உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் விடுதலை

ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் விடுதலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அவதூறு பரப்பியதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் இன்று விடுதலை செய்யப்பட்டார்.ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். கோவில்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடர்ந்து நடத்தி வருகிறார். கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பாக, துணை முதல்வர் உதயநிதி வீட்டுக்கு ஜீயர்கள் மூவர் சென்றதாகவும், அங்கு தோஷ நிவர்த்தி செய்ததாகவும் பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அவரும், ஜீயரும் பேசிக் கொள்வது போல இருந்த அந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், தன் மீது அவதூறு பரப்பியதாக ஸ்ரீபெரும்புதூர் ஜீயர், ரங்கராஜன் நரசிம்மன் மீது போலீசில் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை கைது செய்தனர். அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.மொத்தம் பதிவான ஏழு வழக்குகளிலும் அவர் ஜாமின் பெற்ற நிலையில் இன்று காலை சென்னை மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

sundar
ஜன 02, 2025 13:53

சில உண்மைகள் சுடும் 1 ஒருவரிடம் பேசும் பேச்சை அவர் அறியாமல் அவர் அனுமதியில்லாமல் பொது வெளியில் வெளியிடுவது தவறு. 2 டி ஆர் ரமேஷ் போன்றவர்கள் ஹிந்து ஆலயம் மற்றும் சிலைகள் சொத்து பாதுகாப்பு குறித்து தெளிவாக போராடுகிறார். இவர் அப்படியல்ல எல்லாரிடமும் வீண் வம்பு. எல்லாரிடமும் தகராறு. 3 தான் சொல்வது மட்டும் தான் சரி என்று செயல்படுவது 4 எல்லா மடங்களையும் ஜீயர்களையும் அர்ச்சகர்களையும், குறிப்பாக வடைகலைப் பிரிவு அர்ச்சர்களை நிந்திப்பது. 5 வேதாந்த தேசிகரை ஆசார்யராகக் கொண்ட வடைகலைப் பிரிவு குறித்து துவேஷம் பேசுவது . ஆச்சர்யம் என்னவென்றால் அந்த வடைகலைப் பிரிவினர் தான் இவர் ஜாமீனில் வருவதற்கு படாதபாடு படுகிறார்கள். இவர் சற்று நாக்கை எச்சரிக்கையாய் பயன்படுத்துவது நலம். யார் எவ்வளவு நல்லது சொன்னாலும் கேட்க மாட்டார். இவர் தன் பணியை ஆலயம் சார்ந்த நாள் வழிக்கும் ஹிந்து அறநிலையத் துறை செய்யும் தவறுகளை, சடடத்தின் மூலம் களைய முற்படுவது நல்லது .அதை விடுத்து இது போல செயல்படுதல் இவருக்கு வரும் தொல்லைகள் வந்துகொண்டேயிருக்கும். தற்போது ஆடசியில் இருப்பவர்கள் ஹிந்து விரோதிகள். ஒரு பாட்டி சுவற்றில் உள்ள ஒரு உயிரற்ற படத்தை அடித்ததையே பொறுக்காதவர்கள். இவர் பேச்சை ரசிப்பார்களா? சொல்லிலும் கவனம் தேவை .இல்லை நான் இப்படித்தான் என்றால் நிரந்தரமாக ஜெயிலுக்கும் நீதிமன்றத்தும் அலைய வேண்டி வரும் . அவர் நன்மை கருதியே இப்பதிவு . ஹிந்து மதத்திற்காக அவர் செய்யும் பணிகள் தொடர வாழ்த்துகிறேன்


Tetra
ஜன 02, 2025 10:16

ரங்கராஜன் ஸ்வாமியை மட்டம் தட்ட முயர்ச்சிப்பவர்களுக்கு ஒரு பதில். சிலை கடத்தலையும் கோவில் நிர்வாக தவறுகளையும் தட்டிக்கேட்டு நீதிமன்றங்களை தனி ஒரு ஆளாக அணுகியவர். இவரைப்போல் டி ஆர் ரமேஷும். இவர்கள் தங்களுக்காக போராட வில்லை. ஏமாற்றப்பட்ட, ஏமாந்து கொண்டிருக்கும் இந்நாட்டின் மக்களுக்காக. இவர் தான் சார்ந்த வழிபாட்டின் ஆசான்களையும் தவறிருந்தால் கேள்வி கேட்டவர் கேட்பவர். மாற்று மதத்தினரை கேட்கிறோம். உங்கள் மத போதகர்கள் தவறை சுட்டிக்காட்ட உங்களில் எத்தனை பேருக்கு தைரியம் இருக்கிறது. இவர் ஒரு தனி சிங்கம்.


கிஜன்
ஜன 02, 2025 01:24

மாமா வெளில வந்ததில் மகிழ்ச்சி ..... புகாரளித்த ஜீயரை ஒருவரும் திட்டவில்லை ...ஜாதி பாசம் போலும் ...


PARTHASARATHI J S
ஜன 01, 2025 22:55

இவரது தைரியம், பொறுமை ஆகியவற்றை அடியேன் வியந்து பார்க்கின்றேன். எல்லா வழக்குகளுமே அல்பம்.


சண்முகம்
ஜன 01, 2025 21:43

ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் விலை போய்விட்டாரா?


தமிழன்
ஜன 01, 2025 20:37

பூஜை நடந்ததா இல்லையா


தமிழன்
ஜன 02, 2025 10:28

ஜீயர் பொய் சொல்றான்


Nagarajan S
ஜன 01, 2025 20:34

ட்ராபிக் ராமசாமி போல, திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் கோவில் சொத்துக்களை கொள்ளை யடித்தை, அடிப்பதை மீட்கவும், கோவில்களின் நடைமுறைகளை சீரஷிப்பதை தவிர்க்கவும் தொடர்ந்து நியாயமான முறையில் போராடிக்கொண்டிருக்கிறார். இந்துக்கள் அனைவரும் ஜாதி பேதம் பார்க்காமல் அவரின் போராட்டத்திற்கு ஒத்துழைத்தால் தான் தமிழக கோவில்களை பாதுகாக்கமுடியும்.


Srinivasan K
ஜன 01, 2025 22:13

traffic Ramaswamy is DMK s stooge, he file and withdraw cases at the instructions of dmk.sad this fellow is glorified. Rangarajan bis fighting temple cases selflessly


Nandakumar Naidu.
ஜன 01, 2025 20:00

இந்த ஆட்சிக்கு கெடுகாலம் நெருங்கி விட்டது.


raja
ஜன 01, 2025 19:37

நீதி மன்றத்தால் எத்துணை முறை காறிஉமிழ்ந்தாலும் திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளையன் அப்படியே துடைத்து விட்டு எதுவும் நடக்காதது போல் மக்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள் மாடல் ஆட்சியில் என்று விடுவார்ன் பாருங்க அறிக்கை ஒரே தமாசா இருக்கும்...


Barakat Ali
ஜன 01, 2025 19:34

விடுதலைக்கு காரணம் என்ன ???? புகார் வாபஸ் பெறப்பட்டதா ???? அல்லது இது நெகட்டிவ் விளைவை உண்டாக்கிவிட்டதா ????


Srinivasan K
ஜன 01, 2025 22:14

waste case on Rangarajan


கண்ணன்
ஜன 02, 2025 12:06

இல்லை, அதனால் ஏதாவது வேறு கடுமெயான தோஷம் விளைந்திருக்குமோ?!?