உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதுடில்லி, ராஜஸ்தானுக்கு நாளை சிறப்பு ரயில்கள்

புதுடில்லி, ராஜஸ்தானுக்கு நாளை சிறப்பு ரயில்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர்: பயணியரின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, புதுடில்லி மற்றும் பகத் கி கோதிக்கு சிறப்பு ரயில்களை, தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.திருநெல்வேலியில் இருந்து நாளை இரவு 10:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், வரும் 24ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு நிஜாமுதீன் செல்கிறது. இந்த ரயில், கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், வழியாக செல்லும். இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் - 20; இரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படும்.மதுரையில் இருந்து நாளை காலை 10:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், வரும் 23ம் தேதி மதியம் 12:30 மணிக்கு, ராஜஸ்தான் மாநிலம், பகத் கி கோதி செல்லும். மறுமார்க்கத்தில் வரும் 24 அதிகாலை 5:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், 26ம் தேதி காலை 8:30 மணிக்கு, மதுரை வரும்.இவ்விரு ரயில்களும் திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் வழியாக செல்லும். ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள் -- 12; ஏ.சி., மூன்றடுக்கு எகனாமி படுக்கை வசதிப் பெட்டிகள் ஆறு; இரு சரக்கு பெட்டிகளுடன் இயக்கப்படும். மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Annamalai
ஏப் 20, 2025 07:42

யார் போகிறார்கள் ?.வடமாநில தொழிலார்கள் ?.பெங்களூர் திருச்சி இடையே ஒரு பகல் ரயில் விடலாமே ?.பஸ் கட்டணம் அதிகம் ஆகி விட்டது .வந்த்தே பாரத் ரயில் டிக்கெட் அதைவிட அதிகம் .


புதிய வீடியோ