உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்க தயாரிப்பு குளிர்பானங்களை புறக்கணிக்க தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவு

அமெரிக்க தயாரிப்பு குளிர்பானங்களை புறக்கணிக்க தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவு

சென்னை: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா, 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால், நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு,ஜவுளி உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, அமெரிக்காவுக்கு பதிலடிதரும்வகையில், அந்நாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும்குளிர்பானங்களை புறக்கணிப்பதாக, தமிழக ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. நம் நாட்டில் இருந்து ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கடல் உணவு பொருட்கள் உள்ளிட்டவை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஐக்கிய அரபு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து ஜவுளி, தோல் பொருட்கள், ஆபரணங்கள், அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகத்தின் மொத்த ஏற்றுமதியில், அமெரிக்காவின் பங்கு, 31 சதவீதமாக உள்ளது. இந்திய வேளாண் மற்றும் பால் பொருட்கள் சந்தையில் கால் பதிக்க, அமெரிக்கவால் முடியவில்லை. சோளம், சோயாபீன்ஸ், ஆப்பிள், பாதாம் பருப்பு மற்றும் எத்தனால் மீது, இந்தியா வரிகளை குறைக்க வேண்டும் என, அமெரிக்கா வற்புறுத்தியது; அதை நம் நாடு ஏற்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், நம் நாட்டில் இருந்து, தங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் தமிழக தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே, அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில், அந்நாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் குளிர்பானங்களை புறக்கணிக்கப் போவதாக, தமிழக ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதேபோல், நம் நாட்டில் போக்குவரத்து உட்பட பல்வேறு வணிகத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க நிறுவனங்களை புறக்கணிக்குமாறு, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, தமிழக ேஹாட்டல்கள் சங்க தலைவர் எம்.வெங்கடசுப்பு கூறியதாவது: அமெரிக்காவை சேர்ந்த, 'பெப்சி, கோககோலா' போன்ற நிறுவனங்கள், நம் நாட்டில் குளிர்பானங்களையும், குடிநீரையும் விற்கின்றன. நம் நாட்டை சேர்ந்த நிறுவனங்களே தரமான குளிர்பானங்கள், குடிநீரை தயாரித்து விற்கின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப், நம் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால், நம் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. டிரம்பின் வரி விதிப்புக்கு பதிலடி தரும் வகையில், நம் நாட்டு தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், இனி, அமெரிக்க நிறுவனங்களின் குளிர்பானங்களை புறக்கணிப்பது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், இரவு, 10:00 மணிக்கு மேல் உணவகங்கள் திறக்க, போலீசார் அனுமதி மறுக்கின்றனர். சிறிய ஹோட்டல்களுக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, மாசு கட்டுப்பாடு வாரியம் கூறியுள்ளது. இதிலிருந்து, தமிழக அரசு விலக்கு அளிக்க வேண்டும். அமெரிக்கா வரி விதிப்பு, ஹோட்டல் தொழில்களை பாதிக்காது. இருப்பினும் நாங்கள் அரசுக்கு உதவும் விதமாக, வெளிநாட்டு குளிர்பானம் மற்றும் உணவுகளை தவிர்த்து, உள்ளூர் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளோம். மக்களிடம் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

அப்பாவி
செப் 04, 2025 17:11

அமெரிக்காவிலிருந்து ஆளுங்க வந்தால் ரூம் தரமாட்டோம்னு சொல்லுங்களேன்.


Rajasekar Jayaraman
செப் 04, 2025 12:56

சென்ற முறை காமெடி செய்தது போல் இல்லாமல் தொடர்ந்து பெப்சி கோகோ கோலா அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும்.


Ess Emm
செப் 04, 2025 12:26

இந்த மாதிரிக் இல்லிருமே ஒரு முடிவை எடுத்து. டிரம்ப்க்கும், அமெரிக்காவிற்கும் பாடம் புகட்டவேண்டும். இந்தியா என்ன அவர்களுடைய குப்பை கொட்டும் இடமா?. என்னிடம் நீண்ட நாட்களாக ஒரு அமெரிக்கா தயாரிப்பு ஒரு lighter இருந்தது. அச்சை கொண்டுலோய் குளத்தில் எரியைத்துவிட்டேன். இப்பொழுது தான் என்ன கு ஒரு நிம்மதி.


LION Bala
செப் 04, 2025 11:43

ஹோட்டல் உரிமையாளர்களின் முடிவு நல்லது தான். அனால் குளிர் பானம் மட்டும் போதாது Amazon, IBM, Microsoft, Google, Intel, Coca-Cola, பி&G products, Ford, and PepsiCo etc., போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும் அல்லது அதிக வரி விதிப்பு செய்யலாம். இதற்க்கு ஒன்றிய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். அப்போது தான் அமெரிக்காவின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியும்.


R Ravikumar
செப் 04, 2025 11:29

நல்ல முடிவு . நாம் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்


baala
செப் 04, 2025 11:24

அதை செய்யுங்கள் முதலில்


Sangi Mangi
செப் 04, 2025 11:04

அமெரிக்க தயாரிப்பு குளிர்பானங்களை புறக்கணிக்க தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவு என நீங்க தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சொல்ல கூடாது, அப்புறம் ஹொட்டேலுக்கு 48 சதவீதம் கிஸ்தி ஜி எஸ் டி போடுவாங்க. சங்கிகளின் டாட்டியும் மம்மி நிம்மியும் சொல்லணும். அவங்க சொல்லணுமுன்னா ட்ரம்ப் அதுக்கு பெர்மிசஸின் தரணும் ....


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 04, 2025 10:58

நீங்கள் வேண்டுமானால் புறக்கணிக்கலாம் ஆனால் தமிழக அரசு பாட்டலுக்கு ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு டாஸ்மாக் பார்கள் மனமகிழ் மன்றம் எனும் குடிகார கூடாரத்தில் கட்டாயமாக விற்றுவிடும்.


Moorthy
செப் 04, 2025 09:13

இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை ஹோட்டல்கள் இழக்கும்


உண்மை கசக்கும்
செப் 04, 2025 08:58

சில வருடங்கள் முன்பு வணிகர் சங்கங்களின் தலைவர் சொன்னார்.. இனி கோக் பெப்சி விற்க மாட்டோம் என்று. என்ன ஆச்சு. அவர்கள் கொடுத்த கோடிகளை வாங்கி விட்டு, இந்த பக்கம் மீண்டும் விற்க ஆரம்பித்தார். நம்ம ஊரில் எல்லாம் பணம் காசு துட்டு..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை