உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு: மேயரின் கணவர் சென்னையில் கைது

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு: மேயரின் கணவர் சென்னையில் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு தொடர்பாக, மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த்தை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.

ராஜினாமா

மதுரை மாநகராட்சியில் நடந்த, ரூ.150 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவால் மாநகராட்சியின் ஆளுங்கட்சியை சேர்ந்த ஐந்து மண்டல தலைவர்கள், இரு நிலைக்குழு தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5k2w6clu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அரசியல் ரீதியான புயல்

மேலும், ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் உட்பட இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டனர். பில் கலெக்டர்கள் உட்பட 19 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அ.தி.மு.க., தொடர்ந்த வழக்கு அடிப்படையில், இம்முறைகேட்டை தற்போது மதுரை டி.ஐ.ஜி., அபினவ் குமார் தலைமையிலான குழு விசாரிக்கிறது.இம்முறைகேட்டில் கைதான சொத்து வரி குழுத்தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த், அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா, தி.மு.க., கவுன்சிலர்கள் கஜேந்திரன், லட்சிகாஸ்ரீ, ம.தி.மு.க., பாஸ்கரன் ஆகியோர் பெயர்களை குறிப்பிட்டுள்ளது அரசியல் ரீதியான புயலை கிளப்பியுள்ளது.

கைது

இந்நிலையில், மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த்தை சென்னையில் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்காக, மதுரை அழைத்து சென்றனர்.

உதவி கமிஷனர் கைது

தூத்துக்குடியில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் சுரேஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். முறைகேடு நடந்த காலகட்டத்தில் இவர் மதுரையில் பணியாற்றி உள்ளார். கைது செய்யப்பட்ட சுரேஷ்குமாரை, விசாரணைக்காக போலீசார் மதுரை அழைத்து வருகின்றனர்.சொத்து வரி குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் என்பவர் அளித்த போலீசில் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Mahendran Puru
ஆக 16, 2025 08:37

எல்லா கட்சியும் இணைந்து இந்த தவறினை செய்துள்ளார்கள். தவறு செய்த அதிகாரிகளும் அரசியல் கட்சியினரும் கைது செய்யப்பட வேண்டும். மற்றொரு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணியின் மேல் உள்ள வழக்கு தாமதப் படுத்தப் படுவது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது. எல்லா ஊழலிலும் சைலண்டாக பங்கு வாங்கும் அ மலை என்ன செய்கிறார்.


S.jayaram
ஆக 13, 2025 07:41

ஊழலின் ஊற்றுக்கண் திமுக என்பது அன்றில் இன்றுவரை நிரூபணம் ஆகி வருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் மஸ்டர் ரோல் ஊழல் சென்னை மாநகராட்சியில் திமுக நடத்தியது இப்போ மதுரை மாநகராட்சியில் சொத்து வரி ஊழல் இன்னும் எந்தத்புற்றில் எந்தபாம்பூ இருக்கோ தெரியவில்லை


சிட்டுக்குருவி
ஆக 12, 2025 21:16

இது ஒரு தனிப்பட்ட முறைகேடாகத்தெரியவில்லை .இதேமாதிரி முறைகேடுகள் மற்ற மாநகராட்சிகளிலும் இருக்கும் வாய்ப்பு அதிகம் .அதனால் எல்லாம்நகராட்சிகளிலும் ஒரு ஸ்பெஷல் அரசு அல்லாத தணிக்கைக்கு உட்படுத்தவேண்டும் .அரசு உடனடி நடவடிக்கைக்கு ஆவண செய்யவேண்டும் .


Perumal Pillai
ஆக 12, 2025 21:00

பங்கு பிரித்தல் தகராறு ஆக இருக்கலாம் . கீர்த்தியை விட மூர்த்தி பெரியது .


ஆரூர் ரங்
ஆக 12, 2025 20:40

கட்டிங் உடனுக்குடன் சரியாக அனுப்பாமல் இருந்தால் இதைவிட மோசமானவை கூட நடக்கும்.


G Mahalingam
ஆக 12, 2025 18:10

திமுக அமைச்சர்களுக்கும் பங்கு உண்டு என்று அடுத்த அதிமுக ஆட்சியில் தான் சொல்வார்கள். இப்போது சொல்ல முடியாது.


என்றும் இந்தியன்
ஆக 12, 2025 17:55

தயவு செய்து ஒரு நாள் தீவிர விசாரணை செய்யுங்கள். பிறகு தவறு கண்டேன் சுட்டேன் செய்யுங்கள் இது தான் சரியான தீர்ப்பு. விசாரணை ஜெயில் எல்லாம் அனாவசிய செலவு.


shakti
ஆக 12, 2025 16:04

விடியா மாடல் அரசு


Marimuthu Kaliyamoorthy
ஆக 12, 2025 17:09

100 YEARS JAIL.


முக்கிய வீடியோ