| ADDED : டிச 22, 2024 02:06 AM
கேரளாவில் இருந்து இறைச்சி கழிவு மற்றும் மருத்துவக் கழிவுகளை கன்னியாகுமரி மாவட்டத்தில் கொண்டு கொட்டுகின்றனர். ஆளுங்கட்சியும், கூட்டணி கட்சியான காங்கிரசும் இதை கண்டு கொள்ளவில்லை. கோவையில், அல்---உம்மா பயங்கரவாதி பாஷா இறுதி ஊர்வலத்துக்கு, போலீஸ் பாதுகாப்பு அளித்து, அரசு தரப்பில் ஆதரவாக இருந்துள்ளனர். இதற்காக, முதல்வர் ஸ்டாலின் தலைகுனிய வேண்டும்.'நெல்லையில் நீதிமன்றத்துக்கு வெளியே தான் கொலை நடந்திருக்கிறது; அதற்கு போலீஸையோ தமிழக அரசையோ எப்படி குற்றஞ்சாட்ட முடியும் என சட்டத்துறை அமைச்சர் கேட்டிருக்கிறார். சட்டத்துறை அமைச்சராக இருந்து கொண்டு, இப்படி பொறுப்பில்லாமல் பேசக்கூடாது. அந்த பொறுப்புக்கே அவர் தகுதியற்றவர். பொன்.ராதாகிருஷ்ணன்பா.ஜ., மூத்த தலைவர்