சில வரி செய்திகள்:...
சென்னை, தஞ்சாவூர், மதுரை, கோவை மருத்துவ கல்லுாரிகளில் 6.43 கோடி ரூபாய் மதிப்பில், அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக மருந்தின் தன்மை, வீரியம், அதன் பலன் குறித்து மதிப்பீடு செய்வதுடன் எதிர்விளைவுகளையும் ஆராய முடியும். இதற்காக, 14 வகையான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.