உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நில அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

நில அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

ஆத்தூர்: நிலம் அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர், அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே துலுக்கனூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன்( விவசாயி). இவர், தனது நிலத்தை அளவீடு செய்து, தனி பட்டா பெறுவதற்காக விண்ணப்பித்தார். அதற்கு, ஆத்தூர் தாலுகா சர்வேயர் ஜீவிதா(29), அவரது உதவியாளர் கண்ணதாசன்(37) ஆகியோர், 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.அதன் பின் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி பேரம் பேசியுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lm700z8w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர்கள் ஆலோசனைப்படி, இன்று (செப்.,17) மாலை 5 மணியளவில் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜீவிதா மற்றும் கண்ணதாசன் ஆகியோரிடம் குமரேசன் ரூ. 10 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து,கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Saamy M
செப் 24, 2025 12:13

இந்த ஆட்சியில் இது ஒன்றும் புதிதல்ல... விருதுநகர் மாவட்டம் வில்லிபத்திரி கருப்பசாமி கோவில் நில ஆக்கிரமிப்பு குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்திருந்தோம்.. முதல்வர் ஸ்டாலின் அப்பா அவர்கள் கூறியிருந்தது போல் எந்தப் பயனும் இல்லை.. கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன...


RAINBOW
செப் 24, 2025 10:38

அனைத்து நில அளவை துறையே ஊழல் மிகுந்த துறையாக இருக்கிறது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்


muthu
செப் 24, 2025 05:27

Lot of corrupt officials still hiding their faces. Let Anti corruption wing do its duty with public by hsnd to hand How to get close to public to get complaint from public to be restructured


SAMPATH V.N.SAMPATH
செப் 21, 2025 23:20

தமிழ்நாட்டில் முதலிடம் லஞ்சம் ஊழலை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிலும் கள்ளக்குறிச்சி வட்டத்தில் ஊழலில் பெருத்த அதிகாரிகள் உள்ளார்கள் இவர்கள் மீது எந்த வித நடவடிக்கை எடுக்க முடியாது அந்த அளவிற்கு பவர் ஃபுல் லஞ்சம் வாங்கினேன் ஜெயிலில் போட்டார்கள் லஞ்சம் கொடுத்தேன் வெளியில் வந்துவிட்டேன் இப்படி தத்துவம் பேசும் அதிகாரிகள் இங்கு ஏராளம் .


SAMPATH V.N.SAMPATH
செப் 21, 2025 22:58

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து லஞ்சம் ஊழல் முதலிடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலிடம் கள்ளக்குறிச்சி வட்டம் . அரசு ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்க முடியாது அந்த அளவுக்கு அதிகாரம் படைத்தவர்கள் .


Parthasarathy Badrinarayanan
செப் 21, 2025 10:30

லஞ்சம் வாங்குவதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என நிரூபித்துள்ளன...


Kumar A
செப் 20, 2025 07:05

எங்க ஊருல குட வாங்குராங்க


thangavel k
செப் 19, 2025 12:10

Revenue and Survey Departments are worst nowadays. Nobody is sincere to the public.


thangavel k
செப் 19, 2025 12:04

ரெவின்யூ இலாகா மிகவும் மோசமடைந்து விட்டது. நிலம் அளக்க பணம் கட்டிய பின்பும் பணம் கொடுத்தால் தான் சர்வேயர் வந்து அளந்து கொடுப்பார் என்பது வெட்ட வெளிச்சம். ஆனால் மேல் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை. எத்தனை ஆண்டு பேப்பர்|பெட்டிஷன் நிலுவையில் இருந்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை.


Parthasarathy Badrinarayanan
செப் 21, 2025 10:31

மேல் அதிகாரிகளுக்கு பங்கு போவதால் கண்டு கொள்வதில்லை


Y M J
செப் 19, 2025 08:47

தற்போது தனிப்பட்டா செய்து தர நான்காயிரம் குறைந்த பட்ச லஞ்சமாக அந்த துறை அயோக்கிய லஞ்சவாதிகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு ஏன் இப்படி பட்ட செயல்களை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரியவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை