உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லியில் 1.41 ஏக்கர் காலி நிலம் குத்தகைக்கு வாங்குகிறது தமிழக அரசு

டில்லியில் 1.41 ஏக்கர் காலி நிலம் குத்தகைக்கு வாங்குகிறது தமிழக அரசு

சென்னை,: தமிழக அரசு துறை அலுவலகங்கள் அமைக்க, டில்லியில் 1.41 ஏக்கர் நிலம் குத்தகைக்கு வாங்கப்பட உள்ளது.டில்லி சாணக்யாபுரியில், 1.75 ஏக்கர், திக்கேந்திரஜித் மார்க்கில், 1.96 ஏக்கரில், தமிழ்நாடு விருந்தினர் இல்லங்கள் உள்ளன. இங்கு, தமிழக அரசின் பொதுத் துறை, உள்துறை, பொதுப்பணி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. இங்குள்ள வைகை இல்லத்தை மறுசீரமைத்து கட்டமைக்க, 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவங்கியுள்ளன. இதற்காக, அங்கிருந்த அரசு அலுவலகங்கள் தற்காலிகமாக பிகாஜி காமாவில் உள்ள எம்.டி.என்.எல்., தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான வர்த்தக கட்டடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன.

வாடகை ஒப்பந்தம்

இதற்காக, வாடகை, தண்ணீர் கட்டணம், பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட செலவுகளுடன், 2,400 சதுர அடி அறை, இரண்டு ஆண்டுகளுக்கு, 1.44 கோடி ரூபாய்க்கு வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு இடநெருக்கடி உள்ளது. வரும் காலங்களில் இட தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு இல்லம் உட்பட, டில்லியில் உள்ள தமிழக அரசின் பல துறைகளின் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டவும், அலுவலகங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, தரம்வீர்மன் மார்க் சாலையில், சன்லைன் காலனியில் உள்ள, 1.41 ஏக்கர் காலி நிலத்தை குத்தகைக்கு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீண்டகால குத்தகை

இதுகுறித்து, பொதுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:டில்லி சன்லைன் காலனியில், மஹாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் என்ற எம்.டி.என்.எல்., நிறுவனத்திற்கு சொந்தமான, 1.41 ஏக்கர் நிலம் உள்ளது. காலியாக உள்ள இந்த நிலத்தை பயன்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 25 ஆண்டுகளுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில், இந்த இடத்தை வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, 52 கோடி ரூபாய்க்கு விரைவில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. இங்கு, கான்கிரீட் அல்லாத தற்காலிக கட்டடமைப்புகளை பயன்படுத்தி, அலுவலகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தானதும், பொதுப்பணித் துறை வாயிலாக, பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ரமேஷ்
ஜூன் 17, 2025 11:26

தமிழர்கள் குடியிருப்பு பகுதிகள் இடிக்கப்பட்டு விரட்டப்பட்டனர்... இந்த நிலத்தை அவர்களுக்கு கொடுக்கலாம்


Ramesh Sargam
ஜூன் 17, 2025 09:56

மத்தியில் ஆட்சியை பிடிக்க ஏதாவது திட்டமா?


Kalyanaraman
ஜூன் 17, 2025 08:00

நம் தமிழகத்தின் ஒரு கோடியில் உள்ள தென்காசியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து ஸ்ரீதர் வேம்புவின் சோகோ நிறுவனம் பல வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு, பல ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக தொழில் செய்து வருகிறது. இவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியதுதானே? அடுத்த முறை திமுக வராது என்று தெரியும். ஆதலால், இன்னும் இருக்கிற ஆறு மாசத்துல எவ்வளவு கொள்ளை அடிக்க போறாங்களோ இந்த திமுக.


அருண், சென்னை
ஜூன் 17, 2025 07:41

அங்கும் ரியல் எஸ்டேட்டை தொடங்க வேண்டாமா? நாங்க இப்போதான் இந்தியாவை சுருட்ட ஆரம்பிப்போம்? இன்னும் 11 மாதம்தான் பாக்கி இருக்கு...எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா வடிவேலு?


Svs Yaadum oore
ஜூன் 17, 2025 07:19

வைகை இல்லத்தை மறுசீரமைத்து கட்டமைக்க, 257 கோடி ரூபாய் செலவாம் ..இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ??.....ஏன் வாடகை கட்டிடத்தில் இருக்க முடியாதா ??..வீடியோ கால் வழியாக இங்கிருந்து பேச முடியாதா ....இங்கு அரசு ஊழியர் சம்பளம் கொடுக்க கூட வக்கில்லை ..


Svs Yaadum oore
ஜூன் 17, 2025 06:54

வைகை இல்லத்தை மறுசீரமைத்து கட்டமைக்க, 257 கோடி ரூபாய் செலவாம் ...பணியாளர்களுக்கு குடியிருப்புகள், அலுவலகங்கள் அமைக்க திட்டமாம் ....இதெல்லாம் எதுக்கு??...டெல்லியில் வெறும் ஒன்றிய அரசுதான் உள்ளது ....இந்த காலத்தில் அமெரிக்காவில் நடக்கும் ப்ரொஜெக்ட்டுக்கு சென்னை பெங்களூரில் இருந்து வேலை பார்க்கிறார்கள்.. ஆனால் விடியல் சம்பாதிக்க டெல்லியில் 257 கோடி செலவு ....இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம்?? ...இங்கே ஆசிரியர் சம்பளம் மாதம் மாதம் கொடுக்க கூட வக்கில்லை ....


மீனவ நண்பன்
ஜூன் 17, 2025 06:36

ஒன்றிய அரசாங்கத்திடம் கலைஞர் சிலை வைக்க இடம் கேட்டு பத்து ஏக்கர் இலவசமா வாங்கலாம் டில்லியில் இந்தி தெரியாது போடா என்று சொல்ல முடியாதே ..நோண்டி நுங்கு எடுத்துருவாங்களே


kannan sundaresan
ஜூன் 17, 2025 05:45

தமிழ்நாட்டில் ஒழுங்கா வேலையை பாருங்க. டெல்லியில் உங்களுக்கு என்ன வேலை.?


புதிய வீடியோ