வாசகர்கள் கருத்துகள் ( 28 )
யமன் தன் வாகனங்களை தமிழ்நாட்டில் தனியார் பஸ்கள் என்று பெயர் வைத்து ஓட விட்டு இருக்கிறான். எந்த ஊரிலும் இவர்களின் அராஜகம் தான். ரோடுகள் எல்லாம் இவர்களுக்கு மட்டும் சொந்தம். என்னமோ தெரியலே : தனியார் பஸ் டிரைவரா ஓட ரௌடிகள் பிறவி எடுத்து வந்தது போலவே இருக்கிறது. அதிகார வர்க்கம் கண்டு கொள்வது இல்லை. உயிரை கையில் பிடித்து கொண்டு ரோடில் போக வேண்டியுள்ளது. கொடுமை.
மதுரை தென்காசி சாலையில் தனியார் பேருந்துகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அடிக்கடி விபத்துக்கள் நடந்தும், அவர்கள் அதை சரி செய்யவில்லை.
இந்த உயிர் விளையாட்டு திருச்சி மாநகரில் சர்வ சாதாரணம். பயணிகளின் எந்தவித கேள்விகளையும் தனியார் பேருந்து ஓட்டுநர்/ நடத்துனர்கள் மதிக்கமாட்டார்கள். பயணிகள் ஒருமையில் வா, போ, இறங்கு, ஏறு என்று மரியாதையின்றி பேசுவதுதான் வழக்கம்.தினம் பஸ்ரேஸ் நடக்கும் வழித்தடங்களில் முக்கியமானது 9 ம் நம்பர் உறையூர் வழியாகும். யார் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். தனியார் பஸ் ஓனர்கள்/ பினாமிகள் யார் என்பது திருச்சி மக்களுக்கும் தெரியும்.
தமிழ்நாடே அப்படித்தான்
திருச்சி ஸ்ரீரங்கம் டவுன் பஸ்களும் இப்பிடித்தான். நடுவுல் லொட லொடா அரசு பஸ்களும் சேர்ந்து பூலோக வைகுண்டம் சீரங்கம் போவோமே இல்லே நேரா வைகுண்டம் போயிடுவோமான்னு பயம் வருது.
ஒரு கோடிக்கு ஆயுள் இன்சூரன்ஸ், 2 கோடிக்கு மருத்துவ இன்சூரன்ஸ் இல்லாம தனியார் பஸ் ஏறாதீங்க.
இது இன்று நேற்று நடக்கும் விஷயம் அல்ல. Cuddalore pondy ரூட் la enaku தெரிஞ்சி 1970 ல இருந்தே இதே aatam தான். எல்லாம் pondy la போய் saraku அடிக்க தான்.. So அந்த route ku sema demand. So போட்டி அதிகம் Pondy return podhai பயணிகள் நிலமை இன்னும் அதிகம் அசிங்கம். மதுரை திண்டுக்கல் அதே கதை தான்.. பாவம் பயணிகள்..
தமிழகத்தில் பஸ்ஸில் பிரயாணம் செய்வதென்பது ஒரு மிகவும் வேதனையும் வருத்தைத்தையும் தரும் விஷயம். டிரைவர், கண்டக்டர் சுய நினைவில் அநேகமாக இருப்பதில்லை, அவர்கள் பிரயாணிகளிடம் பேசும் விதம் மரியாதைக் குறைவாகவும் தரமின்றியும் பிரயாணிகளை ஏதோ ஆடு மாடுகளை விரட்டுவது போலிருக்கும். பவர் ஹார்ன் சத்தம் காதைத்துளைக்கும், தவிர சினிமா, பாட்டு இவற்றின் சப்த அளவு வரையறைக்கு மேல். என்ன செய்வது? யதா ராஜா ததா பிரஜா .
இதில் அரசு மன்றங்களில் தீர்ப்பு வராது. அனைத்து பஸ் முதலாளிகளும் அதிகார வர்கங்களில் இருப்பவர்களே. பொதுமக்கள் தான் தீர்ப்பு எழுத வேண்டும். பஸ்சுக்குள் இருப்பவர்களும், ரோட்டில் செல்பவர்களும் உடனே செய்யவேண்டியது என்னவென்றால் .... உங்களுக்கு தெரிந்ததை நான் ஏன் சொல்ல வேண்டும்
இப்படி போட்டி போட்டுகொண்டு முந்திக்கொண்டு முதலில் வரும் பஸ்களுக்கு RTO சார்பில் பரிசு வழங்க வழிவகை செய்ய வேண்டும்.