உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய எஸ்.பி.வேலுமணி!

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய எஸ்.பி.வேலுமணி!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்துள்ளார்.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.பி. வேலுமணி. இவரது மகன் விஜய் விகாஸ் திருமணம் மார்ச் 3ம் தேதி, கோவை ஈச்சனாரியில் நடக்க உள்ளது.மகன் திருமணத்துக்காக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகிறார். அந்த வகையில் சென்னையில் நடிகர் ரஜினியை எஸ்.பி., வேலுமணி சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார். அப்போது அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

K.Ramakrishnan
பிப் 11, 2025 22:22

எப்படி எல்லாம் இழுக்கப் பார்க்கிறாங்க..


Sankara Narayanan
பிப் 11, 2025 14:47

திருமண விழாவிற்கு அழைப்பிதழ் கொடுப்பது சொந்த விவகாரம். இப்பொழுது இது விளம்பரமாகி விட்டது. ஒரு வேளை அரசியல் சம்பந்தம் ஏதேனும் இருக்குமோ? எல்லாமே ஹேஷ்யம்தான்


புதிய வீடியோ