உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்தையான காரணம் கூறி பத்திரங்களை நிராகரிக்கும் சார் - பதிவாளர் மீது நடவடிக்கை

சொத்தையான காரணம் கூறி பத்திரங்களை நிராகரிக்கும் சார் - பதிவாளர் மீது நடவடிக்கை

சென்னை : பதிவுக்காக வந்த பத்திரங்களில், திருப்பி தராமல் நிலுவையில் வைத்தவை, சொத்தையான காரணங்களை கூறி நிராகரித்தவை குறித்து, சார் - பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளும்படி, மாவட்ட பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வீடு, மனை விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள், சார் - பதிவாளர் அலுவலகங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன. இதில், முறையாக கட்டணம் செலுத்தி, டோக்கன் பெற்றாலும், தரகர்கள் வாயிலாக தாக்கலாகும் பத்திரங்களை பதிவு செய்யவே, சார் - பதிவாளர்கள் முன்னுரிமை தருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் தான், பதிவாகும் பத்திரங்களின் எண்ணிக்கை, படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: விதிமுறைப்படி, பதிவு முடிந்த பத்திரங்களை, சார் - பதிவாளர்கள் உடனுக்குடன் திருப்பித்தர வேண்டும். ஆனால், எவ்வித காரணமும் இன்றி, சார் - பதிவாளர் அலுவலகங்களில், 10 நாட்கள் வரை பத்திரங்களை நிலுவையில் வைப்பதும்; பதிவுக்கு தகுதியான பத்திரங்களை திருப்பி அனுப்புவதும் தெரியவந்துள்ளது.எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும், மொத்தம் உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்களை, எண்ணிக்கை அடிப்படையில் பிரித்து, நிர்வாக மாவட்ட பதிவாளர், தணிக்கை மாவட்ட பதிவாளர் ஆகியோர் திடீர் சோதனை நடத்த வேண்டும். திருப்பித்தராத பத்திரங்கள் குறித்து விசாரித்து, உடனடியாக திருப்பி கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். சொத்தையான காரணங்களை கூறி, திருப்பி அனுப்பப்பட்ட பத்திரங்கள் குறித்தும் ஆராய வேண்டும். இந்த விபரங்களை வாரந்தோறும், தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். தவறான காரணங்கள் அடிப்படையில், பத்திரங்களை திருப்பி அனுப்பிய சார் - பதிவாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான உத்தரவு, மாவட்ட பதிவாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

nagendhiran
அக் 05, 2024 19:25

அது என்ன சொத்தையான காரணம்? சரியான காரணம் சொல்லி நிராகரிக்கனும் என்பதுதான் சரி? சாதாரணமாகவே அவனுங்க காசில்தான் விலையாடுவானுங்க? இதில் காரணம் சொல்ல கூடாதுனா? புகுந்து விலையாடுவானுங்களே?


R S BALA
செப் 30, 2024 16:25

இவர்களெல்லாம் வானத்திலிருந்து குதித்து வந்தது போலவும், ஐகோர்ட் சுப்ரீம்கோர்ட் ஜட்ஜ் ரேஞ்சுக்கு பந்தா பரபரப்புதான் இதுபோன்ற அலுவலகத்தில் எப்போதும்.. இவர்களுக்கு மேலதிகாரிகள் இருப்பதே இப்போதுதான் தெரிகிறது..அந்த அளவிற்கு அதிகாரம் படைத்தவர்களாய் எப்போதும் மக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்திக்கொள்கிறார்களே.


Sivak
செப் 30, 2024 10:45

//சார் பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .../// அப்படியே எடுத்துருவானுங்க பாரு ...


narayanansagmailcom
செப் 30, 2024 10:19

மாடல் அரசுக்கு லஞ்சம் முக்கியம் அது இல்லாவீட்டில் எதுவும் நடக்காது. இது தான் சமூக நீதி


raja
செப் 30, 2024 09:18

அப்புறம் கேடுகெட்ட விடியல் இருவத்தி மூனாம் புலிகேசிக்கும் அவனின் மங்குநிக்கும் கப்பம் கட்டியது போக அவர்கணின் பாகெட்டும் நிரம்பனும்.. வெற என்ன செய்வாங்க


Kanns
செப் 30, 2024 09:14

Good Reforms But Misusing RulingParty-Men Must be Booked


Lion Drsekar
செப் 30, 2024 08:56

மக்கள் வரிப்பணம்சம்பளம் அப்படியே படியே சேமிப்பு , வாங்கும் லஞ்சம் குடும்பத்தார் பெயரில் சொத்து குவிப்பு, இப்படிப்பட்ட வாழ்வில் எங்காவது குறை ஏற்பட்டால் சொத்தைத்தான் கையூட்டு கிடைக்கவில்லை என்றால் இப்படித்தான்


GMM
செப் 30, 2024 08:19

மாவட்ட பதிவாளர் குறைபாடுள்ள பத்திர பதிவை வழக்கறிஞர் ஸ்டே குறிக்கீடுனால் ஆண்டுக்கணக்கில் ரத்து செய்ய முடியவில்லை. பலனற்ற பல உத்தரவை பதிவு துறை பிறப்பித்து வருகிறது. நீதிமன்றம் தான் ரத்து செய்ய முடியும் என்று விவாதம். தற்போது நிலை தெரியவில்லை. புகார், நோட்டீஸ் என்றால் அப்படியே போடு விடுவர் . வீடு, நில மறுவிற்பனை பதிவை அபகரிப்பு குறைய நிறுத்த வேண்டும். போயஸ் தோட்டத்தில் நடக்க கூட வசதி இல்லாதவர் வீடு கட்டி குடியிருக்க அபகரிப்பு முக்கிய காரணம்


Dharmavaan
செப் 30, 2024 07:44

எல்லாவற்றுக்கும் மூல காரணம் ஊழல் அரசியவாதிகளே அதை சரி செய்யாமல் கீழ் நிலையில் சரி செய்ய முடியாது பத்திரப்பதிவு துறை மந்திரி 100 கோடி செலவழித்து கல்யாணம் செய்கிறான் என்றால் எப்படி அந்த பணம் வந்தது அதுபோல கீழ் நிலை


Kasimani Baskaran
செப் 30, 2024 05:12

காசு வசூலிக்கத்தான் சொத்தையான காரணங்கள் உதவி செய்யும். ஏராளமாக பணம் அழுது பதவிக்கு வந்தவர்கள் தர்ம காரியங்கள் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது சரியல்ல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை