உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை; தஞ்சாவூரில் கொடூரம்!

அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை; தஞ்சாவூரில் கொடூரம்!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியை ரமணி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி என்பவர் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கு வயது 26. இவர் ஆசிரியை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். பள்ளி வகுப்பறையில் இன்று (நவ.,20) ரமணியை சின்னமனை கிராமத்தை சேர்ந்த மதன் குமார் குத்திக்கொலை செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gurgluvp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மதன் குமாரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியை ரமணியை பெண் கேட்டு சென்ற போது, விருப்பம் இல்லை என கூறியதால், மதன் கொலை செய்ததாக, முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால், வகுப்பறையில் கழுத்தில் குத்தி ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைமையாசிரியர் கடிதம்!

இது குறித்து, தலைமையாசிரியர் வெளியிட்டுள்ள கடிதம்: தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியராக ரமணி 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தமிழ் பாடம் போதித்து வந்தார். இவருக்கு இன்று முதல் பாடவேலையில் வகுப்பு கிடையாது என்பதால் அவர் ஆசிரியர்களுக்கான ஓய்வு அறையில் இருந்தார்.இன்று காலை 10:10 மணிளவில் ஆசிரியர்களுக்கான ஓய்வு அறையின் வரண்டா பகுதியில் சின்னமனையை சேர்ந்த மதன் என்பவர் ஆசிரியை ரமணியுடன் நின்று பேசி கொண்டிருந்தார். எதிர்பாரத விதமாக ஆசிரியர் ரமணியின் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயற்சி செய்தான். அவனை இப்பள்ளியின் ஆசிரியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.ஆசிரியர் ரமணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சை கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துவிட்டார். இது குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் உறுதி

'தஞ்சாவூர் அரசு பள்ளியில் ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியை மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. ரமணியை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்' என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

shreya
நவ 25, 2024 18:53

கானா பாடகி ன்ற பெயரில் மறைந்து இருக்கும் இந்த கிறிஸ்துவ மத போதகரின் முக திரையை கிழிக்க வேண்டும்.


Surya Prakash
நவ 21, 2024 10:09

Tamil


Jay
நவ 20, 2024 23:17

திமகாவுக்கு நேரடியாக தொடர்பு இல்லை எனினும் மறைமுக தொடர்பு உள்ளது. மக்கள் எதார்த்தத்தை பார்க்காமல் உணர்ச்சி பூர்வமாக


MANIKANDAN THANGARAJ
நவ 20, 2024 21:36

தற்பொழுது கொலை என்பது சாதாரணமா ஒன்றாக ஆகிவிட்டது.


AMLA ASOKAN
நவ 20, 2024 19:58

அந்த ஆசிரியையை கத்தியால் குத்தியவன் பள்ளிக்கு வெளியில் வீட்டிலோ ரோட்டிலோ குத்தியிருந்தால் இது ஒரு வெறிச்செயல் சம்பவமாக கருதபட்டிருக்கும் . பள்ளிக்குள் நடந்ததால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என அரசியலாக்கப்பட்டு விட்டது . அந்த பட்டதாரி ஆசிரியை பெண் பார்க்கும் படலத்திற்கு முன்பே அவனை பற்றி தெரிந்தும் பார்த்தும் பிடிக்காவிட்டால் தனது பெற்றோரிடம் சொல்லி அந்த நிகழ்ச்சியை தவிர்த்து இருக்கலாம் . ஆசையுடன் வந்தவனை உன்னை பிடிக்கவில்லை என கேவலப்படுத்தியதால் அந்த கிறுக்கன் , டாக்டரை குத்திய மடையனை போல் , இவனும் குத்திவிட்டான் . டாக்டர் தப்பி விட்டார் . ஆசிரியை இறந்து விட்டார் . ஏற்கனவே எதுவும் தொடர்பு இருந்ததா என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வரும் . வேலையில்லாமையால் இளைஞர்கள் ஆத்திரப்படுகிறார்கள் . நீதிக்குரல் : எப்பொழுதும் எவனையும் ஆத்திரமூட்டாதே


Barakat Ali
நவ 20, 2024 19:12

தமிழக மக்கள் பாவம் ........ பீகார், உ.பி.,போய் பிழைக்கணும் என்றாலும் ஹிந்தி தெரியணும் .....


sankaranarayanan
நவ 20, 2024 18:13

இரும்புக்கரம் கொண்டு போலீசு அடக்கவேண்டும் என்று சொல்கிறார்கள் ஆனால் இரும்பு கத்தியை கரத்தில் கொண்ட இளைஞன் தான் இந்த செயலை செய்து உள்ளான் ஆதலால் இனி இரும்புக்கு பதில் துப்பாக்கி கரம் ஏந்திய காவல்துறை தான் இனி திராவிடத்தை காப்பாற்ற வேண்டும் என்றே கூறுங்கள்


D.Ambujavalli
நவ 20, 2024 17:33

இதே போல் போனால், நாளை ஒரு அலுவலகத்தில், மனுவை திருத்திக்கொடுங்கள் என்று கொடுத்தாலும் குத்தி விடுவார்கள் இனி ஒவ்வொரு இடத்திலும் போலீஸ் நின்றுகொண்டு ஆயுதப் பரிசோதனை செய்த பின்னே உள்ளே விடடவேண்டுமென்ற நிலை நல்ல அரசு, ரொம்ப நல்ல நிர்வாகம்


kalyanasundaram
நவ 20, 2024 17:10

DEATH SENTENCE IS THE ONLY PUNISHMENT THAT TOO TO BE DONE WITH OUT ANY DELAY SINCE THE CULPRIT WILL EACAPE BY BRIBING TO TNE CONCERNED OR WITH POLITICAL INFLUENCE.


R SRINIVASAN
நவ 20, 2024 16:58

இனி பள்ளிக்கோ ,ஆஸ்பத்திருக்கோ ,வீட்டுக்கோ வருபவர்களை உள்ளே விடுவதற்கு முன் அவர்களை பரிசோதனை செய்து அனுப்ப வேண்டும் .இதற்கு அருமையான யோசனையை திரு S.V.சேகர் அவர்களிடம் கேட்டால் சொல்வார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை