உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள்ளக்குறிச்சி: இந்தியாவிலேயே தமிழகம் தான் தனிக்காட்டு ராஜா என்பது போல 11.19 சதவீத இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை நாம் பெற்றுள்ளோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், ரூ.139 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கல்வராயன் மலையின் கம்பீரமும், ஆன்மிகமும் நிறைந்த கள்ளக்குறிச்சியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்களை தமிழகத்தின் முதல்வராகியுள்ள நான், ஸ்டாலினாக உங்களை சந்திக்க வந்துள்ளேன். சாதனைகளுக்கான அரசு இது; வாயில் வடை சுடும் அரசு அல்ல. இந்தியாவிலேயே தமிழகம் தான் தனிக்காட்டு ராஜா என்பது போல 11.19 சதவீத இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை நாம் பெற்றுள்ளோம்.

தமிழகம் தான் லீடர்

மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), மின்னணு பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோ மொபைல், தோல் அல்லா காலணி உற்பத்தி, ஸ்டார்ட் அப் தரவரிசை என எல்லாவற்றிலும் தமிழகம் தான் லீடராக உள்ளது. இந்தியாவிலேயே தொழிற்சாலையில் பெண்கள் அதிக அளவு பணி புரிவது தமிழகத்தில் தான். எல்லாருக்கும் எல்லாம், அனைத்து மாவட்ட வளர்ச்சி என்று சொல்வது சும்மா அல்ல. மத்திய அரசு தரவரிசைகள் எல்லாவற்றிலும் நம்பர் 1 ரேங்க் நம்ம தான். நெஞ்சை நிமிர்த்தி காலரை உயர்த்தி தமிழகம் முன்னேறுகிறது. இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? அவர்களால் சொல்ல முடியுமா? இது என்னுடைய ஓபன் சேலஞ்ச். தைரியம் இருந்தால் அவர்கள் சொல்லட்டும்.

ஏறுமுகம்

10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பாழான தமிழகம், 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் துள்ளி குதித்து எழுந்து இருக்கிறது. இனி எப்பொழுதும் ஏறுமுகம். மத்திய அரசின் தடைகளை கடந்து இந்த இடத்தில் இருக்கிறோம். செய்திகளை படிக்க மாட்டோம். உண்மையை பேசமாட்டோம். தமிழகத்தின் சாதனையை பற்றி வாய் திறக்க மாட்டோம் என்று சிலர் தமிழகத்தில் இருக்கிறார்கள். இப்படியே கண்ணை மூடிக்கொண்டு இருங்கள், நாங்கள் அடித்து தூள் கிளப்பி கொண்டு போய்விட்டு இருக்கிறோம்.

ரோஸ் மில்க்

திமுக ஆட்சியின் சாதனைகளுக்கு மகுடமாக 2026ல் மக்கள் அளிக்கும் தீர்ப்பு தான். உங்களுக்கான ரியாலிட்டி செக் ஆக இருக்கும். கிறிஸ்துமஸ் தினத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளை தாக்கும் சூழலை பாஜ அரசு உருவாக்கி இருக்கிறது. இந்த மாடலை தமிழகத்தில் கொண்டு வரப்பார்க்கிறார்கள். நம்ம மக்கள் உஷார். திருப்பரங்குன்றம் தர்கா கொடியை முருக பக்தர்கள் வணங்குகிறார்கள். மதுரை சித்திரை திருவிழாவுக்கு வரும் ஹிந்து பக்தர்களுக்கு பள்ளி வாசல் முன்பு ரோஸ் மில்க் கொடுக்கிறார்கள். தை முதல் நாளில் தேவாலயத்தில் பொங்கல் வைத்து படைக்கிறார்கள். கிறிஸ்துமஸ், ரம்ஜான் வந்துவிட்டால் கேக், பிரியாணி எங்கே என்று உரிமையாக கேட்கிறார்கள். 'எம்மதமும் சம்மதம்' என்கிற தமிழகத்தின் ஒற்றுமை, நல்லிணக்கம்தான், மதவாத அரசியல் செய்து மக்களை பிளவுபடுத்த நினைக்கும் பாஜவின் கண்களை உறுத்துகிறது.

மதவெறி

எத்தனை அடிமைகளை சேர்த்துக்கொண்டு அந்தர் பல்டி அடித்தாலும் சரி, ஒற்றுமையாக வாழக்கூடிய தமிழக மக்களிடம் மதவெறியைத் தூண்ட முடியாது. இந்த ஸ்டாலின் இருக்கும் வரை, திராவிட மாடல் அரசு இருக்கும் வரை உங்கள் மதவெறி ஆட்டத்திற்கு இங்கு இடம் கிடையாது. தமிழக மக்கள் உங்களை ஓட்டுக்களால் விரட்டி அடிப்பார்கள். தமிழகத்தில் உங்கள் வித்தை வேலைக்கு ஆகாது. நம்முடைய கடமை, வாக்காளர் பட்டியலில் நம்ம பெயரை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

8 புதிய அறிவிப்புகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 8 அறிவிப்புகள் பின்வருமாறு:1. ரிஷிவந்தியம் புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படும்.2. ரூ.18 கோடியில் உளுந்தூர் பேட்டை அரசு கலைக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டப்படும்.3. உளுந்தூர்பேட்டை வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பளவில், ரூ.10 கோடி செலவில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.4. புதுப்பாலப்பட்டி கிராமத்தில் ரூ.18.50 கோடியில் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.5. சின்னசேலம் வட்டத்தில் ரூ.3.9 கோடியில் புதிய தீயணைப்புத்துறைகட்டடம் கட்டப்படும்.6. கல்வராயன் மலை பகுதியில் மகளிர் விடியல் பயணம் திட்டம் விரிவுபடுத்தப்படும்.7. கள்ளக்குறிச்சியில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், குடியிருப்புகள் அமைக்கப்படும்.8. திருக்கோயிலூர் பகுதி விவசாயிகளின் நலனுக்காக அரியூர் கிராமத்தில் ரூ.5.4 கோடியில் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

ram
டிச 27, 2025 04:30

தமிழ் நாடு நாசமாப்போனதுக்கு இந்த ராஜாவின் ஈகோ தான்னு சொல்லுரீங்க...


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 27, 2025 08:35

கவனிச்சுப்பாருங்க ..... கள்ளக்குறிச்சிக்கான பல திட்டங்களை அறிவிச்சிருக்கார் .... அவற்றை 2021-26 காலகட்டத்தில் எளிதாக நிறைவேற்றியிருக்கலாமே >>>>


ram
டிச 26, 2025 21:57

ஆமா.. புள்ளி ராஜா தானே..


Sun
டிச 26, 2025 20:01

கிறிஸ்துமஸ், ரம்ஜான் வந்தால் கேக் எங்கே? பிரியாணி எங்கே? என்று உரிமையோடு கேட்கிறார்களாம்? அதுதானே பிரச்சனையே? கேக்,பிரியாணி வாங்கி உரிமையோடு இவர்கள் உண்பார்கள். இவர்கள் கொடுத்தால் அவர்கள் உண்பார்களா? இவர்கள் பள்ளிவாசல் நோன்பு கஞ்சி வாங்கி உண்பார்கள்! இவர்கள் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கூழ் கொடுத்தால் அவர்கள் உண்பார்களா? இவர்கள் கேக் சாப்பிடுவார்கள் ,பிரியாணி சாப்பிடுவார்கள் !பதிலுக்கு இவர்கள் பொங்கல் கொடுத்தால் அவர்கள் உண்பார்களா? சமூக நல்லிணக்கம் என்பது ஸ்டாலின் சொல்வதைப் போல் ஒரு மதத்தினருக்கு மட்டுமல்ல பிற மதத்தினருக்கும் உண்டு. கேக் எங்கே? பிரியாணி எங்கே? என்று உரிமையோடு கேட்பார்கள் என்று சொல்லும் ஸ்டாலினால் மாரியம்மன் கூழ் எங்கே, பொங்கல் எங்கே என்று உரிமையோடு அவர்கள் கேட்பார்கள் என்று சொல்ல முடிகிறதா? அப்புறம் என்ன நல்லிணக்கம் ? நல்லிணக்கம் என்பது எப்போதும் ஒரு வழிப் பாதையல்ல!


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 26, 2025 19:59

நாம் இங்கு வேறு விஷயங்களில் மூழ்கி இருக்க சத்தம் இல்லாமல்.. ஒரு விவகாரமான சம்பவம் நடந்துள்ளது... போலி ஆதாரங்களுடன் தமிழகத்தில் தங்கியிருந்த வங்கதேசத்து ரோங்கியோக்களை க்யூ பிரிவு போலீசும்,, லோக்கல் போலீசும் இணைந்து... கிட்டத்தட்ட 175 பேர் கைது செய்யப்பட்டு.. கிரிமினல் வழக்கு பதியப்பட்டு.. சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.. இங்க தான் ஒரு டுவிஸ்ட்..எந்த உலக நாட்டிலும் நடக்காத ஒரு விஷயம் தமிழகத்தில் நடந்திருக்கு..அப்படி கைது செஞ்சவங்களை பூரா நம்ம கோர்ட்டு ஜாமீன் கொடுத்திருக்கு...எந்த ஒருநாட்டிலும் பிற நாட்டு கைதிகளுக்கு எளிதில் ஜாமின் கொடுக்க மாட்டார்கள்... காரணம் தப்பித்து தலைமறைவாகி விடுவார்கள் என்பதால்... ஆனா நம்ம ஊர்ல மட்டும் அதிசயமா.. கைது செய்து சிறையில் அடைத்த வங்கதேசிகளுக்கு நிதிபாதிகள் ஏன் ஜாமின் கொடுத்தனர் என்பது அந்த திராவிடியாக்களுக்கே வெளிச்சம்... சரி இப்போ அதுல என்ன பிரச்சனைனா.. அந்த ஜாமீன் வாங்கிட்டு போன 175 பேர்ல 75பேர் எங்க இருக்கானுங்கனே தெரியலயாம்.. பொதுவா இப்படி ஜாமீன் வாங்கி வர்றவங்களுக்கு திருச்சில சிறப்பு முகாம் இருக்கு.. அதை விட்டு வெளியே வர முடியாது...ஆனால் ரோங்கியாக்களுக்கு மட்டும் இந்த விதிமுறை பின்பற்றப்படவில்லையாம்.. ஒவ்வொருத்தனா வெளிய வந்து எங்க போனானுங்கனே தெரியலையாம்... இப்போ யாரை குத்தம் சொல்றது...சட்டவிரோதமாக குடியேறுனவங்களுக்கு எதுக்கு ஜாமீன் கொடுத்தீங்கன்னு நிதிபாதிகளையா..>>>> இல்ல முகாம்ல வச்சிருந்தவர்களை வெளியே விட்டவங்களையா >>>> இல்ல மாநில தலைமையில் இருந்து வந்த உத்தரவாலையா >>>> இந்த இடத்துல இன்னொரு அசிங்கபட வேண்டிய விஷயம்.. இத்துனூண்டு நாடான இலங்கை கூட கடல் தாண்டி போற மீனவர்களை கைது பண்ணிக்கிட்டு ஜாமீன் கொடுக்க மாட்டேன்கிறானுங்க... மத்திய அரசே நேரடியா தலையிட்டா மட்டும்தான் விடுறானுங்க...அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டு ... நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் அகதிகளை தேடித் தேடி பிடித்துக் கொண்டிருக்க நம்ம மட்டும் பிடிச்சவங்கள தப்பிச்சு ஓட விட்டு இருக்கோம்... நம் மாநிலத்துக்கு இதை விட அசிங்கம் தேவையா..>>>>


பெரிய ராசு
டிச 26, 2025 19:58

ஆமாம் ஊழல் அட்டூழியம் திருட்டு அராஜகம் பெரும்பணியினார் மேல் முடக்குவாதம் , குன்ற ஆட்சி , காவலர்களை ஏவலர்கள் ஆக்கிய பெருமை, மற்றும் எனிலடங்கா செயலுக்கு தமிழகம் தனிக்காட்டு ராஜா இந்த ஊழல் தீயமுக...


sivaram
டிச 26, 2025 19:30

விடியல் ,சமூக நீதி , சமத்துவம், திராவிட மாடல் , மத சார்பின்மை , அவுட் ஆப் கன்ட்ரோல், கூட்டாட்சி தத்துவம் , தனிக்காட்டு ராஜா ,சங்கி படை , ஸ்மித் ஷா இல்லை எந்த ஷா வந்தாலும் ,தொட்டு பார்க்க முடியுமா , கடந்த 10 நாட்கள் வீர வசனம் , இப்படிக்கு உடன்பிறப்பு ,


Radja
டிச 26, 2025 19:19

அரசாங்க பணத்தை கொள்ளைஅடிப்பதில்.


SIVA
டிச 26, 2025 19:12

தமிழகம் என்று கவர்னர் சொன்னபோது பிரச்னை செய்தார்கள் தமிழ்நாடு என்று சொல்ல வேண்டும் சொன்னார்கள் இன்று இந்த திராவிட மாதிரி என்ற பெயரில் பேசும் தண்ணி காட்டு ராஜா அதை மறந்து விட்டார் ....


ramesh
டிச 26, 2025 19:12

தமிழ் நாடு 11.19 % பொருளாதார வளர்ச்சி என்பது பெருமை பட வேண்டிய விஷயம் . ஆனால் அதை பொறுக்க முடியாமல் வயித்தெரிச்சலில் சங்கிகள் போடும் கருத்தை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது


vivek
டிச 26, 2025 19:56

ரமேஷு ,, தமிழக வளர்ச்சிக்கும் திமுகவிற்கும் சம்பந்தம் இல்லையே...


ஆரூர் ரங்
டிச 26, 2025 19:09

இதே ஊரில் கள்ளச் சாராயம் குடித்த பலர் இறந்த போது தலையை காட்டாமல் தேர்தலுக்காக விசிட் அடிப்பது புரிகிறது. சாதனை பூக்கடை க்கு விளம்பரம் தேவையில்லை. உங்கள் சாக்கடை திமுக வுக்கே அத்தியாவசியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை