உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.20 ஆயிரம் லஞ்சம்; சிக்கினார் சார்பதிவாளர் ஜியாவுதீன்!

ரூ.20 ஆயிரம் லஞ்சம்; சிக்கினார் சார்பதிவாளர் ஜியாவுதீன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பதிவு செய்வதற்காக ரூ.20,000 லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் ஜியாவுதீன் கைது செய்யப்பட்டார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியம்பட்டியை சேர்ந்தவர் மகாராஜா. இவர் தனது மூதாதையரின் சொத்துக்களை பங்கு பிரித்து பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் ஜியாவுதீனை சந்தித்து விண்ணப்பித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=voe5xdox&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது மகாராஜாவிடம், ஜியாவுதீன் பத்திரம் பதிவு செய்வதற்கு முதலில் ரூ. 40,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து பேச்சு வார்த்தைக்கு பின் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் பதிவு செய்து தருகிறேன் என ஜியாவுதீன் தெரிவித்துள்ளார்.மகாராஜாவுக்கு லஞ்சம் கொடுக்க விருப்பமில்லை. அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின்படி, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று ஜியாவுதீனிடம் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரம் கொடுத்துள்ளார். பணத்தை தான் வாங்காத ஜியாவுதீன், பத்திர எழுத்தரின் உதவியாளர் எடிசன் இடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். அதன்படி அவரிடம் மகாராஜா ரூ.20 ஆயிரத்தை வழங்கினார். அவர் பணத்தை வாங்கிக் கொண்ட போது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். இதையடுத்து லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் ஜியாவுதீன் மற்றும் எடிசன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

chettinadu food
பிப் 15, 2025 20:00

எங்கள் கடையநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேரிடையாக இல்லை அதுக்கு என்று பத்திர எழுத்தர்கள் இருக்கிறார்கள் அவர்கள் நம்மிடம் வாங்கி அவர்களுக்கு தங்கமாகவோ அல்லது பொருளாகவோ அவர்கள் சொல்லும் இடத்தில் அனுப்பிவிடுவார்கள் .இது காலம் காலமாக நடப்பது .


Minimole P C
ஜன 29, 2025 09:01

TN is the highest in collecting stamp duty and registation ges. Totally it comes to 9% which is all India high. Most of the states including Kerala and Karnataka they ge only 5 %. There are states they ge 1%, 3% etc. Some states gove concessions to senior citizen, women, widow and service personnels etc. In TN weather price of the land increases or not Govt. increases guideline value of the land for collecting more revenue. This becomes the chance for the registrars office personnel to loot. Levy 3 % then corruption will get reduce atleast to 50%.


G Mahalingam
ஜன 29, 2025 08:19

லஞ்சம் கோபாலபுரத்து பங்கு இருக்கு. பிடிபட்ட அதிகாரிகள் 6 மாதத்தில் மீண்டும் வேலையில் இருப்பார்கள். அதே லஞ்சம் கொடுத்து மீண்டும் அமைச்சர்கள் ஆசியுடன் வேலைக்கு சேர்ந்து விடுவார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.


Kasimani Baskaran
ஜன 29, 2025 07:56

பொது மக்கள் சொத்தின் மதிப்பை குறைத்துக்காட்டி வரி ஏய்ப்பில் ஈடுபடுவதால் - சார் பதிவாளர்கள் தங்களின் பங்கை ரைட் ராயலாக பெறுவதுதான் இந்த லஞ்சம். என்ன நவீனப்படுத்தினாலும் அரசாங்கத்தை ஏமாற்றுவதை தடுக்கவேண்டும் என்றால் வரியை ஞாயமாக வைத்து வசூலிக்க வேண்டும். கறுப்புப்பணம் உருவாவதும் இங்குதான் - அம்பானியோ, கலாநிதி மாறனோ அல்லது அதாணியோ காரணமல்ல. பத்திரப்பதிவுக் கட்டணத்தை வானளவுக்கு வைத்திருக்கும் தீம்க்கா ஆட்சியையும் ஒரு காரணம் என்பதை உடன்பிறப்புக்கள் அறிக.


S Sivakumar
ஜன 29, 2025 10:44

முற்றிலும் உண்மை. மக்களின் மனநிலை பாதிக்கப்படாமல் இருக்க அரசுக்கு பங்கு உள்ளது.


RAMESH
ஜன 29, 2025 07:23

திராவிட மாடல் ஆட்சி


நிக்கோல்தாம்சன்
ஜன 29, 2025 07:19

திராவிட மாடல் என்று கூவும் மனிதர்கள் பலரும் ஊழல்வாதிகளாக இருப்பது வேதனை, இந்த ஊழல்வாத மதத்தில் கொண்டுவிடாமல் இருந்தா சரி


anbu
ஜன 29, 2025 07:02

தினமும் இரண்டு அல்லது மூன்று நபர்களை பிடித்து எல்லா துறைகளிலும் நடவடிக்கை எடுத்தால். நாட்டிற்ற்கு நல்லது லஞ்சம் வாங்காமல் வேலை கொடுத்தால் அதிலும் சிறந்தது


Seekayyes
ஜன 29, 2025 06:43

இதுதான் திராவிடியா கட்சிகளின் ஆட்சி முறை. இன்று சமூக ஊடகங்கள் மூலம் கடைவீதியில் நாறுகிறது. 70களில் கருணாநிதி ஆட்சியால் லஞ்சம் என்ற சொல் தமிழ்நாட்டில் அறிமுகபடுத்தப்பட்டு இன்று இமாலய வளர்ச்சி அடைந்துள்ளது. எம்ஜியார், ஜெயலலிதா, இபியஸ், ஸ்டாலின் ஆட்சிகளில் இது மேலும் விஸ்தாரமாக வளர்ந்ததே தவிர குறைந்துள்ளதாக சரித்திரம் இல்லை.


D.Ambujavalli
ஜன 29, 2025 06:34

‘நான் இத்தனை லட்சம் கொடுத்துதானே இந்த வேலைக்கு வந்தேன், அதை எப்படி மீட்பேன்’? என்கிறார் எத்தனை செந்தில் பாலாஜிகளுக்கு அழுது நூறு பேரில் பத்து பேர் வந்தார்களோ? நடவடிக்கை ‘அங்கே’’ இருந்து ஆரம்பித்தால், உடனடி இதய நோய், ஆபரேஷன், சிறையில் ராஜபோக வாழ்க்கை. Bail இல் வந்தாலும் அதே துறைகள் காத்திருக்கும் இந்த அரை டிக்கெட்டுகளை பிடித்து லஞ்ச ஒழிப்புத்துறை சும்மா பீற்றிக்கொள்ள வேண்டியதுதான்


ManiK
ஜன 29, 2025 04:18

4 வருடத்தில் ஸ்டாலின் திமுக அரசு செய்த ஒரே சாதனை என்ன என்றால் பல உயர்பதவியில் இது போன்ற ஊழல் அரக்கர்களை பணியமர்த்தியது மட்டுமே. இது தான் 60 ஆண்டு சமூகநீதி லட்ஷனம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை