உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹோட்டல்களில் விலை உயர்வு; மக்கள் அதிருப்தி

ஹோட்டல்களில் விலை உயர்வு; மக்கள் அதிருப்தி

சென்னை: சென்னை உட்பட பல இடங்களில் உணவகங்களில் இட்லி, தோசை, பொங்கல், சாப்பாடு என, உணவு பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, 'சிக்கன், மட்டன்' என, அசைவ பிரியாணிக்கு இணையாக, பனீர் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி என, சைவ உணவு வகைகள் விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அமைப்பு சார்ந்த பிரிவில் சிறியது, பெரியது, நடுத்தரம் என, சராசரியாக, 50,000 உணவகங்கள் உள்ளன. இது தவிர, தள்ளுவண்டி உணவகம், 'டிபன் சென்டர்' உள்ளிட்ட அமைப்புசாரா உணவகங்களும் உள்ளன. சைவ உணவகங்களில், இட்லி, தோசை, சாம்பார் இட்லி, பொங்கல், பூரி, கிச்சடி, தோசை வகைகள், மதிய சாப்பாடு, மஷ்ரூம் பிரைடு ரைஸ், புலாவ், மஷ்ரூம் பிரியாணி, பனீர் பிரைடு ரைஸ், புலாவ், பனீர் பிரியாணி, கோபி பிரைடு ரைஸ் என, பல உணவு வகைகள் விற்கப்படுகின்றன. அசைவ உணவகங்களில், மட்டன், சிக்கன் பிரியாணி, இறால், மீன், சிக்கன் 65, ஆட்டுக்கால் பாயா உட்பட, பல்வேறு உணவு வகைகள் விற்கப்படுகின்றன. மளிகை பொருட்கள், எண்ணெய் வகைகள், காய்கறி, சமையல் காஸ் சிலிண்டர், கடை வாடகை, மின் கட்டணம் போன்றவற்றை உள்ளடக்கி, உணவகங்களில் உணவு பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரலுடன் ஒப்பிடும்போது, இம்மாதம் வணிக சமையல் காஸ் சிலிண்டர் விலை, 183 ரூபாய் குறைந்து, 1,738 ரூபாயாக உள்ளது. இதேபோல், அரிசி, காய்கறி, மளிகை பொருட்களின் விலைகளும் பெரிதாக அதிகரிக்கவில்லை. ஆனால், கடந்த ஏப்ரலுடன் ஒப்பிடும்போது, தற்போது பல உணவகங்களில் இட்லி, தோசை, பரோட்டா என, ஒவ்வொரு உணவு பொருளின் விலையும் சராசரியாக, 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மஷ்ரூம், பனீர், கோபி புலாவ், பிரியாணி விலை, 20 - 30 ரூபாய் வரை அதிகரித்து, 250 ரூபாய் - 300 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. மட்டன் பிரியாணி, 300 ரூபாய் - 400 ரூபாய்க்கும், சிக்கன் பிரியாணி, 200 ரூபாய் - 250 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.

அசைவ உணவு

பிரியாணிக்கு இணையாக, சைவ பிரியாணி வகைகளின் விலை உயர்ந்து வருவது, வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவகங்களில் உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதுடன், சரியான எடையில் வழங்குவதை உறுதி செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Padmasridharan
செப் 17, 2025 10:11

One india one election போல one india one price கொண்டு வரட்டும் சாமி. ஒரு சாப்பாடு சாப்பிட்டவுடன் வயிறும் நிறைய மாட்டேங்குது, அதுல என்ன போட்டு எப்படி பண்றாங்கன்னு தெரியாம சுவைக்கு மட்டும் சாப்பிட்டு நோய்களையும் காசு கொடுத்து வாங்கற மாதிரிதான் இருக்குது இப்ப..ஒரு பரோட்டா / சப்பாத்தி தெருவுல இருக்கிற ஒவ்வொரு கடையிலும் ஒரு விலை, ஒரே sizeஆகவும் இல்ல


Ram pollachi
செப் 16, 2025 17:52

இலவச வாகன நிறுத்துமிடம் மற்றும் கழிவறை இதற்கு தான் பலர் இந்த உணவகத்திற்கு செல்கிறார்கள்... காய்கறி, பழம் மற்றும் தானியங்களை அதிக அளவில் கொள்முதல் செய்வதால் வியாபாரிகள் இவர்களுக்கு சகாய விலையில் கொடுக்கிறார்கள். நம்மைப்போல் உள்ள அன்றாடங் காய்ச்சிகளிடம் கொள்ளை விலை வாங்குகிறார்கள்...


ஆரூர் ரங்
செப் 16, 2025 12:25

ஆளும் கட்சி ஆட்கள் வசூலிக்கும் அடாவடி தேர்தல் மாமூல் வசூல்தான் விலைவாசி உயர்வுக்குக் காரணம்.


மணியன்
செப் 16, 2025 11:06

அதிக விலை விற்கும் ஹோட்டல்களில் ஏழைகள் சாப்பிடுவதில்லை.அங்கே சாப்பிடுபவர்கள் அதை தவிர்த்தால் காசும் மிஞ்சும்,ஒருவேளை பட்டினி போட்டால் ஜீரணமண்டலம் நலம் பெற்றால் நோயிலிருந்து தப்பி ஆஸ்பிடல் கொள்ளையிலிருந்தும் தப்பலாம்.


தமிழன்
செப் 16, 2025 10:55

ஜி எஸ் டி ரொம்ப குறைக்கப்பட்டுள்ளது. இதில் அரசு தலையிட்டு விலைவாசியை கட்டு படுத்த வேண்டும்


V. Vijayakumar
செப் 16, 2025 10:45

எந்த பொருளின் விலைவாசியும் அதிகரிக்க வில்லை ...தேர்தல் வருவதால் அதிகரிக்கிறது ...லஞ்சம் தான் காரணம். GST குறைத்துள்ளது ஆனால் ஹோட்டல் விலை அதிகரிக்கிறது எப்படி?


பெரிய குத்தூசி
செப் 16, 2025 10:29

GST குறைப்பு வருவதால் சாப்பாடு ஹோட்டல் மற்றும் சூப்பர் மார்க்கெட் முதலாளிகள் GST பலனை மக்கள் அனுபவிக்காமல் இருக்க இப்போதே உணவு பொருள்களின் விலையை தாறுமாறாக ஏற்றிவிட்டார்கள். கோவையில் உள்ள நாகர்கோயில் ஆர்யபவன், அன்னபூர்ணா உணவு பொருட்களை கொள்ளை லாபம் வைத்து லாபம் பார்க்கிறார்கள். சாதாரணமா ரெண்டு பேர் சாப்பிட சென்றால் சுமார் ருபாய் 1500 க்கு குறைவில்லாமல் பில் போடுகிறார்கள். இதற்கு ஒரே தீர்வு இதுபோன்று கொள்ளை அடிக்கும் ஹோட்டல்களை பொதுமக்கள் தவிர்த்து கொள்ள செய்யவேண்டும், குறிப்பாக கோவை அன்னபூர்ணா, நாகர்கோயில் ஆர்யபவன், அடையார் அனந்தபவன், அஞ்சப்பர், போன்ற செயின் ஹோட்டல் யும் கொள்ளை விலை விற்கும் ஹோட்டல்களை தவிருங்கள்.


pakalavan
செப் 16, 2025 09:53

ஜி எஸ் டீ வரியா குறைச்சலே போதும்


Kalyanaraman
செப் 16, 2025 09:21

ஆக, பொருட்களின் விலை உயர்வு - தாழ்வுக்கும் விலை ஏற்றத்துக்கும் சம்பந்தமில்லை என்று தெரிகிறது. தேர்தல் வருகிறது தேர்தல் நிதி கொடுக்க வேண்டும் ஆளுங்கட்சி அதிகார அடாவடி செய்யும். வேறு வழி இல்லை. அடுத்தடுத்து பாருங்கள், ஆம்னி பஸ்ஸிலிருந்து எல்லாமே விலை உயர்வடையும்.


karuththuraja
செப் 16, 2025 09:11

ரியல் எஸ்டேட் மாதிரி ஓட்டல் உணவு வகைகள் விலை ஏறிக்கொண்டே போகிறது, நம்மால் ஒன்னும் செய்ய இயலாது அதற்க்கு நிறைய காரணம் சொல்வார்கள். சுருக்கமா சொன்னால் பேராசைக்காரர்கள்.. மக்களுக்கு விலை அதிகம் என்றால் தரமானது என்ற நினைப்பு.. அதில் தரமும் இல்லை சுத்தமும் இல்லை, ஆகவே வீட்டில் செய்து சாப்பிடுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை