உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தகுதித்தேர்வில் முழுவிலக்கு அளிக்க வேண்டி செப்.18ல் ஆர்ப்பாட்டம்; பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

தகுதித்தேர்வில் முழுவிலக்கு அளிக்க வேண்டி செப்.18ல் ஆர்ப்பாட்டம்; பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

ராமநாதபுரம்; தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 'டெட்' தகுதித்தேர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்., 18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதுகுறித்து ராமநாதபுரத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பு செயலாளர் நல்லதம்பி கூறியதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) என்பது ஆசிரியர்களை முதன் முதலில் நியமனம் செய்யும் போது தான் தேவை. ஆசிரியராக நியமனமாகி 15, 20 ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தற்போது தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனக்கூறுவது ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே தகுதித்தேர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். செப்., இறுதிக்குள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அரசு அமல்படுத்த வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நியமனத்திற்கும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது இல்லை. தமிழக பள்ளிக்கல்வித்துறை விரைந்து செயலாற்றி பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி நிறுவன தலைவர் மாயவன் அறிவுறுத்தலின்படி செப்.,18 ல் (நாளை மறுநாள்) மாநிலம் தழுவிய கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

c.sugumar
செப் 17, 2025 18:19

தகுதித் தேர்வு இரத்து செய்ய மாநில அரசால் இயலாது.அது நிலைத்து விட்டது. சிறுபான்மை பள்ளிகளுக்கும் அது பொருந்தும்.விதிவிலக்கு அளிக்கக் கூடாது.2027 கல்வி ஆண்டு முதல் பி.எட்.,சேர்க்கைக்கு தகுதித் தேர்வு நடத்தி சேர்க்கை வழங்க வேண்டும்.தகுதியான மாணவர்களை பி.எட்.,கல்லூரியில் சேர்க்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை