உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4 ஆண்டுகளாக அதே பல்லவி; சென்னையில் பருவ மழையை சமாளிக்க மோட்டார் தயார் என்கிறார் அமைச்சர்

4 ஆண்டுகளாக அதே பல்லவி; சென்னையில் பருவ மழையை சமாளிக்க மோட்டார் தயார் என்கிறார் அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், 1,436 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன,'' என, நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள, கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில், துணை முதல்வர் உதயநிதி நேற்று ஆய்வு செய்தார். பின், அமைச்சர் நேரு, மேயர் பிரியா ஆகியோர் கூறியதாவது: சென்னையில் நேற்று காலை வரை, 3.8 செ.மீ., மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, எண்ணுாரில், 13.6 செ.மீ., மழை பெய்துள்ளது.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில், நீரை வெளியேற்றும் வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தேவைக்கு ஏற்ப மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு, நிவாரண மையங்களுக்கு அழைத்து செல்ல, மாநகராட்சிக்கு சொந்தமாக, 36 படகுகள் உட்பட, 136 படகுகள் தயார் நிலையில் உள்ளன.மாநகராட்சியில் மழைநீரை வெளியேற்ற, 100 ஹெச்.பி., திறன் உடைய, 150 மோட்டார் பம்புகள், டிராக்டர் மேல் பொருத்தப்பட்ட, 500 மோட்டார் பம்புகள் உட்பட பல்வேறு திறனில், 1,436 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. வடிகால்வாய் பணிக்காக துார்வாரும் வாகனங்கள் உட்பட, 478 வாகனங்கள், 489 மர அறுவை இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.சென்னையில் நான்கு ஆண்டுகளில், 1,217 கி.மீ., நீள மழைநீர் வடிகால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன. இதுவரை, 1,136 கி.மீ., மழைநீர் வடிகால்வாய்களில், 1.06 லட்சம் வண்டல் வடிகட்டி தொட்டிகளும் துார்வாரப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பில், 193 இடங்களில் நிவாரண மையங்களும், 150 மைய சமையல் கூடங்களும் தயார் நிலையில் உள்ளன. மழைக்கால பணிகளில் அதிகாரிகள், துாய்மை பணியாளர்கள் உட்பட, 22,000 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

திகழ்ஓவியன்
அக் 16, 2025 13:01

இன்றய கால கட்டத்தில் முக்கிய நகரங்களில் நீர் தேங்காமல் இருக்க செய்யவே முடியாது, எல்லோரும் வேலை தேடி சென்னை வந்து விட, MGR காலத்தில் நீர் நிலை எல்லாம் காலேஜ் ,உதரணம் பொத்தேரி யில் ஒரு கல்லூரி , திருவேற்காடு அருகே ஏரியில் கல்லூரி இப்படி எல்லா நீர் நிலைகளில் காலேஜ் தொடங்கி நீர் செல்லும் வழியை அடைத்து விட தண்ணீர் எப்படி வெளி ஏறும், ஏதோ மோட்டார் வித்தை காட்டி ஆவது நீர் தேங்காமல் செய்கிறார்களே என்று சந்தோசம் அடைவோம்


திகழ்ஓவியன்
அக் 16, 2025 12:29

முன்னர் மழை பொழிந்தாள் தண்ணீர் நின்றாள் 3 நாள் ஆகும் வடிய அனால் இன்று இரவு பெய்தால் காலையில் தண்ணீர் நிற்பதில்லை , 30 ஆண்டு ஆண்ட ADMK எந்த திட்டமிடல் இல்லை, எப்போதும் DMK வந்து தான் ஏதாவது முயற்சி டபுள் ENGINE சர்க்கார் ஆளும் மாநிலம் எல்லாம் என்ன எழவில் இருந்தது பார்த்தோமே, அனால் சிங்கள் ஆளா ஸ்டாலின் சேயும் ஏற்பாடுகள் அமோகம், என்னவோ மழை பெய்தால் தண்ணீர் நிற்கவே கூடாது என்றால் செவ்வாய் கிரகம் அனுப்பிவைகிறோம் , மழை பொழிந்து காலையில் தண்ணீர் நின்றாள் கேளுங்கள்


Suresh Kuppuswamy
அக் 16, 2025 12:28

என்னது பல்வலியா? பொய்யா சொல்லிக்கிட்டு இருந்தால் இப்படி தான். வாயெல்லாம் சொத்தையா இருக்க போகுது, போய் பல் டாக்டர் ஐ பாரு


V Venkatachalam
அக் 16, 2025 11:38

நாங்க காரை படகில் ஏற்றிச் செல்லும் அளவுக்கு பெரீய்ய படகு வச்சிருக்கோம். பொது மக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறோம். ரெயின்தான் லேட்டா வருது. ரெயின் வரும் போது மக்கள் வெளியே வரவேண்டாம்.


N. Ramachandran
அக் 16, 2025 11:37

மழை கால தலை நகர் வேலூர். கோடை கால தலைநகர் ஊட்டி... குளிர் கால தலைநகர் சென்னை. இப்படி மாற்றம் கொண்டுவர சட்ட சபைல ஒரு தீர்மானம் போட்டு... 3 தலைமை செயலகம் கட்டி 100000 கோடி ஆட்டைய போடலாமே... மாடல் ஆட்சில எதுவும் நடக்கலாம்...


RAAJ68
அக் 16, 2025 11:36

வழக்கம்போல் வேளச்சேரி மடிப்பாக்கம் கீழ்கட்டளை நங்கநல்லூர் ஆதம்பாக்கம் பகுதியில் வெள்ள நீர் தேங்கி மக்கள் துன்பத்துக்கு ஆளாகப் போகிறார்கள் இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு என்பது கிடையாது.. இரண்டு மூன்று நாட்கள் மின் சப்ளை இருக்காது அவதியோ அவதிதான் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பொருட்களை சேதப்படுத்த போகிறது வழக்கம் போல் அரசியல்வாதிகள் மாற்றி மாற்றி அரசியல் செய்வார்கள் அவ்வளவு தான்


Venugopal S
அக் 16, 2025 11:15

தமிழகத்தில் பாஜக பதவிக்கு வந்தால் சென்னையில் சாக்கடை அடைப்பை எடுப்பதற்கு கூட டெல்லியில் மத்திய அரசிடம் அனுமதி பெற்று தான் செய்ய வேண்டும் என்பார்கள்.அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை!


Raman
அக் 16, 2025 11:30

absolute truth


பெரிய ராசு
அக் 16, 2025 12:44

நீங்க பேசுறதுல ஓர் நியாயம் வேணாமா...


Sri Ra
அக் 16, 2025 11:12

நாங்க மாத்தி மாத்தி பேச மாட்டோம் .


Keshavan.J
அக் 16, 2025 10:54

Why last 4 years this story is going on for last 60 years. When both these dravidiya parties encroached the lake and did real estate business this dilemma started.


Modisha
அக் 16, 2025 10:52

உண்மையில் solla வேண்டும் என்றால் திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணி மேற்கொண்ட piragu தான் நிலமை படுமோசமாகி உள்ளது . சாதாரண மழைக்கு கூட சாலைகளில் நீர் தேங்குகிறது . இது என்ன புது மாதிரி reverse engineering என்று தெரியவில்லை . அதிமுக ஆட்சி ஆயிரம் மடங்கு தேவலாம் .


சமீபத்திய செய்தி