உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீர் மின் உற்பத்தியில் மத்திய அரசு இலக்கை மிஞ்சிய தமிழகம்

நீர் மின் உற்பத்தியில் மத்திய அரசு இலக்கை மிஞ்சிய தமிழகம்

சென்னை : மத்திய அரசு, 2024 - 25ல், தமிழகத்தில், 400 கோடி யூனிட் நீர் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்த நிலையில், அதை விட கூடுதலாக, 80 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களில் மின் வாரியத்திற்கு, 2,321 மெகா வாட் திறனில், 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன. மழை காலங்களில் அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி, நீர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், ஒரு யூனிட் மின் உற்பத்தி செலவு சராசரியாக, 75 காசாக உள்ளது. இருப்பினும், போதிய மழை இல்லாததால், தினமும் சராசரியாக, 750 - 1,000 மெகா வாட் மின்சாரம் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது.மத்திய மின்சார ஆணையம், 2024 - 25ல், தமிழக நீர் மின் நிலையங்களில், 400 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது. அந்தாண்டில் தென் மேற்கு பருவ மழைப் பொழிவு அதிகம் இருந்ததால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகம் இருந்தது. இதையடுத்து, நீர் மின் நிலையங்களில், 480 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இது, 2023 - 24ல், 371 கோடி யூனிட்களாக இருந்தது. மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை விட, கடந்த ஆண்டில் கூடுதலாக, 80 கோடி யூனிட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Murthy
ஏப் 18, 2025 13:10

பெருந்தலைவர் காமராசர் கட்டிய அணைகள் இன்னமும் பலன் கொடுத்துக்கிட்டு இருக்க. திராவிட பாலம் 3 மாதத்தில் உடைந்து காணாமல் போனது.....


M Ramachandran
ஏப் 18, 2025 12:57

இந்த வருடம் இயற்கையின் அருள். இல்லையென்றால் டப்பா டான்சு ஆடி இருக்கும்


Barakat Ali
ஏப் 18, 2025 12:35

நாங்க குடும்ப கட்சி அடிமைகள்.. ஒன்றியம் எங்க எச்சமானர்களை பாராட்டி சொல்லுறதை மட்டும் நம்புவோம்.... அதுல, இதுல பின்தங்கியிருக்கு ன்னு சொல்லிட்டா சகட்டுமேனிக்கு கம்பெனி, ... ன்னு வசைபாடுவோம் .....


பாமரன்
ஏப் 18, 2025 09:37

என்னாது தமிழ் நாட்டில் நல்லாருக்குன்னு மத்திய அரசு சொல்லுதா?? ஓஹோ அதனால் தான் அய்யோ அய்யோ அய்யோ எரிச்சல் தாங்க முடியாமல் அலறுதுகளா.... சரியாகிடும் சரியாகிடும்


raja
ஏப் 18, 2025 13:23

அப்புறம் ஏன் மின்சார வாரியம் நஸ்டத்தில் இயங்குதுன்னு விடியலிடம் கேட்டு சொல்லேன்....


ayen
ஏப் 18, 2025 09:03

மழை அதிகமாக பெய்ததால் அதிக மின் உற்பத்தி ஆகியுள்ளது. இதை தமிழக அரசின் சாதனை என்று கூறினால் சிரிப்பு தான் வருது.


பாமரன்
ஏப் 18, 2025 09:40

தமிழ் நாட்டை விட அதிக மழை பொழியும் மாநிலங்களில் பலவற்றில் நம்ம கம்பெனி ஆட்சி தான். ஆனால் அங்கெல்லாம் மழை வெள்ள நிவாரணம் தான் குடுக்கறாய்ங்க மத்திய அரசு... அனேகமாக அதுக்கு காரணம் காங் நேரு அவுரங்கசீப் டீம்கா தான்... கரீக்டா ஸாரே


raja
ஏப் 18, 2025 08:23

அப்படியே ஊழல் கொலை கொள்ளை தங்க கடத்தல், போதை பொருள் விற்பனை, கள்ள சாராய விற்பனை அதனால் ஏற்படும் சாவுகள் அதற்கு கொடுக்கப்படும் நிவாரண தொகை, போதை மருந்து கஞ்சா கடத்தல், கற்பழிப்பு இவைகளிலும் ஏதாவது இலக்கு வைத்தால் ...இலக்கு இல்லாமலும் விடியா மாடல் ஆட்சி நடக்கும் நாங்கதான் மிஞ்சுவோம் என்று ஒன்கொள் கோவால் பிற கொள்ளையன் பெருமிதம்....


Kasimani Baskaran
ஏப் 18, 2025 07:33

பெரியார் மட்டும் இல்லை என்றால் இதெல்லாம் சாத்தியமாகி இருக்காது என்று உருட்ட நாலு உடன்பிறப்புக்கள் வருவார்கள்.


Subramanian
ஏப் 18, 2025 07:20

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது போல ஒரே ஆறு திட்டத்தை ஏன் இந்த மத்திய அரசு கொண்டு வரவில்லை.


கொங்கு தமிழன் பிரசாந்த்
ஏப் 18, 2025 07:05

தமிழகம் மகாராஷ்டிரா விட சிறந்து விளங்கிறது.


Vasan
ஏப் 18, 2025 07:02

Well done TNEB staff officers, workers and all, who made this possible by well Maintaining the hydro plants and operating them in efficient manner. At this time we must also remember and thank Madam Jayalalithaa who was instrumental in establishing new hydro plants and for revamping the old inefficient plants. She made Tamilnadu power surplus during mid of her regime 2011-2016, and from then and upto 2021 TN was power surplus. It continued upto 2024 due to new power plants established in her regime. Now power deficiency is back from last year. There is lot of unannounced power cut happening in rural villages, and they are the most affected.


raja
ஏப் 18, 2025 13:26

இதை நீங்கள் தமிழில் எழுதி இருந்தால் படிக்காத பாமரனுக்கும் புரிந்திருக்கும்.


புதிய வீடியோ