உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒவ்வொரு நாட்டிலும் சுதேசி வருகிறது: ஸ்ரீதர் வேம்பு

ஒவ்வொரு நாட்டிலும் சுதேசி வருகிறது: ஸ்ரீதர் வேம்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' இந்தியாவில் மட்டும் சுதேசி வரவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் வருகிறது. இதில் முதலில் விழித்துக் கொண்டது சீனா தான்,'' என ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: எவ்வளவு காசு கொடுத்தாலும் முக்கிய தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம் என்ற நிலை உள்ளது. அதனால் அந்த தொழில்நுட்பத்தை நாம் உருவாக்க வேண்டும். நமக்கு மூளை இருக்கிறது. அதை ஏன் உருவாக்கக்கூடாது. அரட்டை செயலியை அதிகம் பயன்படுத்துவது கிராமப் பகுதியினர் தான்.நம்மிடம் திறமை உள்ளது . இந்தியாவில் அதிகளவு குழந்தைகள் பிறக்கின்றன.சீனா, அமெரிக்காவை விட அதிகம். இவர்களுக்கு எல்லாம் வேலைவாயப்பு என்றால் தொழில்நுட்பத்தை உருவாக்குவது தான் வேலை.நம்மிடம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான நிதி குறைவாக உள்ளது. அதில் ஜிடிபியில் 0.7 சதவீதம் உள்ளது. ஆனால் சீனாவில் அதிகம். வளர்ச்சியடைந்த நாடுகளில் 4 சதவீதம் இருக்கும். இதை தனியார் நிறுவனங்கள் செய்ய வேண்டும். அரட்டை போன்ற செயலியை அரசு உருவாக்க முடியாது. தனியார் தான் செய்ய வேண்டும். அதற்கு ஆராய்ச்சி தேவை.அமித்ஷா உள்ளிட்டவர்கள் இணைந்தது அங்கீகாரமாக பார்க்கிறோம். அரட்டைக்கு வரும் அதிகளவு டிராபிக்கை தாங்க வேண்டும். அதனை சரி செய்துவிட்டோம். 5 கோடி 10 கோடி வந்தால் கூட தாங்கும் அளவுக்கு சரி செய்துள்ளோம்.பயனர்கள் வர வர பிரச்னைகளை சரி செய்து வருகிறோம். இந்தியாவில் மட்டும் சுதேசி வரவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் வருகிறது. இதில் முதலில் விழித்துக் கொண்டது சீனா தான்.அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு வரும் நாடாக மாறியுள்ளது. அதை நாமும் செய்ய வேண்டும். சீனா போன்ற நிலையை அடைய 10 ஆண்டுகள் ஆகும். சில தொழில்நுட்பத்தை அடைய 15 ஆண்டுகள் ஆகும். நாம் தவறான பொருளாதார வல்லுநர்கள் பேச்சை கேட்டோம். சீனா கேட்கவில்லை. தொழில்நுட்பம் வரும் போது விலை குறையும். யுடியூபர்கள் இன்று அதிகம். 30 ஆண்டுக்கு முன்பு யாரும் எப்படி எதிர்பார்க்கவில்லை. ஏஐ தொழில்நுட்பத்தால் வேறு வகையான மாற்றம் ஏற்படும். புது விதமான வேலைகள் உருவாகும். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ராஜா
அக் 22, 2025 07:11

21 ஆயிரம் டெபாசிட் செஞ்சா அப்புறம் வீடு தேடி வருவாங்க போல


அப்பாவி
அக் 21, 2025 19:58

ஒருநாடில் செஞ்சா இன்னொரு நாட்டில் செய்ய முடியாதா? எல்லாம் காப்பி தானே?


MARUTHU PANDIAR
அக் 21, 2025 17:33

இப்போ தேர்தல் தொடர்பான வேலைகளில் பிஸியாம். அதற்குப் பிறகு இடம் பதிவு , விலை போன்றவற்றை நோண்டி எடுத்து குடைச்சல் குடுக்க தொடங்கப் போறaதா பேச்சு அடிபடுது.


MARUTHU PANDIAR
அக் 21, 2025 17:28

அது மட்டுமல்ல. இவுரு தமிழகத்தில் தொடங்க இருந்த செமி கண்டக்டர் தொழிற்சாலைக்கு என்ன கண்டிஷன் போட்டாங்களாம் தெரியுமா? 51 சதவீத பங்குதாரரா "குடும்பத்தை" சேர்த்துக்கணுமாம். தொழிற்சாலை இதனால் டுமீல் நாடு TO ஒரிசா போகப் போகுதாம். எப்புடி இருக்கு? ன்னு பேசிக்கறாங்க.


இந்தியானக இருப்போம் இந்திய பொருட்களையே வங்குவோம்
அக் 21, 2025 14:38

தெய்வம் மனித ரூபத்தில் அப்பப்ப வரும் என்று சொல்வார்கள். அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.


KR india
அக் 21, 2025 12:48

IIT, NIT, BITS Pilani, IISC Bangalore போன்ற சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில், இறுதி ஆண்டு படிக்கும், மாணவர்களுக்கு வழங்கப்படும் Project & Viva-வில், அந்த மாணவர்கள், தனியாகவோ, மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட குழுவாகவோ, இணைந்து, நம் நாட்டிற்கு, பலனளிக்கும், புதிய கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.


sengalipuram
அக் 21, 2025 10:54

தமிழ் நாட்டில் இவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைத்ததா? வர்ண வித்தியாசம் பார்க்கும் திராவிட மாடல் ஆட்சில் இவரை போன்றோர் எவ்வாறு தமிழ் நாட்டு வளர்ச்சில் ஆர்வம் காட்டுவார்கள் ?


தமிழ் நாட்டு அறிவாளி
அக் 21, 2025 09:47

உங்களை போன்ற மக்களிடம் இருந்து லாபம் ஈட்டும் கம்பெனிகள் ஆராய்ச்சிக்கு உதவ வேண்டும். அரசு பணத்தில் வரும் ஆராய்ச்சி முடிவுகளை கம்பெனிகள் எந்த விளையும் கொடுக்காமல் பயன்படுத்துகிறது. நான் பார்த்தவரை மிக பெரிய நிறுவங்களுக்கு எதிரே உள்ள ரோடு கூட மோசமாகத்தான் இருக்கிறது.


KavikumarRam
அக் 21, 2025 10:18

சோஹோ பற்றி குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் போடப்பட்டிருக்கும் ஒரு தற்குறி பதிவு. இவர் தென்காசி ஓரத்தில் ஒரு கிராமத்தில் உட்கார்ந்து கொண்டு கம்பெனியை நடத்துகிறார். அங்குள்ள ஏழை மற்றும் முயற்சியுள்ள மாணவர்கள் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப கல்வி அளித்து தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பும் அளிக்கிறார். எல்லா நிறுவனங்களும் நகரத்தை மையம் கொண்டிருக்கும் போது இவர் கிராமத்தை நோக்கி சென்றார். வெறும் முரசொலி மூளை மட்டும் இருந்தா இப்படிதான் உளறத்தோணும்


Kasimani Baskaran
அக் 21, 2025 04:14

எண்ணங்களை சந்தைப்படுத்துதலின் முக்கிய காரணி சமூக வலைத்தளங்கள். அது வெளிநாட்டினரின் கைகளுக்கு போகவில்லை என்றால் அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது. அதன் அடிப்படையில்த்தான் சீனாவில் சமூக வலைத்தளங்களை முழுவதுமாக கட்டுப்படுத்துகிறார்கள்.


கோபாலன்
அக் 21, 2025 03:47

இன, மொழி, ஊழல், சாராயம், அரசியல் வாரிசு முறை, பிரிவினை, திசை திருப்ப அரசியல், பண அரசியல், ஜாதி பாகுபாடு ஆகியவை நம் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. இந்த அரசியல் கட்சிகளை அடையாளம் கண்டு ஒதுங்கி வைக்க வேண்டும். அப்போது தான் அறிவுசார் இளைஞர்கள் நம் நாட்டில் இருந்து கொண்டு சாதனைகள் செய்வீர் முடியும்


சமீபத்திய செய்தி