உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேவருக்கு பாரத ரத்னா தர தமிழக அரசு முன்மொழியும்: ஸ்டாலின்

தேவருக்கு பாரத ரத்னா தர தமிழக அரசு முன்மொழியும்: ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கமுதி: ''முத்துராமலிங்கத் தேவருக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க, மத்திய அரசுக்கு தமிழக அரசு முன்மொழியும்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில், அவர் அளித்த பேட்டி: கருணாநிதி ஆட்சியில் தேவர் சமுதாயத்திற்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திஉள்ளோம். முத்துராமலிங்கத் தேவர் நுாற்றாண்டு விழாவையொட்டி, தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது நினைவிடம் முன்பு அணையா விளக்கு அமைக்கப்பட்டது. நுாலகம், முளைப்பாரி மண்டபம், தேவர் வாழ்ந்த வீடு பராமரிப்பு என, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. தேவர் பெயரில் கல்லுாரிகள் அமைக்க நடவடிக்கை எடுத்தவர் கருணாநிதி. தேவர் நினைவிடம் முன்பு கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை, நான் தான் திறந்து வைத்தேன். பசும்பொன்னில் தேவர் பெயரில், 3 கோடி ரூபாயில் புதிய திருமண மண்டபம் விரைவில் கட்டப்படும். கமுதியில் உள்ள தேவர் நினைவு அரசு கல்லுாரிக்கு நிர்வாகக் குழு அமைக்கப்படும் தேவருக்கு பாரத ரத்னா வழங்குமாறு, மத்திய அரசிடம், முன்னாள் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்தால், தமிழக அரசும் முன்மொழியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ