உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 நாள் கெடு விதித்த செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்!

10 நாள் கெடு விதித்த செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்!

சென்னை: அதிமுகவை ஒன்றிணைக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.அதிமுகவில் பிரிந்து கிடக்கும் அணிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று அக்கட்சியில் இருந்து அவ்வப்போது கலகக்குரல்கள் எழுவது வழக்கம். அதில் லேட்டஸ்ட்டாக குரல் எழுப்பியர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.அவ்வவ்போது சட்டசபையிலும், கட்சியின் நிகழ்ச்கிகளிலும் பட்டும் படாமல் நடந்து கொண்டிருந்த செங்கோட்டையன், அதிமுகவில் பிரிந்து இருந்த அணிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று குரல் எழுப்ப ஆரம்பித்தார்.நேற்று நிருபர்களை சந்தித்த அவர், அணிகளை ஒன்றிணைக்க அதிமுகவின் பொதுச் செயலாளர் இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதிப்பதாக நேரடியாகவே அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந் நிலையில் அதிமுகவில் உள்ள கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செங்கோட்டையன் ஆதரவாளர்கள் சிலரது கட்சிப்பொறுப்புகளும் பறிக்கப்பட்டுள்ளன.அவர்களின் விவரம் வருமாறு: கே. ஏ. சுப்ரமணியன் - நம்பியூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி - நம்பியூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் குறிஞ்சிநாதன் - கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர்தேவராஜ் -அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் - அத்தாணி பேரூராட்சி கழக செயலாளர் வேலு - அத்தாணி பேரூராட்சி கழக துணைச் செயலாளர் மோகன்குமார் - ஐடி பிரிவு துணை செயலாளர், ஈரோடு திண்டுக்கல்லில் இபிஎஸ் தங்கியிருக்கும் தனியார் ஹோட்டலில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, தங்கமணி, விஜயபாஸ்கர், நத்தம் விசுவநாதன், சீனிவாசன், காமராஜ் ஆகியோர் இன்று காலை முதல் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை முடிவில், செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வேதனை இல்லை; மகிழ்ச்சி: செங்கோட்டையன் கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கியதால் வேதனை இல்லை; மகிழ்ச்சியே. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்; தர்மம் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கருத்து கூறினேன். என்னிடம் விளக்கம் கேட்காமலேயே நடவடிக்கை எடுத்துள்ளனர். விளக்கம் கேட்டிருக்க வேண்டும் என் நலன் கருதி பேசவில்லை. கட்சியின் நலன் கருதித்தான் பேசினேன். அதிமுகவை ஒருங்கிணைக்கும் எனது பணி தொடரும். கட்சிப்பதவியை பறிப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும்.: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Perumal Pillai
செப் 06, 2025 13:39

கனவில் இவர் மண்ணை அள்ளி போட்டு விடுவார் போல தெரிகிறதே


SUBRAMANIAN P
செப் 06, 2025 13:36

சீக்கிரமே செங்கொட்டையனை திமுக அரசருக்கு மலர்க்கொத்து கொடுத்து திமுகவில் இணையும் செய்தியை பார்க்கலாம்.


SUBRAMANIAN P
செப் 06, 2025 13:34

எடப்பாடி தலைவருக்குரிய சரியான திசையில்தான் போகிறார். கண்ணாபின்னானு நெனச்சத்தையெல்லாம் கருத்தா போடாதீங்க..


Indian
செப் 06, 2025 13:31

பத்து நாள் கெடுவுக்கு பத்து நிமிடத்தில் கதை முடிந்து விட்டது


Balamurugan
செப் 06, 2025 13:21

ADMK காலி. அண்ணாமலையை நீக்கியதால் பிஜேபி யும் காலி


Rajan A
செப் 06, 2025 13:20

தோற்றால் இருக்கவே இருக்கு பாஜகவுடன் சேர்ந்த கூட்டணியால் தோற்றோம் என சப்பைக்கட்டு. ஈகோ படு குழியில் தள்ளிவிடும் .


Palanisamy Sekar
செப் 06, 2025 13:17

எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற அறிவு அழிவையே கொடுக்கும். என்றைக்கு சசிகலா காலில் விழுந்து முதல்வர் பதவியை பெற்றாரோ அப்புறமா அதே சசிகலாவையே கட்சியிலிருந்து நீக்கியவர் இந்த எடப்பாடி பழனிச்சாமி இன்றும் அதனையே தொடர்வது வேடிக்கை வினோதம். தனக்கு ஆபத்து தனது பதவிக்கு ஆபத்து என்கிற எண்ணத்தில் கட்சியிலிருக்கும் ஒவ்வொருவரையும் நீக்கிக்கொண்டே போனால் பிறகு இதே பழனிச்சாமி அறிவாலயத்தில்தான் தஞ்சம் புகுவார். கூடிப்பேசி குறைகளை களைந்து ஒன்றுபட்டு செயல்பட்டால் நிச்சயம் அதிமுக என்கிற ஆலமரத்தை வீழ்த்த எவருமே கிடையாது. ஆனால் அதே ஆலமரத்தை ஒவ்வோர் விழுத்துக்காக வீழ்த்திக்கொண்டே போனால் நிச்சயம் இதன் பின்னணியில் திமுகவுக்கு உதவுகின்ற போக்கையே காணமுடிகின்றது. கடந்த ஐந்தாண்டுகளில் ஸ்டாலின் இவர்மீது ஒரு வழக்கும் தொடுக்காமல் குறைந்தபட்சம் மிரட்டல் கூட இல்லாமல் பார்த்துக்கொண்டார் என்றால் திமுகவின் பினாமியாகவே பழனிச்சாமி இருப்பார் போலும். பத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்தும் அதன் காரணத்தை அறியாமல் உணராமல் ஒவ்வொருவரையும் நீக்கிக்கொண்டே சென்றால் இது அழிவிற்கான துவக்கம் என்பதை உறுதியாக சொல்லலாம். சர்வாதிகார போக்கில் தலைக்கனத்தில் பழனிச்சாமி.


Shekar
செப் 06, 2025 13:10

விடியலுக்கு லைன் க்ளியர் ஆகிகொண்டே போகிறது. 2026 இல் இனி அல்பமாக வருசத்துக்கு 30 ஆயிரம் கோடி சம்பாரிக்காமல், 50 ஆயிரம் கோடி சம்பாரிக்க இப்போதே திட்டமிடலாம் .


Tamilan
செப் 06, 2025 13:04

சாவின் தமிழர்களுக்கு அதிமுகவுக்கு எதிரான அடுத்த அஸ்திரம் காலி .


Oviya Vijay
செப் 06, 2025 12:57

தானே ஒரு செல்லாக்காசு (டம்மி பீஸ்) என்பதை இபிஎஸ் உணரப் போகும் தருணம் 2026 தேர்தல் முடிவுகள் வெளியாகப் போகும் நாளில் மட்டுமே... அதுவரை இவர் திருந்த வாய்ப்பில்லை... இவரை ஏதோ பெரிய அளவில் நினைத்துக்கொண்டு ஷா மற்றும் ஜீ உள்பட பலரும் இவருக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் இவரது கால் தரையில் படாத வண்ணம் உயர்ந்து நிற்பது போல் இவரே கனவு கண்டு கொண்டிருக்கிறார்... அதிமுகவின் முடிவு (அழிவு) என்பது வெகு தொலைவில் இல்லை...


சமீபத்திய செய்தி