உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிறிஸ்துவர் என்பதால் விஜய்க்கு சொம்பு துாக்குவதா: முருகானந்தம்

கிறிஸ்துவர் என்பதால் விஜய்க்கு சொம்பு துாக்குவதா: முருகானந்தம்

புதுக்கோட்டை: ஹிந்து முன்னணி மாநில செயலர் முருகானந்தம் அளித்த பேட்டி:கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன், 'கருப்பர் கூட்டம்' என்ற பெயரில், முருகக் கடவுளுக்கான கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி பாடல்கள் பாடப்பட்டன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஹிந்து முன்னணி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில், ஹிந்து கடவுள்கள் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருகின்றன. சினிமாவிலும் இதையே செய்கின்றனர். ஹிந்துக்களிடம் போதிய விழிப்புணர்வு இருந்திருந்தால், இதெல்லாம் தொடர்ந்திருக்காது. தற்போது ஹிந்துக்களை ஒன்றுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதனாலேயே, மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி, அதற்கான முயற்சியில் இறங்கியபோது, பலரும் எதிர்த்தனர். ஆனால், இப்போது நடிகர் விஜய் கிறிஸ்துவர் என்பதால், அவருக்கு பலரும் சொம்பு துாக்கிக் கொண்டு அலைகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V.Mohan
ஜூலை 14, 2025 15:29

முருகானந்தம் சொல்வது முற்றிலும் உண்மை. ஆமாம் திருவாளர் விஜய் எதற்கு திடீரென்று அரசியலில் நுழைந்தார் ? அரசியலில் நுழைவதற்கு முன்பு தனது கொள்கைகள் இவை இவை என்று என்னிக்காவது சொல்லியிருக்காரா ??.இல்லை அரசியலில் இவர் தான் எனது தலைவர் என்றாவது சொல்லி இருக்கிறாரா ?? சரிங்க அதுவும் வேண்டாம் எந்த எந்த விஷயங்கள் எனக்கு தமிழக அல்லது இந்திய அரசியலில் பிடிக்கவில்லை அதை செய்வது தப்பு செய்பவர்களை எதிர்க்கிறேன் என்று சொல்லி உள்ளாரா ?? ஏழை எளிய மக்கள் இன்னின்ன விஷயங்களில் அரசின் செயல்பாடுகளால் அவதிப்படுகிறார்கள் . எனவே அதற்கு மாற்று வழியை என்னால் செய்யமுடியும் என்றாவது சொல்லி இருக்கிறாரா ?? எந்தவித கொள்கையையும் பின்பற்றாத ஒருவர் திடீரென்று நான் கட்சி ஆரம்பிக்கிறேன் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பணியாற்ற எனக்கு பதவி கிடைக்க உங்களது ஓட்டுக்களை எனது கட்சிக்கு போட்டு என்னை தேர்ந்தெடுங்கள் என்று எந்த அடிப்படையில் கேட்கிறார் ???? . இந்த கோரிக்கையை விட அபத்தமானது இந்த உலகில் ஏதும் உண்டா .?? சரி, சரி , ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம் ஜெயித்தால் முதல்வர் ஆகலாம். ஆனாலும் தனது கொள்கையை வகுத்துக்கொள்ளாத , அதற்கான எந்த செயலும் மக்களுக்காக செய்திராத ஒரு மனிதன் தனது அடிப்படை தொழிலுக்கு பிரச்னை வந்ததால் பழி வாங்கும் நோக்கத்திற்காக அரசியலுக்கு வருவது திரு விஜய் அவர்களுக்கு எதிராகவே திரும்பும். சம நோக்கமும் கொள்கையும் கொண்ட தோழர்களோ நம்பிக்கையான தளபதிகளோ இல்லாத விஜய் எப்படி தனியாக ஜெயிப்பேன் என நினைக்கிராரோ அந்த இயேசு பெருமானுக்கே வெளிச்சம் எந்த சிறுபான்மையினரையும் பகைத்துக்கொள்ளக்கூடாது என்ற நினைவில் கட்சி ஆரம்பித்த காரியவாதி தான் இந்த விஜய்


புதிய வீடியோ