உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளி பஸ்கள் தடையின்றி செல்ல தேசிய நெடுஞ்சாலைகளில் வசதி: அரசு போக்குவரத்து கழகங்கள் வலியுறுத்தல்

தீபாவளி பஸ்கள் தடையின்றி செல்ல தேசிய நெடுஞ்சாலைகளில் வசதி: அரசு போக்குவரத்து கழகங்கள் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தீபாவளி பண்டிகையின்போது, பஸ்கள் தடையின்றி செல்ல, நெடுஞ்சாலைகளில் போதிய வசதிகளை செய்து தர வேண்டும்' என, அரசு போக்குவரத்து கழகங்கள் வலியுறுத்தி உள்ளன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், பெரும்பாலான மக்கள், அரசு பஸ்களை நம்பி உள்ளனர். தமிழகம் முழுதும் 20,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கிடையே, 'நெடுஞ்சாலைகளில் நடக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; நீண்ட நாட்களாக நடக்கும் மேம்பால பணி இடங்களில், கூடுதலாக சாலைகள் விரிவாக்கம் செய்து, சர்வீஸ் சாலைகள் அமைக்க வேண்டும்' என, அரசு போக்குவரத்து துறை சார்பில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: உளுந்துார்பேட்டை - சென்னை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி பாதை கொண்டது. இந்த சாலையில், எந்த இடையூறும் இல்லாதபோது, பஸ்கள் பெரிய அளவில் தாமதம் இன்றி இயக்கப்படுகின்றன. ஆனால், மேல்மருவத்துார் - செங்கல்பட்டு இடையே கருங்குழி, படாளம், புக்கத்துறை என, மூன்று இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. ஒவ்வொரு இடத்திலும், ஒரு கி.மீ., துாரம் சர்வீஸ் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த சாலைகள் குறுகியதாக இருப்பதால், பஸ்கள், கார்கள், லாரிகள் நீண்ட துாரம் அணிவகுத்து நிற்கின்றன. சென்னை - கன்னியாகுமரி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் இதர மாவட்ட சாலைகளில், சில இடங்களில் விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. புதிய பணிகளை தற்காலிகமாக, ஓரிரு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். பணிகள் நடக்கும் இடங்களில், சாலைகள் விரிவாக்கம் செய்து, கூடுதல் சர்வீஸ் சாலைகள் அமைக்க வேண்டும். பஸ்களை எந்த பாதிப்புமின்றி இயக்க, போதிய சாலை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஆணையங்களிடம் கூறியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

M Ramachandran
அக் 09, 2025 13:15

காயாலாங்கடைக்கு செல்ல வேண்டிய உருட்டி செல்ல கூடிய டயர்களுடன் வாகனங்கலால் அறுவடை. தீபாவளிக்கு முதல் நாள் புறப்பட்டால் வழியில் தீபாவளி கொண்டாடி விட்டு வீட்டிற்கு தலிய்ய காட்டிவிட்டு தீபாவளி வால்தூக்கல் கூறி விட்டு உடனே பஸ் பிடிக்க ஓடி வந்து பிடித்து திஙகள் அதிகாலை சென்னைக்கு வந்து வழக்கம் போனால் அலுவலகம் வந்து விடலாம். அரசு போக்கு வரத்துக்கு நிதி உபயம் செய்த புண்ணியம் கிடைக்கும்


M Ramachandran
அக் 09, 2025 13:08

ஏமந்தவன் இருக்க அறுவடை ய்க்கு பஞ்சமேன்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 09, 2025 10:27

கனிம வளங்கள் அள்ளிக் கொண்டு கேரளாவிற்கு விரையும் வாகனங்கள் டாஸ்மாக் வாகனங்கள் தவிர மற்ற எல்லா வாகனங்களையும் நான்கு நாட்கள் சாலையில் செல்ல தடை விதித்தது தீபாவளி பேருந்துகள் மட்டும் அனுமதிக்கலாம். கருணாநிதி காலத்தில் முதன் முதலில் இரவு நேர விரைவு பேருந்து தொடங்கிய போது அனைத்து லாரிகளும் பேருந்துகள் பார்த்தால் அதற்கு வழி விட்டு விட்டு தான் செல்ல வேண்டும் என்று உத்தரவு போட்டார்கள். எல்லா லாரிகளிலும் முன்பும் பின்பும் மஞ்சள் நிற பெயிண்ட் அதுவும் ஒரு குறிப்பிட்ட கம்பெனி தயாரிக்கும் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார்கள். அது போல இந்த அரசும் ஏதாவது புதுமையாக உத்தரவு போடலாம்.


G Sundaresan
அக் 09, 2025 09:08

திருச்சி - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் 9 இடங்களில் பாலம் கட்டும் பணி மத்திய அரசால் நடந்து வருகிறது. சர்வீஸ் சாலை சிறியதாக இருந்தாலும் குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. ஓப்பந்ததாரர் மனதுவைத்தால் மட்டுமே விடிவுகாலம் பிறக்கும். வாழ்க ஜனநாயகம் . ஜெய்ஹிந்த்.


S.V.Srinivasan
அக் 09, 2025 08:23

தீபாவளி பஸ்கள் மட்டும் தடையின்றி போக வேண்டுமா. மற்ற நாட்களில் பல்லாங்குழி சாலையில் போக வேண்டுமா. நிரந்தரமா பண்ண சொல்லுங்க.


suresh Sridharan
அக் 09, 2025 08:22

தமிழகத்தில் இருக்கும் ரோடுகளை சரி செய்ய எந்த எதிர் கட்சியும் பேசாதது ஏன்


suresh Sridharan
அக் 09, 2025 08:21

தமிழகத்தில் இருக்கும் அனைத்து தோடுகளும் குண்டும் குழியில் அதை மக்கள் மறக்க தேசியத்தை கையில் எடுப்பார்


திகழும் ஓவியன், Ajax Ontario
அக் 09, 2025 08:18

4 1/2 வருஷமாக தூங்கியது. இப்போ வெறும் நாலு நாளில் மாயாஜாலம் நிகழ்ந்த போகும் மாடல்


N S
அக் 09, 2025 07:38

நல்ல வலியுறுத்தல் தான். ஓட்டும் வாகனங்களை நன்றாக பராமரித்து, ஓட்டுனர்களுக்கு ஓய்வும், பரிவும் கொடுங்கள் என்று கேட்க தோணவில்லையே?


raja
அக் 09, 2025 07:10

ஆமா தடைகள் இருந்தால் நடிகர் செந்தில் ஒரு படத்தில் கூறியது போல தனி தவில் போல் சக்கரம் தனியாக கழண்டு ஒடும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை