ஒரே நாளில் சவரன் ரூ.840 உயர்வு
சென்னை:தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்தது. சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 9,180 ரூபாய்க்கும், சவரன், 73,440 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 126 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 105 ரூபாய் உயர்ந்து, 9,285 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 840 ரூபாய் அதிகரித்து, 74,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 2 ரூபாய் உயர்ந்து, 128 ரூபாய்க்கு விற்பனையானது.