உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 11 தனியார் நிறுவனங்களிடம் இருந்து 5 ஆண்டுக்கு 1,580 மெகா வாட் கொள்முதல்

11 தனியார் நிறுவனங்களிடம் இருந்து 5 ஆண்டுக்கு 1,580 மெகா வாட் கொள்முதல்

சென்னை: தமிழக மின் வாரியம், ஐந்து ஆண்டுகளுக்கு, தினமும், 24 மணி நேரத்துக்கு, 1,580 மெகா வாட் மின்சாரம் வாங்க, 11 நிறுவனங்களுடன் மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்ய உள்ளது. இதற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட்டாக உள்ளது. இதை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் கிடைக்கும், மின்சாரம் போதவில்லை. பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய மின் நிலையங்கள் மற்றும் தனியார் நி றுவனங்களிடம் இருந்து, மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி, ஐந்து ஆண்டுகளுக்கு தினமும், 24 மணி நேரத்துக்கு, 1,500 மெகா வாட் மின்சாரம் என, ஐந்து ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்ய, மின் வாரியம் சமீபத்தில் 'டெண்டர்' கோரியது. இதில், 11 நிறுவனங்களிடம் இருந்து, 1,580 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. ஆணையம் அனுமதி கிடைத்ததும் மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்படும். ஒரு யூனிட் மின்சார விலை, 5.38 ரூபாய் முதல், 6.15 ரூபாய் வரை உள்ளது. ஒரு மெகா வாட்டில் இருந்து தினமும், 24,000 யூனிட் கிடைக்கும். இதனால் ஒரு நாளைக்கு, 1,580 மெகா வாட்டில் இருந்து, 3.79 கோடி யூனிட் மின்சாரம் கிடைக்கும். ஒரு யூனிட்டிற்கு, 5.38 ரூபாய் என்பதால், தினமும், 20 கோடி ரூபாய் செலவாகும். எனவே, மாதம், 600 கோடி ரூபாய் என, ஐந்து ஆண்டுகளுக்கு கணக்கிட்டால், 36,000 கோடி ரூபாய் செலவாக உள்ளது. யாரிடம் எவ்வளவு கொள்முதல்? நிறுவனம் மெகா வாட் ஒடிசா அலாய் ஸ்டீல் 150 ஓ.பி.ஜி., பவர் 160 சூர்யதேவ் அலாய்ஸ் அண்டு பவர் 50 எஸ்.இ.ஐ.எல்., எனர்ஜி 100 என்.டி.பி.சி., வித்யுத், ம.பி., 50 என்.டி.பி.சி., வித்யுத், சத்தீஸ்கர் 100 பி.டி.சி., இந்தியா, நாகை பவர் 120 பி.டி.சி., இந்தியா, நாவா ஒடிசா 50 பி.டி.சி., இந்தியா, மீனாட்சி எனர்ஜி 300 பி.டி.சி., இந்தியா, வேதாந்தா 200 ஜிந்தால் பவர் 300 மொத்தம் - 1,580 ----------------------- ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

மணிமுருகன்
நவ 07, 2025 23:33

எந்தக காசுக்கு கணக்கு காட்ட ஒப்பந்தம் இது. தவறு அடுத்த வருடம் தேர்தல் வரும் நிலையில் இப்படி ஒப்பந்தம் போடுவது தவறு இதை மத்தியரசு தடுக்க வேண்டும் தமிழகத்தில் காற்றாலைகள் பல தனியார் வசம் உள்ளது அது சரியான முறையில் இல்லை அப்படி இருக்க அதோடு வருட ஒப்பந்தம் என்பது தவறு


c.mohanraj raj
நவ 07, 2025 21:12

மின் மிகை மாநிலம் தான் ஏனென்றால் விலைக்கி வாங்கினால் தான் கோடிக்கணக்கில் சுருட்ட முடியும் மிகையாக பணம் கிடைக்கின்றது ஆகவே மிகை மாநிலம்


ஆரூர் ரங்
நவ 07, 2025 09:27

மின்மிகை மாநிலம்ன்னு போன மாசம் பெருமையடித்துக் கொண்டதெல்லாம் திராவிஷ மாடல் பொய்யா?


Vasan
நவ 07, 2025 10:11

இது அடுத்த 5 ஆண்டு 2026-31 தொழில் வளர்ச்சிக்கான திட்டமிடல் ஆகும். இன்று தமிழகம் மின்மிகை மாநிலம் தான். ஆனால் தமிழகம் அடுத்த 5 வருடங்களில், பல துறைகளில் அசுர வளர்ச்சி அடையப்போகிறது. அதற்கு 5000 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து புது மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே, அவுட்சோர்சிங் அடிப்படையில் தனியார் மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.


ஆரூர் ரங்
நவ 07, 2025 10:59

அன்றாடம் சிறு குறு நிறுவனங்கள் மூடப்படுகின்றன.. ஏற்கனவே தனியாரிடமிருந்தும் மத்திய தொகுப்பிலிருந்தும் விலைக்கு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவசர கொள்முதல் என்ற பெயரில் சுருட்டலாம். தற்சார்பு என்பது கானல் நீர். இந்த ஊழல் தில்லாலங்கடி கழக ஆட்சி முடிவுக்கு வந்தால் மட்டுமே நிஜ வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் .


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 07, 2025 11:36

அது வேற வாயி ........


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 07, 2025 11:38

இந்தக் கட்டுக் கதையை சுமார் முப்பது வருசமா கேட்டுக்கேட்டு காது புளிச்சுப்போச்சு ....


அப்பாவி
நவ 07, 2025 08:56

ஆம்னி பஸ் கட்டண ரேட்டு மாதிரி வாங்கி கமிஷன் அடிப்பாங்க....


Barakat Ali
நவ 07, 2025 08:51

அதாவது கூடுதல் மின்னுற்பத்தி நிலையங்களை அரசு அமைக்கவில்லை .... இதையே ஜெ செய்திருந்தால் ????


Vasan
நவ 07, 2025 08:02

தங்கள் தற்போதைய திராவிட மாடல் ஆட்சி காலமான மே 2026 வரை மட்டும் திட்டமிடாமல், அதற்கு அடுத்த 5 ஆண்டுகளும் நமதே என்று ஆணித்தரமாய் மக்கள் மீது நம்பிக்கை வைத்து, தமிழக மக்களுக்காக 2031 ஆம் ஆண்டுக்கான மின்சாரத்திற்கு திட்டமிடும் திமுக அரசுக்கு வாழ்த்துக்கள். இந்த தொலை நோக்கு பார்வை எத்தனை மாநில அரசுகளுக்கு உள்ளது?


Indhuindian
நவ 07, 2025 04:42

செட்டிநாட்டுலே ஒன்னு சொல்லுவாங்க வட்டிக்கு வாங்கி அட்டிகை செஞ்சானாம் அட்டிகையை வித்து வட்டி பணம் கட்டினானாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை