உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊதிய உயர்வு கேட்டு ரேஷன் ஊழியர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு கேட்டு ரேஷன் ஊழியர்கள் போராட்டம்

சென்னை:பொது வினியோக திட்டத்திற்கு தனி துறை உருவாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில், 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். இது குறித்து, சங்க தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலர் தினேஷ் குமார் கூறியதாவது: ரேஷன் கடைகளுக்கு தனி துறையை உருவாக்குவது, ஊதிய உயர்வு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவற்றை அரசு ஏற்காததால், சென்னையில் நடந்த காத்திருப்பு போராட்டத்தில் 3,300 பேர் பங்கேற்றனர். கூட்டுறவு துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். கூடுதல் பதிவாளர் அமிரித், 'வரும் 20ம் தேதிக்குள் ஊதிய உயர்வு நிர்ணயம் செய்ய, குழு அமைக்கப்படும். அக்குழுவின் பரிந்துரையை பெற்று, டிசம்பருக்குள் ஊதிய உயர்வு வழங்கப்படும்' என தெரிவித்தார். அதிகாரிகள் தெரிவித்தபடி, டிசம்பருக்குள் ஊதிய உயர்வு வழங்கவில்லை எனில், வரும் ஜனவரி முதல், ரேஷன் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N. Ramachandran
செப் 14, 2025 18:11

ரேஷன் அரிசி, பருப்பு, சக்கரை கள்ள சந்தைல விற்கமாட்டோம் என்று உறுதிமொழி கொடுங்க முதல்ல. போராட்டம் பிறகு பண்ணலாம். 2026, 2031, 2036, 2041, 2046, 2051தேர்தல்ல மாடல் ஓங்கோல் கட்சிக்கு தான் ஒட்டு போடணும் ஒகே.....


R.RAMACHANDRAN
செப் 13, 2025 07:27

என்ன ஊதிய உயர்வு வழங்கப்படும் எனில் 5 வது பதவி தரத்தில் உள்ள ரேஷன் கடைகளின் விற்பனையாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் உள்ள கடைநிலை ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தில் பாதி அல்லது மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே வழங்கி அரசாங்கத்தால் தொடர்ந்து சுரண்டப்படுவர். 18/04/1990 முதல் தொடர்ந்து 700 கோடி ரூபாய் அவர்களிடமிருந்து சுரண்டப் பட்டுள்ளது இது வரையில்.நீதி மன்றங்கள் சட்ட அறிவு இல்லாத தொழிற் சங்கங்கள் இதற்கு உடந்தை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை