உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏதோ நம்மால முடிஞ்சது... சி.ஐ.டி.யு., கைங்கர்யத்தால் சாம்சங் நிறுவனத்துக்கு ரூ.840 கோடி இழப்பு!

ஏதோ நம்மால முடிஞ்சது... சி.ஐ.டி.யு., கைங்கர்யத்தால் சாம்சங் நிறுவனத்துக்கு ரூ.840 கோடி இழப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சி.ஐ.டி.யு., சங்கத்தினர் நடத்திய போராட்டத்தால், 840 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'சாம்சங்' நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.'சாம்சங் இந்தியா' தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரிய விண்ணப்பத்தின் மீது, உடனடி நடவடிக்கை கோரி, உயர் நீதிமன்றத்தில், சங்க நிர்வாகி எல்லன் தாக்கல் செய்த மனு, நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ''தங்கள் நிறுவன பெயரை பயன்படுத்தக் கூடாது என, தொழிலாளர் நல துணை ஆணையரிடம், சாம்சங் நிறுவனம் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசு, தொழிற்சங்க பதிவாளர் மற்றும் தொழிலாளர் நல துணை ஆணையருக்கு, நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், மனு, நேற்று நீதிபதி மஞ்சுளா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.சாம்சங் நிறுவனம் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, ''நிறுவனம் பெயரில் தொழிற்சங்கம் துவங்குவது, அடிப்படை உரிமையாகாது. நிறுவன நடவடிக்கையில், அரசியல் தலையீட்டை ஏற்க முடியாது. வர்த்தக குறியீடான சாம்சங் என்ற பெயரை, தொழிற்சங்கம் பயன்படுத்த முடியாது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், 840 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் எங்களையும் இணைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.தொழிலாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ''தொழிற்சங்க சட்டத்தின் கீழ் சங்கத்தை பதிவு செய்வது அடிப்படை உரிமை தென்கொரியாவில் சாம்சங் பெயரை பயன்படுத்தி தொழிற்சங்கம் துவக்கப்பட்டுள்ளது. பல தொழிற்சங்கங்கள் அந்தந்த நிறுவனங்களின் பெயரில் துவங்கப்பட்டுள்ளன. தொழிற்சங்கத்துக்கும் தொழிலாளர் நலத்துறைக்கும் இடையிலான வழக்கில் நிறுவனத்தை கேட்க வேண்டியதில்லை'' என்றார்.இதையடுத்து, சாம்சங் நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்று, நவம்பர் 11 க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

Sankara Subramaniam
அக் 24, 2024 21:57

வெளி நாட்டு கம்பெனி கள் தமிழ் நாட்டை விட்டு ஓடிவிடும் வாழ்க திராவிடம் citu


Venkatesan Anantharaman
அக் 24, 2024 20:52

Sterlite was a national, strategic asset, bringing in foreign exchange besides meeting indigenous copper needs. We were world leaders in copper production. China stood second. It was initially the communists here with Chinese money who d problems with state government support, resulting in total closure of the Tuticorin unit. Its again the Chinese who are at the back of Samsung workers agitation here. Fearing fierce competition from Samsung, Chinese with TN Government and TN communists support, will cause the total closure of Samsung plant in TN sooner or later.. Seeking recognition of CITU Union is their first step.


C Bhaskar
அக் 24, 2024 15:51

விவோ ஒன் பிளஸ் போன்ற விலையுயர்ந்த சீன போன் கம்பெனிக்கு எதிராக போராட வேண்டியது தானே இந்த சீன அடிமைகளுக்கு


R.Varadarajan
அக் 24, 2024 06:26

உருப்படாதவங்க சுய புத்தி இழந்தவர்கள். வேலை இழந்து நடுத்தெருவிற்கு வந்துவிட வாழ்த்துக்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 24, 2024 00:06

அனைத்து ஊழியர்களுமா போராடினார்கள்? போராடியவர்கள் குறைவான எண்ணிக்கையுடையோர்தான் .....


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2024 21:19

புலிகேசி மன்னர் முதலீடு பற்றி அளந்துவிட்டது அனைத்தும் அக்மார்க் உண்மை என்று வைத்துக்கொண்டாலும் அதில் ஒரு நிறுவனம் கூட தமிழ்நாட்டில் முதலீடு, விரிவாக்கமோ செய்ய வாய்ப்பில்லை ........ தமிழ்நாட்டில் உள்ள மொத்த இளைஞர்களும் எந்தத்தொழிலும் / வேலையும் செய்யாமல் ஊ பீ யீ ஆக மாறவேண்டும் என்பது புலிகேசி மன்னரின் எதிர்பார்ப்பு ...... நடக்குமா ???? தெரியாது ....


rama adhavan
அக் 23, 2024 19:14

இப்படி கொடி பிடித்து நிறுவனங்களுக்கு கோடிகள் நட்டம் விளைவித்தால் எந்த அந்நிய முதலீடு பெரிய உற்பத்தி தொடங்க தமிழ்நாட்டுக்கு வரும்? அந்நிய முதலீடு சிறிய மால்கள் கட்டதான் வரும். ஏனெனில் இங்கு கம்யூனிஸ்ட்களின் தொந்தரவு இருக்காது. மேலும் எந்த பெரிய கட்சிகளும் கம்யூனிஸ்ட்களை கூட்டணியில் சேர்க்க கூடாது. அப்போது தான் வாலை ஆட்ட முடியாது.


Jagan (Proud Sangi)
அக் 23, 2024 18:46

சீனாவை விட்டு சாம்சங் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தயாரிப்பை வேறு நாட்டுக்கு மாற்றுகிறார்கள். இந்தியாவில் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டால் CITU போன்ற அல்லக்கைகளை வைத்து தொல்லை கொடுப்போம் என்று சீன மற்ற நிவனங்களுக்கு விடும் எச்சரிக்கை. ஸ்டெர்லிட் மூட வச்சான் சீனன். ஆம்பூர் தோல் /திருப்பூர் சாய்ப்பட்டறையில் இல்லாத மாசு ஸ்டெர்லிட்டால் வர சாத்தியமே இல்லை. சீனாவிடம் இப்பொ தாமிரம் இறக்குமதி செய்கிறோம் அப்புறம் எப்பிடி சீனனுடன் ஏற்றுமதியில் போட்டி பொட முடியும். வியட்நாமில் சீனா பருப்பு வேக வில்லை. இங்கு தேசபத்க்தி இல்லாத இடது சாரிகள் எனும் அல்லக்கைகள் உள்ளார்கள்


sankaranarayanan
அக் 23, 2024 18:28

அமினா புகுந்த வீடும் ஆமை புகுந்த வீடும் உருப்படாது அதுபோலத்தான் கம்மிகள் உள்ளே புகுந்தால் நாட்டிலே எந்த மாநிலமும் முன்னேற முடியாது இது நமது நாட்டில் எல்லா மாநிலங்களிலும் அனுபவம் உள்ளது


R Dhasarathan
அக் 23, 2024 17:44

வேதனை, தொழிற்சங்கங்களாள் மூடிய நிறுவனங்களை பட்டியல் இட முடியாது, தமிழகம் இழந்தது அதிகம், ஸ்டாண்டர்ட் மோட்டார், பின்னி மில், முதற் கொண்டு சிம்ப்சன் .... மிகப் பெரிய பட்டியல்....