உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விடாது கொட்டித் தீர்க்கும் கனமழை! அவசர கால உதவி எண்களை அறிவித்த தமிழக அரசு

விடாது கொட்டித் தீர்க்கும் கனமழை! அவசர கால உதவி எண்களை அறிவித்த தமிழக அரசு

சென்னை: கனமழையின் போது மக்களுக்கு உதவும் வண்ணம், அவசர கால உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறி உள்ளது. புயல் சின்னமாக உருவெடுத்துள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. கடலோர பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் அவசர கால உதவி எண்களையும் வெளியிட்டு உள்ளது. பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்; மாநில அவசரகால செயல்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070, வாட்ஸ் அப் - 94458 69848 நாகை - கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 1800 233 4233, வாட்ஸ் அப் - 8438669800 மயிலாடுதுறை - கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04364-222588 திருவாரூர் - கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, வாட்ஸ் அப் - 94885 47941 கடலூர் - கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, வாட்ஸ் அப் 9489930520


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Narayanan Muthu
நவ 27, 2024 11:49

ஒன்றுக்கும் உதவாத ஒன்றிய அரசின் சாதனையை சொல்லலாமே


Kavi
நவ 27, 2024 09:14

விடியல் அரசு எதுவும் செய்யப்போறதில்லை


புதிய வீடியோ