உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு ஊழியர்களுக்கும் மாதந்தோறும் வரி பிடித்தம்!

அரசு ஊழியர்களுக்கும் மாதந்தோறும் வரி பிடித்தம்!

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, கட்டாயமாக மாதந்தோறும் வருமான வரி பிடித்தம் செய்யும் புது நடைமுறை, இந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. விருப்பம் போல வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை தமிழக அரசு கைவிடுகிறது.தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், வருமான வரி செலுத்தக் கூடியவர்களுக்கு, அவர்கள் விருப்பம் போல், மாதந்தோறும் அல்லது கடைசி மூன்று மாதங்களில் வருமான வரி பிடிக்கப்பட்டு வந்தது.

அரசு முடிவு

தற்போது, ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., எனப்படும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் வழியே வருமான வரியை கணக்கிட்டு, மாதந்தோறும் சம்பளத்தில் பிடிக்கும் முறையை அமல்படுத்த அரசு முடிவெடுத்து உள்ளது.இந்த புது நடைமுறை, கடந்த ஏப்ரலில் நடைமுறைக்கு வரவிருந்தது. ஆனால், தலைமை செயலக சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, மார்ச்சில் பிடித்த வருமான வரியே கடந்த மாதம் பிடிக்கப்பட்டது. தற்போது, மாதந்தோறும் வருமான வரி பிடிக்கும் புது நடைமுறை, மே மாதம் முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கருவூல கணக்குத்துறை சார்பில், அனைத்து துறைகளிலும் சம்பள பட்டியல் தயாரிக்கும் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள கடிதம்:வருமான வரி செலுத்த தகுதி படைத்த ஊழியர்கள் அனைவருக்கும், அவர்கள் பெறும் சம்பளத்தின்படி, செலுத்த வேண்டிய வருமான வரி கணக்கிடப்படும்.

'பான் கார்டு'

அந்தத் தொகைக்கு எவ்வளவு பிடிக்கலாம் என கணக்கிட்டு, மாதந்தோறும் கட்டாயம் பிடிக்கப்படும். இந்த நடைமுறை இம்மாதம் முதல் அமலுக்கு வருகிறது.'பான் கார்டு' எனப்படும் நிரந்தர கணக்கு எண் இல்லாத ஊழியர்கள், அதை பெற்று, அந்த எண்ணை தெரியப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தாங்கள் செலுத்த வேண்டிய வருமான வரியை, வருமான வரித்துறை அறிவித்துள்ள, 'Old Regime' எனப்படும் பழைய முறையில் கணக்கிட்டு பிடிக்க வேண்டுமா அல்லது 'New Regime' எனப்படும் புது நடைமுறைப்படி பிடிக்க வேண்டுமா என்பதை தெரிவிக்க வேண்டும்.

கோரிக்கை

எந்த முறையில் வருமான வரி பிடிக்க வேண்டும் என்பதை, ஒரு முறை தேர்வு செய்த பின், எதிர்காலத்தில் மாற்ற முடியாது. எனவே, கவனமாக தேர்வு செய்யவும். வருமான வரித்துறையின் பழைய கணக்கீட்டு நடைமுறையின்படி வருமான வரி செலுத்துவோர், தங்கள் சேமிப்பு விபரங்களை வரும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், தலைமை செயலக சங்கம், நடப்பு நிதியாண்டிலிருந்து, புதிய மென்பொருள் வழியே வருமான வரி பிடித்தம் செய்வதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Rengarajan V
மே 09, 2024 23:37

தங்களது கருத்து முற்றிலும் தவறு எனது குடும்பத்திலும் ஒரு அரசு ஊழியர் இருப்பதால் இங்கு எனது கருத்தைப் பதிவிடுகிறேன் இது தமிழக அரசின் செயல்பாட்டு வழிமுறைகளில் இதுவும் ஒன்று Government of Tamil Nadu implemented Integrated Financial and Human Resource Management System IFHRMS through Finance Department to optimize and manage the State finances with the help of technology This project is developed and maintained by the ELCOT & WIPRO இதில் அனைத்து அரசு ஊழியர்களின் தகவல்களும் பணிப்பதிவேடு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் இலக்கங்கள் கொண்ட User ID கொடுக்கப்பட்டுள்ளது இதன்மூலம் தங்களது தனிப்பட்ட கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள் நுழைந்து அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம் மாத சம்பளப்பட்டியலையும் Pay Slip பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் கடந்த வருடம் வரை ஒரு குறிப்பிட்ட தொகையை வருமான வரியாகப் பிடித்தம் செய்து March to February - months, February மாதத்தில் வருமானவரிப் படிவம் தயார்செய்து மீதமுள்ள வரித்தொகையை மார்ச் மாத சம்பளத்தில் மொத்தமாகப் பிடித்துக்கொள்வார்கள் இந்த முறையை தற்பொழுது மாற்றி மாதாமாதம் பிடித்தம் செய்துகொள்ளும் வகையில் வடிவமைத்திருக்கிறார்கள் எனவே இவை அனைத்தும் நிர்வாக ரீதியான செயல்பாடுகள் SOP - Standard of Operating Procedure என்பதால் இதை அரசியல் ரீதியாக அணுகவேண்டாம்


Ramesh
மே 09, 2024 21:10

அந்த முப்பதாயிரம் கோடிக்கு வரி விலக்கு உண்டு


tamillan
மே 09, 2024 19:21

வருமான வரி துறை மத்திய அரசின் கீழ் தான் வருகிறது ஆனா யாரு சம்பளம் குடுக்கறாங்களோ அவங்க தான் வரிய புடிச்சு வருமான வரி துறைக்கு செலுத்தணும் இந்த விஷயத்தில் திமுக அரசுதான் புடிச்சு கட்டணும்


திகழ்ஓவியன்
மே 09, 2024 18:07

YES எலெக்டரால் பாண்ட் க்கும் tax போடணும்


என்றும் இந்தியன்
மே 09, 2024 16:55

அரசே இதுலே கூடவா ஒழுங்கின்மை?? வருடமாக எனக்கு மாதாமாதம் வருமான வரி பிடித்தம் நடந்து கொண்டிருக்கின்றது?? கடைசி மாதத்தில் கூடுதலாக இல்லை குறைவாக வருமான வரி பிடித்தம் இருக்கும்?????


ganesha
மே 09, 2024 15:40

அப்டியே லஞ்சப் பணத்துக்கும் ஒரு வரி போட்டா நல்ராருக்குமுங்க ?


Kasimani Baskaran
மே 09, 2024 13:59

திராவிட ஏகாதிபத்தித்தில் வருமான வரி பிடித்தம் செய்வதை முதல்வர்தான் முடிவு செய்வார் கஷ்டம் சாமி


subramanian
மே 09, 2024 12:25

என்னய்யா பதிவு? வருமான வரி குறித்து தெரியுமா உனக்கு? சம்பளத்தில் வரி இந்தியா முழுவதும் பிடிக்கப்படுகிறது லஞ்சம் வாங்குவது ஊழியரின் தவறு அதற்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்?


PG ILLANGOVAN
மே 09, 2024 11:54

வருமான வரி பிடித்தம் மத்திய அரசுக்கு தொடர்புடையது முதல்வருக்கு கோரிக்கை தருவது தவறு


Jai
மே 09, 2024 11:00

மாதம் ஒரு லட்சம் சம்பளத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு தான் வருமான வரி வரும். பெரும்பாலான அரசு ஊழியர்கள் சம்பளம் வருமான வரி கட்டும் அழகை விட குறைவாகவே உள்ளது. அதிகபட்சம் 10 முதல் 20 சதவீத அரசு ஊழியர்கள் வருமானம் ஒரு கட்டும் அளவிற்கு அதிக சம்பளத்தில் அதாவது ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம் இருக்கலாம். ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி பிடிப்பு இருக்கத்தானே செய்யும்?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி