மேலும் செய்திகள்
சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஏற்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
3 hour(s) ago | 53
கோவையில் தாயை பிரிந்த கருஞ்சிறுத்தைக்குட்டி உயிரிழந்த சோகம்
6 hour(s) ago | 1
ஏழு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
9 hour(s) ago | 3
சென்னை : மேட்டுப்பாளையம் - துாத்துக்குடி, மங்களூரு - ராமேஸ்வரத்துக்கு புதிய ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. எனவே, பயணியர் தேவை அதிகமாக உள்ள முக்கிய வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மேட்டுப்பாளையம் - துாத்துக்குடி மற்றும் கர்நாடகா மாநிலம் மங்களூரு - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்களின் சேவையை துவங்க, ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. துாத்துக்குடியில் இருந்து வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இரவு, 10:50 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், மறுநாள் காலை 7:15 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும்.மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி, ஞாயிறுகளில் இரவு 8:00 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் மறுநாள் அதிகாலை 4:20 மணிக்கு துாத்துக்குடிக்கு செல்லும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் கர்நாடகா மாநிலம், மங்களூரில் இருந்து சனிக்கிழமைகளில் இரவு 7:30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் மறுநாள் காலை 11:45 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும். மறுமார்க்கமாக, ஞாயிறுகளில் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 2:00 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் மறுநாள் அதிகாலை 5:50 மணிக்கு செல்லும். இந்த ரயில் ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட உள்ளன. இதற்கான, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை, தெற்கு ரயில்வே விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 hour(s) ago | 53
6 hour(s) ago | 1
9 hour(s) ago | 3