கடலோர காவல்படை ஐ.ஜி.,க்கு பதவி உயர்வு
சென்னை:சென்னையை தலைமையிடமாக கொண்ட, இந்திய கடலோர காவல் படையின், கிழக்கு பிராந்திய தளபதியாக பதவி வகித்த, ஐ.ஜி., டோனி மைக்கேல், கூடுதல் தலைமை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர், விசாகப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு, ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் உள்ளடக்கிய கிழக்கு மற்றும் வடகிழக்கு மண்டல கடலோர காவல் படை தளபதியாக செயல்படுவார்.