உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வணிக வரித்துறைக்கு ரூ.11,160 கோடி வருவாய் 

வணிக வரித்துறைக்கு ரூ.11,160 கோடி வருவாய் 

சென்னை:கடந்த ஜூனில், ஜி.எஸ்.டி.,யில் மாநில அரசின் பங்கு போன்றவற்றால், தமிழக வணிக வரித்துறைக்கு, 11,160 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.தமிழக அரசின் வணிக வரித்துறைக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரியில் மாநில பங்கு, பெட்ரோல், டீசல், மதுபானங்கள் மீது விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரி, ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தீர்வு போன்றவற்றின் வாயிலாக வருவாய் கிடைக்கிறது.கடந்த ஜூன் மாதத்தில் வணிக வரித் துறையின் ஒட்டுமொத்த வருவாய், 11,160 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், 11,064 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த மாதம் கிடைத்த மொத்த வருவாயில், ஜி.எஸ்.டி.,யில் மாநில அரசின் பங்கு, 6324 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஆண்டு ஜூலையில், 5733 கோடி ரூபாயாக இருந்தது.இதே மாதங்களில் மதிப்பு கூட்டு வரி, 5331 கோடி ரூபாயில் இருந்து, 4836 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதற்கு கடந்த ஜூனில், மது வகைகள் விற்பனை குறைந்திருப்பதே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி