உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறப்பு ரயில்களிலும் தீபாவளிக்கு இடமில்லை

சிறப்பு ரயில்களிலும் தீபாவளிக்கு இடமில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோர் வசதிக்காக, சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல, 10க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. அந்த ரயில்களுக்கான முன்பதிவு, துவங்கிய சில நிமிடங்களில் முடிந்தது.இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: தென் மாவட்டங்களுக்கான பயணியர் எண்ணிக்கை தான் அதிகம். ஆனால், போதிய அளவில் ரயில்கள் இல்லை. எனவே, சென்னையில் இருந்து திருநெல்வேலி, துாத்துக்குடி போன்ற வழித்தடங்களில், முன்பதிவு இல்லாத அந்த்யோதயா ரயில்களை இயக்கினால், ஒரே நேரத்தில் அதிகம் பேர் பயணம் செய்ய முடியும். கட்டணமும் அரசு பஸ்சை விட குறைவு என்பதால் மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
அக் 25, 2024 09:30

தமிழன் எப்போதும் பொறுப்புணர்ச்சி மிக்கவன். தனது குடும்பத்தினர் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்று நினைப்பவன். ஆனால், மக்களிடம் கூடுதல் கட்டணங்களை கொள்ளையடிக்கும் ஆட்சியாளர்கள் அவர்கள் நிம்மதியாக சொந்த ஊருக்கு சென்ற வரக்கூட போதிய போக்குவரத்து வசதிகளை செய்யாமல் கண்டனத்திற்குரியது. மேலும், ஒன்றிய அரசு நினைத்தால் இன்னும் போதிய ரயில்களை இயக்க முடியும். ஆனால், இங்கே இருக்கும் அரசியல்வியாதிகளின் பினாமிகள் அதை ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து தடுத்து வருகிறார்கள். முன்பு இரட்டை ரயில்பாதை இல்லாததுதான் காரணம் என்றார்கள், ஆனால் இன்றைக்கு இரட்டை ரயில் பாதை இருந்தும் கூடுதல் ரயில்களை இயக்க மறுப்பது ஏன்? இப்படி செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி அப்புறம் பிரீமியம் தட்கல் மற்றும் தட்கல் என்று மக்களை கொள்ளையடிக்க வேண்டியது. ரயில் நிர்வாகத்தால் பயண சீட்டுக்கள் உறுதி செய்யமுடியவில்லை என்றாலும் அதை ரத்து செய்யும்போது அதற்கும் ஒரு இருக்கைக்கு ரூ.60 வீதம் பிடித்தம். இது எங்கே உள்ள சட்டம் என்று தெரியவில்லை. கொள்ளையடித்து ஒன்றே குறிக்கோளாய் செயல்படுகிறார்கள். மோடிஜிக்கு இது தெரிந்துதான் நடக்கிறதா என்று தெரியவில்லை. மற்றவர்கள் தப்பு செய்தால் அரசிடம் கேட்கலாம். ஆனால், அரசே தப்பு செய்தால்?


veeramani
அக் 25, 2024 09:18

தமிழக தலைநகரம் சென்னையில் சுமார் அறுபது சத்தம் மக்கள் தென் மாநிலத்தை சார்ந்தவர்கள் தீபாவளி பொங்கல் பண்டிகைகள் தென் மாவட்ட மக்களை இழுக்கிறது ஒரே தீர்வு சென்னை எழும்பூர் டு மதுரை வரை இரண்டு மணிநேர வித்திசாத்தில் உணரேசெர்வே ரயில்களை இயக்கினால்தான் கூட்டம் குறையும். இந்த வகை ரயில்களில் பாண்டியன் கட்டணம் வாங்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை