை திரையில் பார்த்ததும் பிரேமலதா, விஜய பிரபாகரனும் அழுதனர். பின் பேட்டியளித்த பிரமேலதா, “விஜயகாந்தின் 100வது படமான 'கேப்டன் பிரபாகரன்' வெளியாகி 34 ஆண்டுகளாகி விட்டது. தற்போது, 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 4கே தொழில் நுட்பத்தில், மீண்டும் வெளியாகி உள்ளது. விஜயகாந்தின் மனைவியாக பெருமைப்படுகிறேன்,” என கண்கலங்கினார்.