உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிவாரணத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும்; இ.பி.எஸ்., வலியுறுத்தல்

நிவாரணத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும்; இ.பி.எஸ்., வலியுறுத்தல்

சென்னை: '' வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும், '' என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.68 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டதால் 3 மாவட்ட மக்களை ஸ்டாலின் அரசு கடும் துயரத்திற்கு உள்ளாக்கி உள்ளது.பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து இருந்த போதும், நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உடமைகள், கால்நடைகள் மற்றும் வாகனங்களை இழந்து உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்துள்ளனர்.தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் இருந்த கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளநீர் புகுந்தது. 3 மாவட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிர்கதியாக நிற்கின்றனர். குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். கால்நடைகள், வாகனங்களை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு நெல் மற்றம் பயிர் சேதங்களுக்கு கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சாண்டில்யன்
டிச 03, 2024 22:49

இதெல்லாம் ஒரு சடங்கா ஸம்ப்ரதாயமா ஆகிப்போச்சு நாங்க கேட்டுத்தான் பணம் வந்ததுன்னு சொல்லி ஒட்டு கேட்க போகணும்னா நடக்குமா?அன்னைக்கி தராம போடுவானானுங்களா சோ, இதெல்லாம் வெட்டி வேலை.


சந்திரன்,போத்தனூர்
டிச 03, 2024 18:48

கவலைப் படாதீங்க பங்காளி உங்களுக்குரிய பங்கு கரெக்டா வந்துரும்.


Venkateswaran Rajaram
டிச 03, 2024 18:42

நீங்க எ.க தலைவர்னா இப்டி சொல்லுறது ....ஏன் கொள்ளை அடிச்ச பணத்தை கொடுக்க ரெண்டு பேருக்கும் மனசு வர மாட்டேங்குது


Palanisamy Sekar
டிச 03, 2024 18:36

இவரெல்லாம் தமிழகத்தின் எதிர்க்கட்சி என்பதை நினைத்தாலே வெட்கப்படுகின்றது மனம். இவர் ஆட்சியில் இதே போலத்தான் ஸ்டாலினும் கோரிக்கை வைத்தார். அதற்காக இவரும் அவர்பாணியில் சொல்வது அரசியலில் அரிச்சுவடு கூட தெரியாதவர் என்பதை நிரூபிக்கின்றது. எவ்வளவோ ஊழல்கள் கணக்கில் அடங்கா ஊழல்கள் இதற்க்கெல்லாம் வாய் திறக்க மாட்டார். மந்திரிகள் பேரில் ஊழல் விசாரணை நடக்கும்போது அந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற சொல்லி போராட மாட்டார் அறிக்கை கூட விடமாட்டார். மலைகளும் மகள்களும் கடத்திக்கொண்டுள்ள மாநிலத்தில் அதுபற்றியெல்லாம் வாயே திறக்க மாட்டார். நிலக்கரி ஊழல் பற்றியெல்லாம் ஏதாவது இவருக்கு தெரியுமா என்றால்..கட்சியில் தனக்கு எதிரானவர்களை ஒழிக்க சதிவேலை செய்யவே நேரம் இல்லாமல் தவிக்கின்றார். இதுதான் இவரது லட்சணமே. பக்கத்தில் ரங்கராஜ் முதல்வர் ஏகப்பட்ட நிவாரண உதவி திட்டங்களை அறிவித்துள்ளார்...அதனையெல்லாம் ஒப்பீடு செய்து அந்த அளவுக்கு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க தெரியாத இவரெல்லாம்.... நம்ம தலையெழுத்து


M Ramachandran
டிச 03, 2024 18:25

எங்கிருந்து உயர்த்துவது? தேர்தல் வரும் முன்னர் ஏற்பாடு பண்ண வேண்டியிருக்கு


M Ramachandran
டிச 03, 2024 18:24

எங்கிருந்து உயர்த்துவது. இப்போது தேர்ந்தெடுத்த கட்சி மக்கள் மத்திய அரசிடம் எங்கள் தலைவர் உட்பட புயல் என்ற கரணம் கிடைத்து விட்டது பசியாக யிருக்கிறோம். பசியாற வேண்டும் வயிறு குளிர எஜமான் புண்ணியமாக இருக்கட்டும் பிச்சை போடுங்கள். வழி தெரியாமல் இருந்த எஙகளுக்கு மழை வெள்ளம் என்ற காரணம் கிடைத்து விட்டது வெகு நாட்களாக பசியோடிருக்கிறோம். வீட்டு காஜானா வும் பசியோடிருக்கு. செந்தில் பாலாஜி இப்போதுதான் அமைச்சராகியிருக்கோம். சுதாரிக்க கொஞ்சம் நாட்கள் பிடிக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை