உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இறந்தோரை வைத்து அற்ப அரசியலை த.வெ.க., செய்கிறது: ஆர்.எஸ்.பாரதி

இறந்தோரை வைத்து அற்ப அரசியலை த.வெ.க., செய்கிறது: ஆர்.எஸ்.பாரதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இறந்தோரை வைத்து, அற்ப அரசியல் செய்கிறது த.வெ.க.,' என, தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி கூறினார். அவரது அறிக்கை: கரூர் துயர சம்பவம் நடந்ததும், எந்தவித அரசியலுக்கும் இடம் கொடுக்காமல், பாதிக்கப்பட்ட மக்களுடன், உறுதுணையாக இருந்தவர் முதல்வர் ஸ்டாலின். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உடனே நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. உயர் நீதிமன்றம் அமைத்த, சிறப்பு புலனாய்வு குழு விசாரணையும் நடந்து வருகிறது. இப்படி அனைத்து விசாரணைகளும் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையோடும் நடந்து வருகின்றன. உச்ச நீதிமன்றத்தில், இவ்விவகாரம் தொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளன. அதேசமயம் தற்போது வெளிவரும் உண்மைகள், அதிர்ச்சி அளிக்கும் வகையிலும், நீதிமன்றத்தையே ஏமாற்றும் வகையில் எதிர் தரப்பினர் செயல்பட்டுள்ளதை வெளிக்காட்டுகிறது. இதை எல்லாம் பார்க்கும்போது, இறந்தவர்களை வைத்து, தங்களின் அரசியல் ஆதாயங்களைத் தீர்த்துக் கொள்ள எதிர்க்கட்சியினரும், புதுக்கட்சியினரும் முயற்சிப்பது அப்பட்டமாக தெரிகிறது. இது நீதிமன்றத்தை மட்டுமல்ல, தமிழக மக்களையும் ஏமாற்றும் அற்ப செயல். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Thamarai
அக் 14, 2025 06:38

இதை இவர் சொல்லுவது நகை சுவையாக உள்ளது


D Natarajan
அக் 13, 2025 21:57

அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள்


RAMESH
அக் 13, 2025 20:30

அனிதாவை வைத்து நீட் அரசியல் செய்தது யார் என்று தமிழக மக்களுக்கு தெரியும்.... சாத்தான்குளம் அப்பா மகன் பிண அரசியல்..... கள்ளக்குறிச்சி கள்ள சாராயம்.....


VENKATASUBRAMANIAN
அக் 13, 2025 19:40

இவரெல்லாம் பேசுகிறார்.


sankaranarayanan
அக் 13, 2025 17:31

மாணவர்கள் சும்மா இறந்தால்கூட நீட் பரிட்சையில் எழுத முடியாமல் தேர்வு பெறாததால் இறந்துவிட்டார் என்று அரசியல் செய்து ஆதாயம் தேடியது இவருடைய கட்சிதான் இவர்தான் முழுக்க முழுக்க அதற்கு பொறுப்பு


xxxx
அக் 13, 2025 17:14

தி மு க பண்றது என்னவாம் ....


Sridhar
அக் 13, 2025 14:09

அரசியலுக்காக, பதவியில் தொடரணுமேங்கற வெறியில் அப்பாவி உயிர்களை கொன்ற திருட்டு கும்பல்ல ஒரு ஆள் விடாம ஒவ்வொருவனா கூண்டுல ஏத்தி தண்டனை வாங்கி கொடுக்கவேண்டும். ராஜபக்ஷே குடும்பம் விரட்டி அடிக்கப்பட்டதுபோல் தலை முதல் கால் வரை ஒவ்வொருவனும் வீதிகளில் கழுதை மேல் வலம் வரும்வரை தமிழக மக்கள் ஓயக்கூடாது.


Perumal Pillai
அக் 13, 2025 12:36

சொந்த காரணத்துக்காக இறந்த அனிதா வின் இறப்பை நீட் க்காக இறந்ததாக பொய் சொல்லி அற்ப பிண அரசியல் செய்த யோக்கியர்கள் பேசுகிறார்கள் .


duruvasar
அக் 13, 2025 12:16

திமுகவின் காப்புரிமையை விஜய் ஜோசப் கட்சி மீறி விட்டதாக பிச்சையாப்ப முதலியார் நினைக்கிறாரோ ?


Sridhar
அக் 13, 2025 11:42

These fellows only started this. Read Kannadasan for knowing the truth


புதிய வீடியோ