உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாடா சன்ஸ் ஐ.பி.ஓ.,வுக்கு வலியுறுத்தல்

டாடா சன்ஸ் ஐ.பி.ஓ.,வுக்கு வலியுறுத்தல்

மும்பை,:வெளிப்படைத்தன்மை, நியாயத்தன்மை, சிறந்த நிறுவன நிர்வாக நடைமுறைகளை உறுதிப்படுத்தும் நோக்கில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் புதிய பங்குகளை வெளியிட வேண்டும் என ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம் வலியுறுத்தியுள்ளது. பங்குச்சந்தை கண்காணிப்பு ஆணையமான செபியின் 2021 விதிமுறையின்படி, டாடா சன்ஸ் நிறுவனம், வங்கிசாரா நிதி நிறுவன பிரிவில் சேர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 30ம் தேதிக்குள் அது ஐ.பி.ஓ., எனப்படும் புதிய பங்கு வெளியிடுவது கட்டாயமாக இருந்தது. ஆனால், டாடா சன்ஸ் விடுத்த கோரிக்கையை ஏற்று, பங்கு வெளியிடுவதில் இருந்து செபி விலக்கு அளித்தது. இந்நிலையில், டாடா டிரஸ்ட்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் இடையே, டாடா குழும நிர்வாகம் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தகவல் வெளியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை