உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலாசாரத்தின் தலைநகரம் தஞ்சாவூர் கவுதமானந்த மகராஜ் பெருமிதம்

கலாசாரத்தின் தலைநகரம் தஞ்சாவூர் கவுதமானந்த மகராஜ் பெருமிதம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர், சிவாஜி நகரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு, அகில உலக தலைவர் சுவாமி கவுதமானந்த மகராஜ், நேற்று விஜயம் செய்தார். அவருக்கு, பூர்ண கும்பம் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மடத்தில் பகவான் ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தரின் படங்களுக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபட்டார்.

சுவாமி கவுதமானந்த மகராஜ் பேசியதாவது:

பரதம், இசை, நாடகம் என பல பாரம்பரிய கலைகள் பிறப்பிடமாகவும், அவதார புருஷர்கள், மகான்கள், ஆன்மிகப் பெரியவர்கள், இசை மேதைகள், விஞ்ஞானிகள் என பலரும் இந்த மண்ணில் பிறந்து பெருமை சேர்த்துள்ளனர். இதனால், தான் கலாச்சாரத்தின் தலைநகரமாக தஞ்சாவூர் விளங்குகிறது. பெருமைமிக்க தஞ்சாவூரில் ராமகிருஷ்ண மடம் துவங்கப்பட்டு, சேவைப் பணிகளை செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்களுக்கான சேவை பணிகளை இன்னும் அதிகளவில் தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் செய்து வளர்ச்சி பெறும். பகவான் ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை உபதேசங்களை பின்பற்றி வாழ்வது அவசியம். சோழ மண்டலத்தில் உள்ள சமூக மேம்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்று கூடி, ராமகிருஷ்ண மடத்தின் சேவைப் பணிகளுக்கு துணை நிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஜெகதீசன்
ஆக 31, 2025 13:56

விவேகானந்தரின் நவ-வேதாந்தம் (Neo-Vedanta) நவீன பார்வையாளர்களை மிகவும் கவர்கிறது, ஏனெனில் அது சிக்கலான உலகின் சவால்களை எதிர்கொள்கிறது, அதே நேரத்தில் ஆன்மீக நிறைவிற்கான பாதையையும் வழங்குகிறது அதில் அனைவரையும் இனைத்து கொண்டு செல்கிறது. இது தனிநபர்கள் தங்கள் வாழ்க்கையில் அர்த்தத்தையும் நோக்கத்தையும் கண்டறிய ஊக்குவிக்கிறது, அதே நேரத்தில் சமூகத்தின் நல்வாழ்வுக்கு பங்களிக்கிறது.  


Rathna
ஆக 31, 2025 13:00

ராமகிருஷ்ண மடம் நிறுவனத்திறனால் நடத்தப்படும் பள்ளிகளில் கல்லூரிகளில் படித்த மாணவர்கள் ஒழுக்கத்திலும், கல்வியிலும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மிக பெரிய வேலைகளிலும் உள்ளனர்.


Ramesh Sargam
ஆக 31, 2025 10:31

கலாச்சாரத்தின் தலைநகரம் தஞ்சாவூர் கயவர்கள் திமுகவினரால் சீரழிக்கப்படாமல் ஜாக்கிரதையாக பாதுகாக்கப்படவேண்டும்.


Sundar R
ஆக 31, 2025 10:15

Ramakrishna Mission Schools established by Swami Vivekananda teaches us that alongwith our regular school curriculum, by getting the spiritual knowledge from the Vedas, Upanishads, Gita, Itihas, other ancient Literary works contributed by our ancestors, how to worship daily and how to practice Dharma which is our obligations to our society. If we study in Ramakrishna Mission Schools, we can understand very well about the contents of the above mentioned literature and develop ourselves as useful citizens of our Bharat.


Artist
ஆக 31, 2025 09:25

சட்டிஸ்கர் நக்சல் இலாகாவில் நாராயன்பூர் என்கிற கிராமத்தில் ராமகிருஷ்ணா ஆசிரமம் கல்வி மருத்துவ சேவை கிராம மக்களின் விளைபொருள் மற்றும் உழைப்புக்கு அளப்பரிய சேவை செய்கிறார்கள் …


முக்கிய வீடியோ