உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளிக்கு களைகட்டிய டாஸ்மாக் கடைகள்; ரூ.790 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

தீபாவளிக்கு களைகட்டிய டாஸ்மாக் கடைகள்; ரூ.790 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

சென்னை: தீபாவளியை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில், 'குடி'மகன்கள் மது வகைகளை அதிகம் வாங்கியதால், மது விற்பனை களைகட்டியது. தீபாவளி, அதற்கு முந்தைய இரு நாட்கள் என, மூன்று நாட்களில், 790 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. இந்த கடைகளில், தினமும் சராரியாக, 150 கோடி ரூபாய்க்கும், வார விடுமுறை மற்றும் விசேஷ விடுமுறை நாட்களில், அதை விட அதிகமாகவும், மதுபானங்கள் விற்பனையாகின்றன. இம்மாதம், 20ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. இதற்காக, அரசு, தனியார் நிறுவனங்கள், பணியாளர்களுக்கு போனஸ் வழங்கின. பலரிடமும், பணப்புழக்கம் அதிகம் இருந்ததால், 'குடி'மகன்கள் தீபாவளியை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாட, கடந்த சனிக்கிழமை முதல், வழக்கத்தை விட கூடுதலாக மது வகைகளை வாங்கியபடி இருந்தனர். இதனால், தீபாவளி வரை டாஸ்மாக் கடைகளில், மதியம் 12:00 மணிக்கு திறந்தது முதல், இரவு 10:00 மணிக்கு மூடப்பட்டது வரை, 'குடி'மகன்கள் கூட்டம் அலைமோதியதால், மது விற்பனை களைகட்டியது. இதையடுத்து, கடந்த, 18ல், 230.66 கோடி; 19ல், 293.73 கோடி; 20ல், 266.06 கோடி ரூபாய் என, மூன்று நாட்களில் மட்டும், 789.85 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இதில், சென்னை மண்டலத்தில், 158 கோடி; திருச்சி, 157 கோடி; சேலம், 153 கோடி; மதுரை, 171 கோடி; கோவை மண்டலத்தில், 150 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு, தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய இரு நாட்களில் மது விற்பனை, 650 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 140 கோடி ரூபாய்க்கு, மதுபானங்கள் கூடுதலாக விற்பனையாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

veeramani
நவ 03, 2025 10:06

மிகுந்த மனா வருத்தம் தரக்கூடிய செய்தி .. விவசாயிகள் நெல் கொள்முதல் பாதிப்பில் உள்ளது கரும்பு வெட்டி பணம் வரவில்லை .கொஞ்சம் விவசாயிகளின் நலன்களை காது கொடுத்து கேளுங்கள்


Techzone Coimbatore
அக் 22, 2025 14:21

நல்ல முன்னேற்றம்.


sugumar s
அக் 22, 2025 13:26

very sad. this govt. made people drunkards. definitely the ministers and officers working for this will never have good life. it will reflect on their kith and kin. very sad to know no court or no prominent person is taking cognizance and fighting out this


lana
அக் 22, 2025 12:33

இது தாண்டா தமிழ் நாடு. 24 மணி நேர குடி காரன் வாழும் மாநிலம். இது தான் அடிதடி வெட்டுகுத்து, கள்ள உறவு மற்றும் செயற்கை கருத்தறிதல் மையம் போன்றவைக்கு காரணம். இன்னும் 10 ஆண்டுகள் பின்பு நமது சந்ததிகள் வேறு மாநிலம்க்கு வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகும். 100 சதம் கல்வி என்ற நிலை தாண்டி 100 சதவீதம் குடிகாரன் வசிக்கும் மாநிலம் என்பது வெகு சீக்கிரம் எட்டி விடும். இதற்கு சிலர் பக்கத்துல மாநிலம் இல குடிக்க வில்லை யா என்று முட்டு கொடுப்பார்கள். என் வீட்டில் தீ எரியுது என்றால் அதை அணைக்க வேண்டுமே தவிர அடுத்தவன் வீட்டிலும் எரியுது என்று சொல்ல முடியாது. நம் சந்ததிகளை காக்க வேண்டிய பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது


திகழ்ஓவியன்
அக் 22, 2025 12:32

UPயில் 2000 கோடி வியாபாரம்


Shekar
அக் 22, 2025 13:00

வந்திருச்சு, கூச்சமில்லாமல் பொய் சொல்ல


Anand
அக் 22, 2025 13:35

பணத்தை எண்ணுவதற்கு இவரை தான் UP அழைத்து சென்றது.


AKM KV SENTHIL MUSCAT
அக் 22, 2025 12:05

எந்த ஆட்சி வந்தாலும் மது விற்பனை ஜோராக நடக்கும் மக்கள் நாம்தான் சிந்திக்கவேண்டும் இங்கே கருத்து தெரிவிக்கும் எத்தனை நண்பர்கள் ஆல்ககால் எடுக்காமல் அதுவும் தீபாவளிக்கு மட்டும் குடிப்போம் என்ற சிந்தனையில் எடுத்தவர்கள் குடித்தவர்கள் இருத்திருப்பார்களோ நமக்கு தெரியாது. அதேசமயம் நாம் கடைக்கு செல்லாமல் இருந்தால் அவன் வாடிக்கையாளர்கள் யாரும் வருவதில்லை என்று கடையை மூடிவிடுவான் நாம்தான் 10 மணி கடைக்கு காலையில் 8 மணிக்கே வரிசையில் நிற்கிறோம் ஆகையால் மக்கள் நாம்தான் படிப்படியாக குறைக்க அரசாங்கத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்படும் எனவே நாம் தான் சிந்திக்கவேண்டும் .....


Techzone Coimbatore
அக் 22, 2025 14:27

இந்த மாதிரி பொறுப்புள்ள மக்கள் தான் வளமான சமுதாயம் உருவாகி வருகிறது. இந்த பொது மக்கள் கேவலமாக நினைக்கும் ... கூட உணவுக்கு மட்டும் தான் அலைகிறது, ஆனால் ஆறுஅறிவு மனிதன் கேவலமாக இப்படி குடிக்கு அலைகிறான்.


Venugopal S
அக் 22, 2025 11:58

துணிக்கடை, பட்டாசு, இனிப்பு மற்றும் கார வகைகள் போன்ற எல்லா விற்பனைகளும் கூடும்போது டாஸ்மாக் விற்பனை கூடுவது இயற்கை தானே! ரெகுலராக குடிப்பவர்கள் தவிர அக்கேஷனலாக விஷேச நாட்களில் குடிப்பவர்களும் சேர்ந்து வாங்கியதால் விற்பனை கூடியுள்ளது. அதுதவிர மக்களின் வருமானம் கூடியுள்ளது என்பதும் ஒரு காரணம்!


N Sasikumar Yadhav
அக் 22, 2025 11:21

திராவிட மாடலின் கொள்கை 2 மணிநேர வெடி 24 மணிநேர குடி. அதற்கு தகுந்தாற்போல் நீதிமன்றம் திராவிட மாடலிங் ஆட்சியில் தமிழகம் தலைநிமிர வாய்ப்பேயில்லை


Shekar
அக் 22, 2025 09:45

ஏன் டாஸ்மாக் நடத்துறீங்கன்னு கேட்டா, கள்ள சாராயம் குடிச்சி சாககூடாது அப்டிங்கிறதால அரசு டாஸ்மாக் நடத்துகிறது, அப்படின்னு அறிவியல்பூர்வமான விளக்கம் கொடுத்தாங்க. இப்போ கள்ள சந்தையில கஞ்சா, மெத் போன்றவைகளை உபயோகித்து கெட்டுப்போறாங்க, அதனாலே அரசே இதுக்கு ஆவண செய்யணும். டாஸ்மாக் மாதிரி ஏதாவது வந்தால் தமிழர்கள் வாழ்வு சிறக்கும். அதனால் அரசு கஜானாவும், மாண்புமிகுக்கள் கஜானாவும் ஓவர் ப்லோ ஆகும்


Muralidharan S
அக் 22, 2025 09:24

வியாபாரம் அதிகரிச்சாதானே இலவசங்களுக்கு / பண உதவி திட்டங்களுக்கு பணம் வீசி ஏறிய முடியும். மக்கள் இலவசங்களுக்கு அலையும் வரை முன்னேறப்போவது இல்லை.. கட்சியினர் தங்கள் கைக்காசை போட்டா மக்களுக்கு இலவசங்களை வீசுகின்றனர்? அரசாங்கத்திற்கு வரும் வருமானம் ஆக்கபூர்வ திட்டங்களுக்கு/ கட்டமைப்பு திட்டங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டங்களுக்கு போகாமல், இப்படி இலவசங்களுக்கு ஊதாரித்தனமாக போவதால்தான், மக்கள் இன்னும் கையேந்தி நிற்கும் நிலை என்பதை புரிந்து கொள்ளாமல் மது போதையில் வைத்து இருக்கவே டாஸ்மாக்கிறர்க்கு விற்பனை டார்கெட்.. மேலும் டாஸ்மாக் மூலம் மக்களிடம் திரும்ப பெற்றுவிடுகிறார்கள்.. இதை எல்லாம் புரிந்துகொள்ளும் நிலையில் தமிழக வாக்காளர்கள் இல்லை.. தங்கள் தலைவனை திராவிஷ அரசியலில் கட்சிகளில் தேடுகிறார்கள்.. இல்லை என்றால் யாரோ எழுதிகொடுத்த வசனத்தை நடித்து பேசும் கூத்தடிகளிடம் தேடுகிறார்கள்.... தங்கள் தகுதிக்கு இது போதும் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.