உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் அதே அலுவலகம்: ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

மீண்டும் அதே அலுவலகம்: ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூர் அருகே பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் பெற்றதாக வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டு உள்ளார்.இதுபற்றிய விவரம் வருமாறு; திருப்பூர் அருகே தொட்டிபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்கு பொறுப்பு கிராம நிர்வாக அலுவலராக நாசர் அப்துல் ரகுமான்(40) என்பவர் உள்ளார்.இன்று பட்டா பெயர் மாறுதலுக்காக ரூ.5 ஆயிரத்தை நாசர் அப்துல் ரகுமான் லஞ்சமாக பெற்றுள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் நாசர் அப்துல் ரகுமானை கைது செய்து அழைத்துச் சென்றனர். கடந்த மாதம், இதே அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க, 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். தற்போது மீண்டும் அதே அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய இன்னொரு விஏஓ கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Raghavan
ஜூலை 08, 2026 06:37

இவன் சிறுபான்மையினர் என்ற அந்தஸ்தில் மீண்டும் வேலைக்கு வந்துவிடுவான். இதேபோல் உள்ள வழக்குகளை குறைந்தது ஒரு வருடத்திற்குள் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.


Natarajan Ramanathan
ஜூலை 07, 2026 22:44

பொறுப்பு விஏஓ ஆக இருக்கும்போதே இவ்வளவு லஞ்சம் வாங்குது


VIJAYA RAVI Chakravarthi
ஜூலை 07, 2026 21:58

Remove them from their job immediately. Give job to new honest person and set a good example


R S BALA
ஜூலை 07, 2026 20:47

அவ்வப்போது இது போன்ற காமடி செய்திகளும் தேவைதான்


V RAMASWAMY
ஜூலை 07, 2026 19:33

பழைய அரசின் டெண்டர் ரத்து செய்வது போல் பழைய அரசு லஞ்ச பணியாளர்களையும் பணி நீக்கம் ஒஸ்வுதிய நீக்கம், அபராதம், சிறை தண்டனை கொடுத்து அவர்களுக்கு துணை மூலம் இவர்கள் மீதும் தண்டனைகள் பாயவேண்டும்.


visu
ஜூலை 07, 2026 19:19

நீங்க எடுக்கும் நடவடிக்கை பொறுத்துதான் லஞ்சம் வாங்குவது நிற்கும் உதாரணமாக அணைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலம் அளிக்கப்பட்டு அவை ஏற்கப்படுவது மறுக்கப்படுவது தக்க காரணங்களுடன் ஆன்லைனில் பதிவுசெய்தலே போதும்


S.VENKATESAN
ஜூலை 07, 2026 18:58

அந்த பணத்தை இன்னும் யார் யார் பங்கு போடுவாங்களோ அவங்களுக்கு பிரச்சினை இல்லை


konanki
ஜூலை 07, 2026 18:50

எல்லாத்துக்கும் ரேட் போட்டு லஞ்சம் வாங்கும் திருட்டு டாஸ்மாக் டூப்பாக் கூர் திராவிஷ பணப் பேய்கள் கூட்டம்


konanki
ஜூலை 07, 2026 18:48

திருட்டு டூப்பாக் கூர் டாஸ்மாக் திராவிஷ அரசில் லஞ்சம் குடுக்காம ஓரு வேலை கூட நடக்காது. புணத்து வாயில் போட்ட வாக்கரிசையைக் கூட திருடி தின்னும் கலாச்சாரம்.


என் பெயர் ராஜாராம்
ஜூலை 07, 2026 18:18

அஞ்சு பத்து வாங்குபவர்களை மட்டும் பிடித்து உள்ளே போடு... அப்போ நாம நேர்மைன்னு எல்லோருக்கும் தெரியும்.. நேர்மை நேர்மைன்னு சொல்லிட்டே நாம.....


Venkatesan Srinivasan
ஜூலை 07, 2026 19:19

லஞ்சம் வாங்கும் பணியாளரின் மேல் அதிகாரிகளின் சம்பளம், இன்கிரிமெண்ட், பதவி உயர்வு, படிகள், சலுகைகள் "கட்" அல்லது குறைப்பு என்று சட்டம் கொண்டு வந்தால் சற்றே மாறுதல் வர வாய்ப்பு உள்ளது. அதிகாரிகளின் கடமை தம் கீழ் பணியாளர்கள் சரியாக வேலை செய்வது மட்டுமல்லாமல் ஒழுக்கமாகவும் சட்டங்களை மதித்து நடக்கின்றனரா என்று கண்காணிப்பு செய்வதும் அடங்கும். ஒரு அரசு ஊழியர் சட்ட மீறல்கள் செய்கின்றாரா இல்லையா என்ற அடிப்படை தகவல் அறிவு இல்லாமல் ஒரு அதிகாரி அந்த பணியாளரை நிர்வகிக்க முடியாது. ஒழுங்கீனங்கள் சரிவர கண்டுபிடித்து நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் அரசு பணிகளில் குற்ற செயல்கள் தலையெடுக்கும். லஞ்ச குற்ற நடவடிக்கைகளில் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட ஊழியரின் மேல் அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் இவ்வாறு தான் கண்காணிப்பு நடவடிக்கைகள் உள்ளன. எனவேதான் அங்கே பணியாளர்கள் குற்ற செயல்கள் குறைவு.


சமீபத்திய செய்தி