உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் விழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையே: ஐகோர்ட் கருத்து

கோவில் விழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையே: ஐகோர்ட் கருத்து

சென்னை : 'ஜாதியை காரணம் காட்டி, கோவில் விழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும், தீண்டாமையின் இன்னொரு வடிவமே' என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.'பெரிய புராணம்' என்ற நுாலை எழுதியவர் சேக்கிழார். இவர், சென்னை குன்றத்துாரில் கட்டிய காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வர சுவாமி கோவில் பிரம்மோற்சவம், இன்று துவங்கி, 16ம் தேதி வரை நடக்கிறது.'பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நடக்கும் விழாவுக்கு, குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் மட்டுமே நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன; மற்ற சமுதாயத்தினரிடம் இருந்து நன்கொடைகள் வசூலிக்கப்படுவதில்லை' என, குன்றத்துாரை சேர்ந்த இல.பாண்டியராஜன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:

தீண்டாமை, இந்த நாட்டில் பல்வேறு வழிகளில் தொடந்து வருகிறது. ஜாதியை காரணம் காட்டி, நன்கொடை பெற மறுப்பதும், தீண்டாமையின் இன்னொரு வடிவம் தான்.கடவுள் முன், ஜாதி ஒரு அளவுகோலாக இருக்கக்கூடாது என, ஏற்கனவே இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து சமுதாயத்தினரும் நன்கொடை வழங்க அனுமதி வேண்டும் என்ற மனுதாரர் மனுவை பரிசீலித்து, ஹிந்து அறநிலையத்துறை தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

naranam
மே 14, 2025 04:40

ஆனால் கட்சிகளுக்கு நன்கொடை என்ற பெயரில் பிச்சை எடுக்க வரும் நேரத்தில் ஜாதி பாகுபாடு பார்க்கிறார்களா? இவர்களை முச்சந்தியில் நிறுத்திவைத்து சாட்டையால் பின்னி எடுக்க வேண்டும்.


ஆரூர் ரங்
மே 13, 2025 14:01

சுரண்டலுக்கு பெயர் பெற்ற அறமில்லாத்துறையில் சாதி வேறுபாடின்றி சுருட்டல் நடக்கிறது.


அப்பாவி
மே 13, 2025 11:13

கருத்துதான் சொல்லமுடியும். அப்பிடியாவது அந்த நன்கொடையை குடுத்துத்தான் ஆகணுமா? அதை வெச்சு நாலு தெருவை சுத்தம் செய்யலாமே. உண்டியலில் ஒரு ரூவா போடுங்க. போதும். எடுத்துப்பாங்க.


தமிழ்வேள்
மே 13, 2025 08:30

நன்கொடை, தலைக்கட்டு வரி ஆகிய இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு நீதியரசருக்கு விளக்கி சொல்லப்படவில்லை. அதனால்தான் இப்படி ஒரு தீர்ப்பு. பங்காளிகள் உறவுமுறை உள்ளவர்கள் அளிப்பது தலைக்கட்டு வரி..அது மற்றவர்களிடம் வசூலிக்க பட மாட்டாது. நன்கொடை யார் வேண்டுமானாலும் தரலாம்.. இப்படி குழப்பி கோவில் விழாக்களை சீர்குலைக்க கிறிஸ்தவ முஸ்லிம் கும்பல் திமுக துணையோடு செய்யும் சூழ்ச்சி தான் இந்த வழக்கும், தீர்ப்பும்..


GMM
மே 13, 2025 08:03

ஒரே சாதியில் அந்த கோவில் மீது நம்பிக்கை கொண்ட உறவு முறை மட்டும் நன்கொடை வசூலித்து விழா கொண்டாடுவர். இதில் நீதிமன்றம் தீர்வு காண இயலாது. அங்குள்ள பெரும்பான்மை மக்கள் மற்ற பிரிவு மக்கள் நன்கொடை ஏற்றால் தான் தீர்வு. நன்கொடை கொடுக்க ஏராளமான கோவில்கள் உண்டு. இதில் ஏன் வழக்கு? உள்நோக்கம் தெரிகிறது. கூட்டுறவு சங்கம் சிதைக்க பட்டது. அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் கோவிலை சிதைத்து விடும். நீதி மன்றம் எழு உலகுக்கும் தீர்வு காண இயலாது. சட்ட பிரச்னைக்கு மட்டும் தீர்வு காண்பது எளிது.மக்கள் தேவைக்கு செயல்படும் இலவச அரசு நிர்வாகத்தை முடக்கி, விலை உயர்ந்த அரசியல் வாதி, வக்கீல், போலீஸ் ஆட்சி நடைபெறுகிறது. ?


R.RAMACHANDRAN
மே 13, 2025 07:23

எல்லோரும் சமம் என்பதை கடை பிடிக்காத கோயில்களுக்கு நன்கொடை வழங்காமல் இருப்பதே நல்லது. கிராமங்களில் நன்கொடை வசூலிக்க தீண்டாமை இல்லை. நன்கொடை வசூலித்துக் கொண்டு அவர்களை ஒதுக்கி வைப்பது என கொடுமையான தீண்டாமையை கடைபிடிக்கின்றனர் இந்நாட்டில்.


rama adhavan
மே 13, 2025 07:08

இதெல்லாம் தேவையற்ற வழக்கு. அப்படி பார்த்தால் சில பிரிவுகள் நடத்தும் உறைவிடங்களில் அப் பிரிவை சார்ந்தவர்களை மட்டுமே அனுமதிக்கன்றனர். அது தீண்டாமை கீழ் வராதா?


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
மே 13, 2025 07:50

என்ன ஒரு அபத்தமான கருத்து. பாதிக்கப்பட்டவர்களையும் ஆதிக்கம் செய்பவர்களையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கும் அநீதியான பார்வை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை