உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குடோன்களில் கம்ப்யூட்டருடன் எடை தராசை இணைக்க வேண்டும்; ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம்

குடோன்களில் கம்ப்யூட்டருடன் எடை தராசை இணைக்க வேண்டும்; ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ரேஷன் கடைகளுக்கு கம்ப்யூட்டருடன் எடை தராசை இணைப்பதற்கு முன்பாக, நுகர்பொருள் வாணிப கழக (டி.என்.சி.எஸ்.சி.,) குடோன்களில் கம்ப்யூட்டருடன் எடை தராசை இணைக்கும் முறையை அரசு கொண்டு வரவேண்டும் என்பது உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று (ஏப்.8) மாநில அளவில் போராட்டம் நடத்துகின்றனர்.

மதுரையில் மாநிலத்தலைவர் ஜெயச்சந்திர ராஜா, துணைத்தலைவர் செல்லதுரை கூறியதாவது:

கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள 32 ஆயிரம் பகுதிநேர, முழுநேர ரேஷன் கடைகளுக்கு டி.என்.சி.எஸ்.சி., குடோன்களில் இருந்து அரிசி, கோதுமை, பருப்பு, சீனி என அத்தியாவசியப் பொருட்களை சாக்குடன் சேர்த்து 50.600 கிலோ மூடையாக அனுப்ப வேண்டும். ஆனால் 47.6 அல்லது 48.600 கிலோ அளவு தான் கடைகளுக்கு வருகிறது. லாரியில் மூடைகளுடன் ரேஷன் கடை பணியாளர்கள் வருவதால் எடை குறைவுக்கு அவர்களே காரணம் என திசை திருப்புகின்றனர். எனவே குடோனில் இருந்து சரக்கை ஏற்றும் போது கம்ப்யூட்டருடன் எடை தராசை இணைத்து அளவிட்டு அனுப்ப வேண்டும்.ரேஷன் கடைகளில் உள்ள பி.ஓ.எஸ்., மெஷினை கம்ப்யூட்டர், எடை தராசுடன் இணைத்தால் தான் கார்டுதாரர்களுக்கு சரியான எடையில் அரிசி, பருப்பு, சீனி விநியோகிப்பதை கண்காணிக்க முடியும் என்கின்றனர் டி.என்.சி.எஸ்.சி., அதிகாரிகள். அதற்கு முன்பாக டி.என்.சி.எஸ்.சி., மண்டல மையங்களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் மூடைகளை எடையிடுவதற்கு ஏற்ப கம்ப்யூட்டருடன் இணைந்த எடை தராசை சேர்க்க வேண்டும். மையங்களில் இருந்தே ஒவ்வொரு மூடையிலும் 2 கிலோ வீதம் குறைவாக வருகிறது.

வை-பை வசதி குறைவு

இணையதள சேவையின் 'ஸ்பீடு' குறைவாக இருப்பதால் ஒரு கார்டுதாரர் பி.ஓ.எஸ். (விற்பனை முனையம்) மெஷினில் ரேகை வைத்து பதிவு செய்யும் போது உடனடியாக அவரது விவரங்கள் கிடைக்காமல் 'நெட் இணைப்பு' சுற்றிக் கொண்டே இருக்கிறது. விற்பனை முனையத்தையும் தராசையும் இணைக்கும் போது முன்பு போல ஒரே பில்லாக அனைத்துப் பொருட்களுக்கும் போட முடியாது. அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனையாளர்களோடு எடையாளர்களை நியமிக்க வேண்டும். பல கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த மாவட்டங்களில் இன்று (ஏப்.,8) போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Karthik
ஏப் 08, 2025 20:26

இவங்களோட இந்த கோல்மால் தில்லாலங்கடி எழவுக்குதான் ஆரம்பத்திலேயே மத்திய மோடி அரசு அறிவிச்சுது.. மானிய விலை ரேஷன் பொருளை மொத்தமா நிறுத்திவிட்டு, அதற்கு ஈடான மானிய தொகையை அந்தந்த கார்டு தாரரின் வங்கி கணக்கில் வரவு வைக்கிறோம் , அதைகொண்டு வெளிச்சந்தையில் சரியான எடையில் தரமான உணவு தானியங்களை வாங்கி கொள்ளுங்கள் மக்களே என்று. அதுக்கு எந்த அப்பனும் ஒத்துக்கல. எங்களுக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டுதான் வேணும்னு சொல்லி ஒத்த கால்ல நிக்கயில நாம என்ன செய்யமுடியும்..?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை