உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாம்சங் - சி.ஐ.டி.யு., சமாதான முயற்சியில் அரசு தரப்பு தீவிரம்

சாம்சங் - சி.ஐ.டி.யு., சமாதான முயற்சியில் அரசு தரப்பு தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவு கொண்டு வர, சாம்சங் நிறுவனம் மற்றும் சி.ஐ.டி.யு., சங்கத்தினரை சமாதானப்படுத்தும் முயற்சியில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து, தொழில்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சங்க அங்கீகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அரசால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை அதிகம் இருக்கும். வேலைக்கு வந்த தொழிலாளர்களுக்கு கூடுதல் நேரம் வேலை வழங்கி, அதற்கு ஏற்ப கூடுதல் சம்பளமும் வழங்கி, சாம்சங் நிறுவனம் விழாக்கால உற்பத்தியை முடித்து விட்டது. வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தால், அதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தான் சம்பள இழப்பு ஏற்படும். அவர்களின் குடும்பத்தினருக்கும் பாதிப்பு உருவாகும். எனவே, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு வருமாறு தொழிலாளர்களை அறிவுறுத்துமாறு, சி.ஐ.டி.யு., தரப்பினருடன் பேச்சு நடத்தப்படுகிறது. தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கும் வகையில், 'தொழிலாளர்களின் பணி பாதுகாப்புக்கு சங்கம் அவசியம். தொழிலாளர்களின் கோரிக்கையை முழுதுமாக புறக்கணிக்க முடியாது' என்று, சாம்சங் அதிகாரிகளுடனும் பேச்சு நடத்தப்படுகிறது. போராட்டத்தை கைவிட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Parthasarathy Badrinarayanan
அக் 14, 2024 06:35

சிட்டு சங்கத்தை அங்கீகரிக்கக் கூடாது.


ஆரூர் ரங்
அக் 13, 2024 14:49

கோரிக்கையைப் பார்த்தீர்களா? தென் கொரியாவில் தரும் அதே சம்பளம் இங்கும் தரவேண்டுமாம். அதுக்கு அவங்க இங்கே வராம அங்கேயே விரிவாக்கம் செய்து விட்டிருப்பார்களே.உண்டியல்கள் தானாகவே கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஆளை விட்டு கப்பம் மாமூல் வசூலிப்பது தீயமுக வுக்குப் புதிதா? அவர்களது திருவிளையாடலால் மூடப்பட்ட ஆலைகள் ஏராளம்.


M Ramachandran
அக் 13, 2024 11:35

தமிழ்நாடும் கேரளலாவும் பெரிய தொழிற்சாலைக்ககள் தொடங்க உகுந்த இடங்களல்ல . பல நிறுவனகள் சத்தம் போராடாமல் மூடி விட்டு சென்று விட்டான. கம்மிஷின் கரப்ஷன் அரசுகள் இயங்கிக்கொண்டிருக்கின்ற. எங்கு கம்யூனிஸ்டுக்கள் எண்ணிக்கை அதிகமோ அங்கெல்லாம் தொழிற்சாலைகல் மூட படுகின்றன. தமிழ் நாட்டு விஷயமே வேற லெவல். இஙகு குடைச்சல் கொடுப்பவர்கள் ஆளும் அரசு அமைச்சர்கள் அதிகாரிகள். காமராஜர் அரசிற்கு பிறகு தமிழ் நாட்டின் முன்னேற்றம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இப்போர் சமீபத்தில் டாடா குழுமம் தோளில் தொடங்கா புரிந்துணர்வு போட்டார்கள். இது நல்ல படியாக வர வேண்டும் என்று தான் வேண்டி கொள்ள முடிகிறது. கடந்த பல ஆட்சி காலங்களில் ஏதாவது பிரச்சனை. ஊழல் தலை விரித்தாடுகிறது . மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருக்கு. டிராவிடா ஆட்சியை ஆரம்பித்து கருணாநிதியை முதலில் அஆட்சியில் அமர்ந்த போது நெய் வேலியில் கம்யூனிஸ்ட்டு தொளிர்ச்சனகம் தொளிலார்கள் தாக்க பட்டார்கள். காரணம் சம்பள உயர்விக்கா அல்ல. தொ மூ ச தொடங்க தான். இப்போர் கம்யூனிஸ்ட்டுகள் தீ முக்க வின் ஒரு அங்கமாகி தொங்கி கொண்டிருக்கிறார்கள்.


M S RAGHUNATHAN
அக் 13, 2024 10:49

Samsung is a South Korean Company. It is a competitor to Chinese Electronic Companies. It was reported that many international companies are relocating their plants and business interests from China to other Asian Countries. Obviously India is the first choice. So Chinese government is instigating the CITU indirectly through their political supporter I e. CPIM to disrupt the South Korean Company. It was reported that a unit plant of manufacturing Compressors was relocated to Chennai from China . Now understand why the communists are agitating. Lastly, the Communists are always anti nationals, anti India and anti development. Ask Pinarayi Vijayan.


veeramani
அக் 13, 2024 09:16

தமிழக அரசிற்கு ஒரு வேண்டுகோள் தமிழகம் தொழில் பாதையில் முன்னேறவேண்டுமானால் தொழில்சங்கங்களை ஒழித்துகட்ட வேண்டும். இதில் கட்சி பாகுபாடு பார்த்தல் கூடாது. அதிலும் லெப்ட் கம்யூனிஸ்ட்களை தமிழகத்தை விட்டு துரத்துங்கள். கூட்டணியிலும் இருந்து கழட்டிவிடுங்கள். மதிப்பிற்குரிய முதல்வர் பல வெளிநாடுகள் சென்று முதலீடுகளை எப்படியோ அழைத்துவருகிறார். ஆனால் லெப்ட் கம்யூனிஸ்ட்கள் அப்பாவி தொழிலாளிகளை தூண்டிவிட்டு தொழில்சாலைகளை முட நினைகின்றனர். தமிழ்நாட்டிற்கு கம்யூனிஸ்ட்கள் வேண்டவே வேண்டாம்


பாமரன்
அக் 13, 2024 09:16

மற்ற எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டாகிவிட்டது... சிஐடியு ஆமையை சாம்சங் ஆலை உள்ளே அனுமதிக்கிறது மட்டுமே பெண்டிங்... கூடவே கூடாது... அவர்கள் செய்யவும் மாட்டார்கள்... அநேகமாக ஸ்வீட் பாக்ஸ் பரிமாரப்பட்டு கூடிய விரைவில் இன்டெர்வல் விடுவாங்கன்னு நம்பப்படுகிறது... பார்ப்போம்...


vbs manian
அக் 13, 2024 09:10

பாலுக்கும் காவல். பூனைக்கும் தோழன்.


Rajarajan
அக் 13, 2024 08:57

அதுஎப்படி ஒரே சமயத்தில் இரு குதிரையில் பயணம் செய்ய முடியும் ?? தூக்கி வீச வேண்டியதை வீசினா, .... புரிஞ்சுதா சூட்சமம் ?? அதுக்குத்தான் அதுங்க அலையறதே.


நிக்கோல்தாம்சன்
அக் 13, 2024 08:01

தமிழ் நாட்டை சீரழிக்கும் CITU மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது விடியா குடும்ப அரசு ?


kannan sundaresan
அக் 13, 2024 07:26

அமைச்சர் ராஜா சாம்சங் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். என்ன ஆச்சு. இவகளால் இதை தீர்க முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை