வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த வியாதிக்கு அரசியல் மருந்தே இல்லையா? 2026 தேர்தல் வரைதான்? அதுக்கப்புறம் ......
மேலும் செய்திகள்
சதுரகிரியில் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி
31-Jul-2025
போடி : “கல் குவாரிகள் அமைத்து, வெடி வைத்து தகர்க்கும்போது, மலைப்பகுதியில் ஏற்படாத பாதிப்பு, மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றால் மட்டும் எப்படி பாதிக்கப்படும்?” என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் கூறினார். தேனி மாவட்டம் போடியை அடுத்த முந்தல் அருகே, அடகுபாறை மலைப்பகுதியில், நாம் தமிழர் கட்சி உழவர் பாசறை சார்பில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற சீமான், கட்சி தொண்டர்களுடன் மலைப்பகுதியில் மாடுகளை ஓட்டிச் சென்றார்.
மலையில் கல் குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கும்போது, கால்நடைகள் மேய்ச்சலுக்கு மட்டும் ஏன் அனுமதி கொடுப்பது இல்லை? தேனி மாவட்டத்தில், ஒரு லட்சமாக இருந்த மலை மாடுகள் எண்ணிக்கை, தற்போது 15,000 ஆக குறைந்து விட்டன. இதனால், மாடு மேய்க்கும் தொழிலாளர்களின் நிலை சிரமமாகி உள்ளது. மலைப்பகுதியில் மாடுகள் மேய்க்கக்கூடாது என்றால், மாற்று இடம் வழங்க வேண்டும்.
இந்த வியாதிக்கு அரசியல் மருந்தே இல்லையா? 2026 தேர்தல் வரைதான்? அதுக்கப்புறம் ......
31-Jul-2025