உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வில் வாரிசு அரசியல்: கொதிக்கும் தொண்டர்கள்

தி.மு.க.,வில் வாரிசு அரசியல்: கொதிக்கும் தொண்டர்கள்

சென்னை: தி.மு.க.,வில் கட்சியின் நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் சிறப்பாக நடக்கவும், வேலுார் மாவட்டம், வேலுார் வடக்கு, வேலுார் தெற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. வேலுார் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நந்தகுமார் எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக் கு வேலுார், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. வேலுார் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு காட்பாடி, கே.வி.குப்பம் ஆகிய இரு சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். வேலுார் மாவட்டத்தில் வன்னியர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்ற குறையை போக்கவும், வரும் சட்டசபை தேர்தல் செலவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வகையிலும், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த கதிர் ஆனந்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப் பட்டுள்ளது. ஏற்கனவே, வேலுார் மாவட்ட தி.மு.க.,வில் ஐந்து சட்டசபை தொகுதிகளை வைத்திருந்த நந்தகுமார், நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், துரைமுருகனின் சிஷ்யராக கடந்த 30 ஆண்டுகளாக இருக்கிறார். எனவே, அவருக்கு மூன்று சட்டசபை தொகுதிக ளை ஒதுக்கி, மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதில், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும், தி.மு.க.,வில் வாரிசு அரசியல் தொடரலாமா? என சமூக வலைதளங் களில் கொந்தளிக்கத் துவங்கி உள்ளனர். அதேபோல மாவட்டத் தில் அதிகமாக உள்ள முதலியார் இனத்தைச் சேர்ந்தோருக்கு பிரதிநிதித் துவம் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தொண்டர்களால் வைக்கப் படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Nathan
நவ 06, 2025 00:07

திமுக தொண்டர் ஆக இருக்க ஒரே தகுதி கரை வேட்டி மட்டுமே உங்களுக்கு வேறு எந்த தகுதியும் இல்லை நீங்கள் எல்லாம் கருணாநிதி குடும்பத்தின் புகழ் மற்றும் மாவட்ட செயலாளர் அமைச்சர் ஆகியோர் புகழ் பாடி குவாட்டர் பரிசு பெற்று வாழ மட்டுமே உங்களுக்கு தகுதி உள்ளது. இந்த கொதிக்கிறது குதிக்கிறது எல்லாம் வேண்டாம் அப்படி செய்தால் குவாட்டருக்கு வேட்டு வந்து விடும் பார்த்து பக்குவமாக நடந்து குவாட்டரை காப்பாற்றி கொள்ளுங்கள்


M Ramachandran
நவ 05, 2025 20:53

முப்பது அப்போது கூலி கொடுக்கிறார்களே. அப்புறம் என்ன


xxxx
நவ 05, 2025 18:42

மெய்யாலுமா .... சிரிப்பு மூட்டக்கூடாது ....


T.sthivinayagam
நவ 05, 2025 18:37

பாஜகவில் உள்ள வாரிசு அரசியலுக்கு கொதிக்க தொண்டர்களுக்கு ஏன் பயம்


vivek
நவ 06, 2025 06:32

பக்கத்து இலைக்கு பாயசம் வரலைன்னு சொல்றார்... விட்டா பக்கத்து இலையையும் சேர்ந்து சாப்பிடுவார்...


பாரத புதல்வன்
நவ 05, 2025 17:20

கொதிக்கும் தொண்டன் புதிய கொத்தடிமையாக சேர்ந்தவராக இருக்க வேண்டும்....


சாமானியன்
நவ 05, 2025 16:01

எல்லா கட்சிகளிலும் வாரிசு அரசியல் தலைதூக்குகிறது. ஜனநாயக அரசியலில் இருந்து முரண்படுகிறது. வேட்பாளர்களை வடிகட்ட சில வழிமுறைகள் வகுக்கலாம். முதலாவதாக பெற்றோர்கள் அரசியலில் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். பின்னர் சில வருடங்கட்கு பின் உறவினராக இருக்கக் கூடாது. இரண்டாவதாக ஒரு டிகிரி தேவை. அரசியல் சட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும். அப்டுடேட்டாக இருக்க வேண்டும். தொகுதியின் வரலாறும், பூகோளம், விவசாயம், தொழில்கள் பற்றி தெரிந்தவர்களிடம் அறிந்திருக்க வேண்டும். 234 தொகுதியைப் பற்றியும் புத்தகங்கள் பிரசுரிக்க வேண்டும். இதற்கு முன்னர் நடந்த சட்டமன்றங்களில் பேசப்பட்ட முக்கிய தீர்மானங்கள், சட்டங்களை பற்றி முழுமையான அறிவும் தேவை. மக்களால் தோற்கடிக்கப்பட்ட சில கட்சி வேட்பாளர்கள் கூட மிகச்சிறந்த சட்ட வரைவை கடந்த காலங்களில் தந்துள்ளனர்.


Modisha
நவ 05, 2025 14:06

புதுசாவா நடக்குது . கருணா , ஸ்டாலின், அழகிரி , கனிமொழி , உதயநிதி , இன்பநிதி இதெல்லாம் என்ன.


SUBRAMANIAN P
நவ 05, 2025 13:49

திமுகவுக்கு எதற்கெடுத்தாலும் முட்டுக்கொடுக்கும் முட்டுத்திலகம் இந்தப்பக்கமெல்லாம் எட்டிப்பார்க்கமாட்டார்..


Vasan
நவ 05, 2025 14:50

விஜயகாந்த் அவர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடித்தா கட்சி ஆரம்பித்தார்? அவருக்குப்பின், அவரது வாரிசு கட்சியை நடத்துவதில் என்ன தவறு ?


sengalipuram
நவ 05, 2025 12:58

ஓசி பிரியாணி சாப்பிடுற மீசை காரன் சொல்லுகிறான், ஜி டி நாயுடுவை ஆராய்ச்சியாளர் துரைசாமி என்றால் தெரியாதாம், நாயுடு என்றால்தான் ஆராய்ச்சியாளர் என்று தெரியுமாம். அதனாலதான் கோவையில் பாலத்திற்கு ஜி டி நாயுடு பாலம் என பெயர் வைத்தார்களாம். சென்னை மேற்கு மாம்பலம் துரைசாமி அய்யங்கார் பாலம் என்றால் யாருக்கும் தெரியாதாம். அதனாலதான், அய்யங்கார் என்ற பெயரை நீக்கினார்கள். வட்ட செயலாளர் முதல் அமைச்சர் வரை ஜாதி பார்த்துதான் தி மு கவில் இடம் கொடுப்பார்கள். இவர்கள் தான் தமிழ்நாட்டில் சமூக நீதியை நிலை நாட்டி, இந்த ட்ராவிடின் மாடல்லை இந்தியா முழுவதும் நிலை நாட்ட போகிறார்களாம். தமிழ் மக்கள் திருந்தாத வரை இந்த மாதிரியான கொடுமைகள் தொடரும் ....


Vasan
நவ 05, 2025 12:57

பிற தொழில்களில் வாரிசை விமர்சிப்பதில்லை. ஆனால் அரசியலில் மட்டும் ஏன் என்பது புரியாத புதிராக உள்ளதென்பேன்


SUBRAMANIAN P
நவ 05, 2025 13:47

மூளை ன்னு ஒன்னு இருந்து சிந்திக்கும் திறனும் அதுக்கு இருந்ததென்றால் இதுபோன்ற கேள்விகள் எழாது... அரசியல் என்பது சேவை. இன்று அது பணம் கொழித்து சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது.. மற்ற தொழில்களில் அவனவன் சொந்த பணத்தைப்போட்டு தொழில் தொடங்கி அதில் கிடைக்கும் லாப நஷ்டத்திற்கு பொறுப்பாகிறான்.. அவனுக்கு உரிமை உள்ளது யாரோ வாரிசாக நியமிக்கவேண்டும் என்று.. அரசியல் என்பது எவன் அப்பன் வீட்டு சொத்துமல்ல.. மக்கள் வரிப்பணத்தில் செய்யவேண்டிய நிர்வாக முறை.. அதில் பொதுநலத்தோட சிந்திக்கும் நிர்வாக திறமை உள்ளவரை முன்னிறுத்தவேண்டும். கட்சியே இன்னிக்கி குடும்ப சொத்து ஆகிவிட்டதால் மற்றவருக்கு விட்டுத்தர மனம் வராது. இருக்க இஷ்டம் இருந்தால் கடைசிவரை போஸ்டர் ஓட்டிகினு, கோஷம் போட்டுக்கினு குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் கொடிபிடி.. அதுதான் உன் தலையெழுத்து.. விருப்பம் இல்லையின்னா வெளியபோ .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை