உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் கோயிலில் இன்று நடை அடைப்பு

ராமேஸ்வரம் கோயிலில் இன்று நடை அடைப்பு

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் புறப்பாடாகி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருள உள்ளதால் இன்று(பிப்.20) முழுவதும் கோயில் நடை அடைக்கப்பட உள்ளது.ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப்.,18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 3ம் நாள் விழாவான இன்று அதிகாலை 2:30 முதல் 3:00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். இதனைத் தொடர்ந்து கால பூஜை, சாயரட்ச பூஜை நடந்ததும் காலை 7:00 மணிக்கு சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருள்வர்.அங்கு மகா தீபாராதனை முடிந்ததும் இரவு 10:00 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்புவார்கள். இதனால் காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும் என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை